"என்னடி ராதா கல்யாணம் ஆகி 4 மாதம் ஆச்சு எப்படி இருக்கு சென்னையும், உன் திருமண வாழ்க்கையும் எப்படி இருக்கு?"
"நல்லாயிருக்கும்மா"
"உம்புருஷன் சென்னையிலேயே 10 வருசமா இருக்கிறாரு உன்னைய ஊர் சுத்திக்காட்டறாரா?"
"ம்.. அதுக்கென்னம்மா குறை நான் கேக்கமலேயே வெளியே கூட்டிட்டுப்போய் நிறைய சுத்திக்காட்டுகிறார்"
"சம்பளம் எல்லாம் உன் கையில தராரா இல்ல அவரே வெச்சிக்கிறாரா?"
"எல்லாம் ஏடிஎம் கார்டுதான்ம்மா"
"என்னடி. அம்மாவும், மகளும் பேசிகிட்டே இருக்கீங்க? சீக்கிரம் கோழிய அடிச்சு குழம்பு வையுங்க மத்தியானம் மருமகன் அவர் சிநேகிதன் வர்றாராம்"
"சும்மா கத்தாதீங்க மருமகன் முன்னாடியே சொல்லிட்டாரு!"
"ஏன்டி சிரிக்கிற?"
?இல்லம்மா எம் புருஷன் காலைல 5 மணிக்கு எழுந்து எக்ஸர்சைஸ் எல்லாம் முடிச்சிட்டு 5அரை மணியில் இருந்து வீட்டு வேலை, சமையல் வேலை எல்லாம் எனக்கு ஒத்தாசையா இருப்பாரும்மா"
"மாப்பிள்ளை சமைப்பாராம்மா?"
"ம்.. என்ன நச்சரிக்கமா அவரே சாப்பாடு எடுத்து வைச்சு டைமுக்கு புறபட்டுருவாரு.. மாலை வந்தது துணிகளை எல்லாம் எடுத்து வாசிங்மெசின்ல போட்டு அவரே காயவைச்சு எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்வாரும்மா"
"இந்த சுத்து வட்டாரத்துல எத்தனை பேரை விசாரித்து இந்த மாப்பிள்ளைய உனக்கு கட்டி வெச்சோம்! நாங்க புடிச்ச மாப்பிள்ளைன்னா சும்மாவா!! கேக்கவே சந்தோசமா இருக்கு ராதா!!!"
"போம்மா எம்புருஷன் என்னை சோதிக்கிறாரும்மா?"
"என்னடி சொல்ற?"
"ஆமாம்மா இவரு ஆபீஸ் விட்ட நேரா வீட்டுக்கு வந்தருவாரு குடி, சிகெரெட், தண்ணி என எந்த பழக்கமும் இல்ல அவருகிட்ட குறையே கண்டுபிடிக்க முடியலம்மா?"
"இப்படி ஒருத்த கிடைக்கரதுக்கு கொடுத்து வச்சிருக்கனும் ராதா!"
"போம்மா. ஒரு பொண்டாட்டிக்கு, புருஷனை ஆட்டிவைக்கணும், புருஷன் செய்யற தப்பைக் கண்டுபிடிச்சு வசைபாடணும், காதைத்திருகி குட்டி வைக்கணும்னு... இப்படியெல்லாம் ஆசை இருக்காதா?! இப்படி என் ஆசை எதையுமே நிறைவேற்றிக்க முடியாம இவர் என்னை ஒரேயடியா இப்படி சோதிச்சா எப்படி?!’’
சங்கமேஷ்,
ReplyDeleteஏன் சாமி இந்த கொலைவெறி!
ஒருத்தன் நல்லவனா இருக்கிறது ஒரு குத்தமாய்யா!
நல்ல கதை
ReplyDeleteஅருமையான கணவன்
வியப்புத் தந்த கதை. நல்லவனாக இருப்பதுகூட ஆபத்தோ... இக்கால பெண்களின் மனநிலை!
ReplyDeleteசரி தான்
ReplyDeleteஓ.. கணவனே கண் கண்ட தெய்வம்.... சரி தானே...
ReplyDeleteநம்ம தளத்தில்:
சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி
போம்மா. ஒரு பொண்டாட்டிக்கு, புருஷனை ஆட்டிவைக்கணும், புருஷன் செய்யற தப்பைக் கண்டுபிடிச்சு வசைபாடணும், காதைத்திருகி குட்டி வைக்கணும்னு... இப்படியெல்லாம் ஆசை இருக்காதா?! இப்படி என் ஆசை எதையுமே நிறைவேற்றிக்க முடியாம இவர் என்னை ஒரேயடியா இப்படி சோதிச்சா எப்படி?!’’//
ReplyDeleteஎட்றா அந்த வீச்சருவாளை வீசிப்புடுதேன் வீசி என்னா ஒரு வில்லத்தனம்...???!!!
இதுவும் சரிதான்.. :)
ReplyDeleteஎன்ன கொடுமை இது?
ReplyDeleteஇப்படி வேற இருக்கா???? நாம நல்லவன் மாதிரி அவசியமே இல்ல போல...
ReplyDeleteரொம்ப கஷ்டம்தான்.
ReplyDeletehttp://www.youtube.com/watch?feature=player_embedded&v=YR12Z8f1Dh8#!
ReplyDeleteமேடுபள்ளம் இல்லா வாழ்க்கை .....இது
ReplyDeleteகற்பனை தானே .
பாவம்...யாரோ நல்ல மனுஷன் !
ReplyDeleteவித்தியாசமான பதிவு.
ReplyDeleteசார் அது நீங்க இல்லையே???
ReplyDeleteஇப்பிடில்லாம் ஆரம்பிச்சாச்சா?பாவம்..யார் பெத்த புள்ளையோ??
அடிங்...கொய்..ய்யால நல்ல ஆசைதான் போங்க
ReplyDeleteஎன்னை போல நல்லவன் போலிருக்கு
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteகவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு
Nallarukku.
ReplyDeleteTM 8.
ReplyDeleteஇப்படியும் ஒரு மனைவி“னு தலைப்பு வச்சிருக்கணும்...
ReplyDelete