Wednesday, January 8, 2014

ஏன்டா, மச்சி கோவிச்சுகிட்டியா?


எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு புதிதாக என்னுடன் பணிபுரிபவர்களை சீக்கிரம் நண்பனாக்கும் வித்தை எனக்கு உண்டா என்று தெரியாது, ஆனால் எல்லோரும் என்னுடன் நட்பாகிவிடுவார்கள்.

அப்போது தான் நான் முதலில் ஐடி கம்பெனிக்குள் நுழைகிறேன் அப்போது நிறைய நண்பர்கள் எப்போதும் போல எனக்கே அதிகம். எல்லோரிடமும் சகஜமாக பேசுவதும் வார இறுதியில் ஒன்றாக ஒரு  விடுதியில் சரக்கு அடிப்பதும் வழக்கமான ஒன்று.

புதிதாக அலுவலகத்திற்கு வந்த சரண் அப்போது தான் அறிமுகம் அதிகம் பேசியதில்லை இருவரும், ஆனாலும் கோபியில் படித்ததால் கொஞ்சம் நெருங்கியி நட்பு வட்டத்தில் வந்துவிட்டான். கோபியை பற்றியும், எங்களது பள்ளியை பற்றியும் பேசிக்கொள்வோம். பாரியூரின் அழகையும், வள்ளி தியேட்டரில் பாட்ஷா படம் பார்த்ததை பற்றி கூட விளக்கமாக பேசுவோம்.

அன்பு பவன் ரவா தோசையும், டவுன் பிரியாணியின் பிரியாணி வாசத்தைப்பற்றியும் பேசிய நாங்கள் தேர்வீதியின் நடைபாதை கடையின் தட்டுவடையை பற்றியும், அங்கு கிடைக்கும் காரப்பொறியும், மசாலா வடை  என  தீனி தின்னும் படலம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

என்னைப்போலவே தேடி தேடி திண்பதில் அவனுக்கும் அலாதி விருப்பம் அதையே கோவையிலும் தொடர்ந்தோம். அப்புறம் கோபியில் உள்ள ஈரோடு பிஸ்கட் பேக்கரி பற்றியும் அங்கு கிடைக்கும் நெய் பிஸ்கட் பற்றி பேசிய அவன் தினமும் 100 கிராம் நிச்சயம் சாப்பிடுவேன் என்றான். அந்த பிஸ்கட் பேக்கரி பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் அந்த அளவிற்கு சுவையும் மனமும் கொண்ட பேக்கரி நிச்சயம் கோபியை விட்டு சென்றவர்கள் எல்லாம் அந்த சுவையை தவற விட்டுவிட்டார்கள் என்று அடிச்சு சொல்லலாம்.

ஒரு வார இறுதியில் ஊருக்கு போகமல் இங்கேயே இருந்ததால் கோவையை சுற்ற கிளம்பினோம் அப்போது தான் 1000 ரூபாய்க்கு செருப்பு வாங்கி அந்த செருப்புக்கு பெருமை சேர்த்தான். மதியம் அஞ்சப்பரில் சாப்பிட்டு விட்டு எல்லோரும் ஊரைப்பற்றியும் பிகர் பற்றியும் பேச ஆரம்பித்தோம்.

அவனும் கோபியில் படித்ததால் நான் எனக்கு தெரிந்த எங்கள் கால கட்ட்த்தில் மிக பேமஸ் ஆக இருந்த கண்மணி பற்றி பேச அவன் அவுங்க எனக்கு நன்றாக தெரியும் நிறைய பேர் ரூட் போட்டாங்க,  நானே லட்டர் கொண்டு போய் கொடுத்திருக்கிறேன் என்றான். என்ன நீ லட்டர் கொடுத்தாயா என்றதும் இல்லங்க என்கிட்ட கொடுத்து கொடுக்க சொல்வாங்க என்றான்.

அப்புறம் என் சைட்டப்பத்தி சொன்னேன் அவள் ரொம்ப கலர் இல்லப்பா ஆனாலும் கண்களும், மூக்கும் எனக்கு மிக பிடிச்ச ஒன்று, செம்ம கட்டை என்று சொல்ல இயலாது ஆனாலும் வலிப்பான உடற்கட்டு, ஒன்றைக்கண்ணு போல இருக்கும் ஆனால் ஒன்றை கண் அல்ல, அந்த புளுகலர் பேக்கை நெஞ்சோடு அளுத்தி கொண்டு போவாள், நான் தான் அந்த புளு பேக் என்று நினைத்து பொங்கிய காலம் அது. லவ்வச்சொன்னியான்னு குறுக்கு கேள்வி வந்தது, சொன்னேனப்பா பட் உன்னை எனக்கு பிடிக்க வில்லை என்று சொல்லிடுச்சு அந்த கருவா பொண்ணு.

அவளுக்கு பிடிக்க வில்லை என்றால் என்ன எனக்கு பிடிச்சிருக்கே என்று விடாமல் முயற்சி செய்து என்னை திரும்பி பார்க்க வைத்தேன், அந்த கருப்பு வைரத்தை, என்னைப்பார்த்து நின்று சிரித்து விட்டும், அடுத்த சில நாட்களில் டாட்டா காட்டும் அளவிற்கு சென்றது என் காதல். ஒரு வெள்ளிக்கிழமை பச்சமலை கோயிலுக்கு போய்விட்டு படிக்கட்டு வழியாக வரும் போது காதலை சொன்னேன், அவ்வளவு பிடிக்குமா என்னை என்று கேட்டுவிட்டு, பட் எனக்கு பிடிக்கலப்பா என்று துள்ளி குதித்து ஓடிவிட்டாள். அடிக்கள்ளி இந்த துள்ளளுக்காகத்தானடி துரத்துகிறேன் உன்னை என்பதை அறியாமல் போய்விட்டாள்.

அப்புறம் பார்வையிலே போய்விட்டது பாதிநாட்கள், பேசுவதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது அதற்குள் அவுங்க வாத்தியார் அப்பாவிற்கு மாறுதல் கிடைச்சு ஈரோட்டுக்கு போய்ட்டாங்க நானும் மறந்திட்டேன், அட அந்த வைரத்து பேர் சொல்ல மறந்திட்டனே அந்த கருப்பு தேவதையின் பெயர் சுபா, அப்புறம் ஒவ்வொருவராக கலைந்து அன்றை பொழுதை போக்கும் போது நானும், ரவியும் இருந்தோம் சிறிது நேரத்தில் ரவிக்கு போன் வந்தது எடுத்தால் சரண், என்னடா என்றால், இனி சதீசை அவனை என்னோடு பேசவேண்டாம் என்று சொல் என்றான்.

ஏன் மச்சி கோவிச்சிகிட்டியா, இன்னிக்கு சரக்கு சாப்பிடவில்லை என்று?

இல்லடா !

சதீஸ் என்னை ரொம்ப கடுப்பாக்கிட்டான் !!

என்னடா செய்தான்? காலையில் இருந்து நானும் தானே உங்க
கூட இருக்கேன் !

இல்லடா ரொம்ப கடுப்பாயிட்டேன் !!

ஏன் மச்சி இப்படி சொல்ற?

அடேய் அவன் 8 வருசத்துக்கு முன்னாடி துரத்தி துரத்தி சைட் அடிச்சேனே அந்த சுபா !!

ஆமா அதுக்கு என்னடா இப்ப ?

"அது, அது தான் மச்சி என் சுபா" !!

10 comments:

  1. ஹா... ஹா... பாவம்ங்க நண்பரு...!

    ReplyDelete
  2. ஹய்ய்ய்யோ.. ஹய்ய்ய்ய்யோ..

    ReplyDelete
  3. என் கமெண்ட்டைக் காணோம். திரும்பவும் சொல்லிக்கிறேன்.

    ஹய்ய்ய்யோ.. ஹய்ய்ய்ய்ய்யோ..

    ReplyDelete
  4. அது சரி.... நண்பேன்டா... ஹா... ஹா... சூப்பரு...

    ReplyDelete
  5. சரக்கு இல்லாம ஒரு வாழ்க்கையான்னு, தான் கேட்ட குரங்கு வனத்தையும் கெடுக்குது.
    குடிக்கிறவன் மட்டும்தான் எல்லோரிடமும் நடப்ப இருக்க முடியும்ன்னு புது தத்துவமே சொல்லிட்ட

    ReplyDelete
  6. முடிவை யோசிக்க முடிந்தது - பாதி கதைக்குப் பிறகு! :)

    ReplyDelete