2014யை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிக்குவோம்...
வணக்கமுங்க...
2013 முடிஞ்சு நாலு நாள் ஆச்சு ஆனா பாருங்க ஒரு வாழ்த்து சொல்லி பதிவு போட முடியவில்லை அந்த அளவிற்கு சோம்பேறித்தனம் தலை தூக்கிவிட்டது. இந்த சோம்பேறித்தனம் எனக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு வந்துவிட்டது. அந்த அளவிற்கு இப்போது வரும் பதிவுகள் குறைந்து விட்டன.
2013ல் நான் சாதித்தது என்னவென்றால் நிறைய முக்கியமாக எனக்கு இருந்த கடனில் பாதியை அடைத்துவிட்டேன் என்பது தான் என் நினைவில் வருகிறது. அடுத்து என் மகனை பள்ளியில் சேர்த்தது. அப்புறம் என் கிறுக்கல்களை புத்தகமாக்கியது என சொல்லிகிட்டே போகலாம்.
2013ல் நான் இழந்ததும் நிறைய முக்கியமாக வலைப்பதிவில் வந்து எழுதுவது மிக குறைந்து போனது ஆனால் வாசிப்பு பழக்கம் மட்டும் தொடர்ந்தது. வலைப்பக்கத்தில் எழுதுவது ஒரு காதல் என்றே சொல்லவேண்டும் நாலு வரி எழுதினால் போதும் முகநூலில், ஆனால் இங்கு அப்படி அல்ல கற்பனை குதிரையை ஓட விட்டு ஒரு கட்டுரை அளவிற்காகவது எழுதவேண்டும் அப்போது தான் முற்றுப்பெறும் ஒரு பதிவு. சோம்பேறித்தனத்தால் எழுதவில்லை என்பது தான் உண்மை எனக்கு நிறைய நேரம் கிடைக்கும் எழுதுவதற்கு என்பது என் நெருங்கியவர்களுக்கு தெரியும்.
அடுத்து 2014ல் சபதம் எல்லாம் நான் எடுக்கவில்லை ஏன்என்றால் என் சோம்பேறித்தனம் என் சபதத்தை குலைத்துவிடும் என்று எனக்கு நன்றாக தெரியும். குறைந்தபட்சம் முயற்சி செய்யவேண்டும் தினமும் எழுத, தினமும் எழுதுவதால் நம் எழுத்து புதிய பரிணாமம் பெறும் என்பது தான் உண்மை நடக்குமா என்றால் சாத்தியம் குறைவுதான்.
2014யை பொறுத்தவரை எனக்கு மிக முக்கிய வருடம் நிறைய பிரச்சனைகளை சந்திக்க போகிறேன் என்று நன்றாக தெரிகிறது முக்கியமாக கடன் பிரச்சனை மே மாதத்திற்குள் முடித்துவிட வேண்டும் என தீயாக வேலை செய்கிறேன்.
அடுத்து மனஅமைதிக்காக நிறைய படிக்கவேண்டும், நிறைய எழுதவேண்டும் என்றும் தீயாக வேலை செய்யனும், தினமும் எழுத ஆரம்பித்தாலே மனம் பூரண அமைதிகிட்டும் என்று என் குரு இன்று தான் சொன்னார்.
சரிங்க எழுதியே ஆகனும் என்று என்னை கட்டாயப்படுத்தி உட்கார்ந்து எழுதினேன் இந்த மொக்கை பதிவை..
இனி அடிக்கடி வரும் எனது சீரிய மொக்கை என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்...
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....
என்றும் அன்புடன்
சங்கமேஸ்வரன் @ சதீஸ் சங்கவி...
வணக்கம்
ReplyDeleteசிறப்பாக உள்ளது மேலும் தொடர வாழ்த்துக்கள்
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புத்தாண்டு வாழ்த்துக்கள்... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரூபன்...
Deleteபுத்தாண்டிற்குத் தங்களை வருக வருக என அன்போடு வரவேற்கின்றேன் தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி கரந்தை சார்...
Deleteபதிவர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி கொண்டே இருக்கவேண்டும் வலைத்தளங்கள்தான் நாளிதழ்களுக்கு மாற்று. அவர்கள் வெளியிடாத செய்திகள் மறைக்கும் செய்திகள் எல்லாம் இந்த வலைத்தளங்கள் மூலம் வெளியிடப்படவேண்டும். நாளிதழ்கள் சில செய்திகளை மீண்டும் மீண்டும் போட்டு மக்களை மூலைச் சலவை செய்து இது மக்களின் கருத்து என்று பரப்பி வருகின்றன. அப்படி அவைகள் செய்வதில் மாற்றம் ஏற்படுத்த வலைத்தளங்களால்தான் முடியும் அதனால்தான் எல்லோரும் தங்களுக்கு தெரிந்த செய்திகளை கருத்துக்களை வெளியிட வேண்டும் அதனால் உங்கள் கருத்துக்களை உங்கள் எழுத்துகள் மூலமாக உங்கள் வலைதளத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவு செய்யுங்கள்
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் எனது கருத்துக்களை நேரத்தை உருவாக்கி...
Deleteஇந்த ஆண்டு தீயாக வேலை செய்து, எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteயார் அந்த குரு...?
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.. அந்த குரு சஸ்பென்ஸ்...
Deleteதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவெல்கம் பேக்..!
ReplyDeleteஎல்லா பிரச்சினைகளும் புத்தாண்டில் தீரட்டும்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா...
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! தொடர்ந்து உங்கள் எழுத்துக்கள் சிறக்க வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteதீயாக வேலை செய்யுங்கள் அண்ணாச்சி.
ReplyDeleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சங்கவி.
ReplyDeleteபுத்தாண்டில் இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்.