Tuesday, July 24, 2012

கிராமத்து மனசு... 3

 
 
"ம்ம கிழக்கத்து வீட்டு செங்காத்தி மக ஓடிப்போயிட்டாளாம்!"

"என்னடி சொல்ற பாவாயி?"

"அட நெசத்தைத்தான் சொல்றேன் அம்மணிக்கா"

" குனிஞ்ச தல நிமிராம நடப்பாளே, அவளா?"

"அட ஆமாங்கர! ... சும்மாவா  சொன்னாங்க ஊமை ஊரைக் கெடுக்கும்ன்னு"

"அதுதான,  அவள தங்கமான பொண்ணுன்னு  நினைச்சிருந்தேனே!  கூட்டிட்டுப் போனது யாராம்?"

"தெரியலக்கா, நானும் அதத்தான் கேக்கற ஒரு பய புள்ளைக்கும்  தெரியல"

" எதுனாச்சும் அசலூரு   பசங்களா இருப்பாய்ங்களோ " ?

" இருக்கலாம். அட என்னக்கா இது அங்க பாருங்க போலீஸ் ஜீப் வருது. ஒரு வேளை கேசு கீசு  கொடுத்திருப்பாய்ங்களோ ?

"ஆமாண்டி! பொம்பள போலீசில்ல வருது"

"
ம்மா இங்க யாரு பாவாயி?"

" ஏனுங்க நாந்தானுங்க., ஏ...ஏ... கேக்கறீங்க! "

"உம்மகந்தான பாஸ்கரு"?

"ஆமா"

"அவன் ஒரு புள்ளைய  கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து பாதுகாப்பு கேக்கறான், அதைப் பத்தி விசாரிக்கோனும் வாங்க ஸ்டேசனுக்கு!"

"அய்யய்யோ  எம்மவனா அப்படி செஞ்சவன்? "
 " போய் என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு போலீசுகாரங்க சொல்றத கேட்டுக்கிட்டு அதன்படி நடக்கிற  
வழியப் பாரு பாவாயி!" என்று சொல்லிவிட்டு...

"டியே, உம் மவனுக்கு நிறைய வரதட்சணை சீர் செனத்தியோடு பசையுள்ள இடமாக் கிடைச்சாத்தான்ஆச்சுன்னு உன்னோட  விருப்பத்திலேயே குறியா இருந்த நீ நல்ல மனசு, பழக்க வழக்கங்களை கொண்டிருக்கிற பொண்ணா தேடத் தவறிட்ட. ஆனா ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பே வாழப் போகிற வாழ்க்கைக்கு தேவையான மூலதனம்னு அவங்க இருவரும் நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க. இதுக்கு நீ நிச்சயம் ஒத்துக்க மாட்டேங்கறதாலதான்  அந்த ஏழைப் பெண்ணை  கூட்டிட்டுப்  போய் கல்யாணம் செஞ்சுக்கிட்டு போலீஸ் ஸ்டேசனுக்கு போடான்னு சொன்னவரு என் புருஷந்தா " என்று மனசுக்குள் சொல்லிக்  கொண்டே அவளுடைய வீட்டுக்குப் போனாள் அம்மணி".

----------------------------------

இது எனது மீள் பதிவு.. கிராமத்து மனசுக்கு சரியாக இருக்கும் என்பதால் மீண்டும்...

11 comments:

  1. கிராமிய நடை
    யதார்த்தமான சொல்லாக்கங்கள்

    அருமை தொடருங்கள்

    ReplyDelete
  2. அசத்தலான எழுத்து நடை!

    ReplyDelete
  3. படைப்பில் மண்மணம் கமழுகிறது.
    நல்ல படைப்பு.
    இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  4. நல்ல எழுத்து நடை... ரசித்தேன்... தொடர்ந்து எழுதுங்கள்.. (இதே போல்)


    நன்றி. (த.ம. 3)

    ReplyDelete
  5. ஒரு கிராமிய நடை கண் முன் காட்சிகள் அரங்கேறுது ..............சுவை மிகு வர்ணனை .........

    சமூகத்தின் அக்கறை ............அற்புத கலவை

    ReplyDelete
  6. மண் மணம் கமழும் சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. மண் மணக்கும் நல்ல கதை.

    ReplyDelete
  8. படைப்பில் மண்மணம் கமழுகிறது.
    நல்ல படைப்பு.
    இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  9. கதை அருமையாக இருக்குது..

    ReplyDelete