Wednesday, February 29, 2012

அஞ்சறைப்பெட்டி 01/03/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
 
கூடங்குளம் விவககாரம் தான் மக்கள் மத்தியில் அதிகம் ஒலிக்கிறது காரணம் எல்லா ஊர்களிலும் மின்சாரம் தடை. கூடங்குளம் இயங்கினாலும் முழுஅளவில் மின்சாரம் தர இயலாது என்பது தான் உண்மை ஆனால் கூடங்குளம் இயங்காத காரணத்தால் தான் மின் தடை ஏற்பட்டுள்ளது என்று சொல்லி சொல்லியே மக்களின் ஆதரவை அரசு அமோகமாகப் பெருவர்.
...............................................................................................

கூடங்குளம் விவகாரத்தில் இன்னும் முதல்வர் மௌனமாக இருப்பது ஏனோ.. ஒரு வேளை சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த பின் அம்மாவின் அடுத்த அதிரடி இந்த விவகாரமாத்தான் இருக்கும்...
...............................................................................................

சண்டிகார் மாநிலம், குருஷேத்ரா மாவட்டம் சுனாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் கரம்பிர்சிங் (வயது 44). விவசாயியான இவர், உயர் ரக காளை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த காளைக்கு யுவராஜ் என்று பெயர் வைத்துள்ளார். இந்த காளை மூலம் கரம்பீர் சிங்குக்கு லட்சம் லட்சமாக வருமானம் கிடைக்கிறது.

ஆச்சரியமாக இருக்கிறதா?. மாதம் ஒன்றுக்கு ரூ.1.5 லட்சம் வரை உரிமையாளருக்கு இந்த காளை வருமானம் ஈட்டித்தருகிறது. இதன் உயிரணு விற்பனை மூலம் இவ்வளவு வருமானம் கிடைக்கிறது. உயர் ரக காளை என்பதால், இதன் உயிரணுவுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த 8 மாதத்தில் மட்டும் உயிரணு விற்பனை முலம் ரூ.12 லட்சம் சம்பாதித்துள்ளது.

இந்த காளை விலங்குகள் கண்காட்சியில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் வென்றுள்ளது. ஆந்திர மாநிலம், கர்னலில் நேற்று முன்தினம், தேசிய பால் பண்ணை ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விலங்குகள் கண்காட்சி நடந்தது. இதில் காளை யுவராஜ், சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டு, ரூ.24 ஆயிரம் பரிசு அளிக்கப்பட்டது. அதே போல், ஹிஸாரில் நடந்த கண்காட்சியிலும், ரூ.16, ஆயிரம் பரிசு வென்றது.

இதுபற்றி, இந்த காளையின் உரிமையாளர் கரம்பீர் சிங் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் காளை யுவராஜிடம் இருந்து உயிரணுக்கள் எடுக்கப்படுகிறது. இதுவரை 5000 டோஸ் உயிரணுக்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு டோஸ் உயிரணு ரூ.300-க்கு விற்கிறேன். உத்தரபிரதேசத்தை சேர்ந்த உயிரணு வங்கியை சேர்ந்த உரிமையாளர் ஒருவர், இந்த காளையை ரூ.1 கோடிக்கு வாங்கி கொள்வதாக கூறினார். ஆனால் கொடுக்க நான் மறுத்துவிட்டேன்.

பரிசுகள் வெல்வதன் மூலம், உயிரணுக்களை விற்பனை செய்வதன் மூலமும் சம்பாதிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 
................................................................................................

இடைத்தேர்தல் வெற்றி அனைவரும் அறிந்ததே இருந்தாலும் இம்முறை திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளதால் மக்களின் பார்வையும் இப்போது அங்கே தான் இருக்கிறது. ஆனால் இந்தமுறை மதிமுக கணிசமான ஓட்டுகள் வாங்கும் என்று எதிர்பார்க்கலாம். கணிசமான ஓட்டுக்கள் வாங்கினால் தான் பாரளுமன்ற தேர்தலில் கணிசமான சீட்டுகள் வாங்க முடியும்.

................................................................................................

மின்சார பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுவது கிராமத்து விவசாயிகள் தான் நகரங்களில் அறிவிக்கப்பட்ட மின்வெட்டுக்கள் இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் மின்சாரம் இருக்கும் நேரத்தை விட இல்லாத நேரம் தான் அதிகமாக இருக்கிறது. தண்ணீர் பாய்ச்சுவதற்கு போதிய மின்சாரம் இல்லாததால் மிகவும் அவதிப்படுகின்றனர்..

...............................................................................................

இலங்கை போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஐக்கிய நாடு மனித உரிமைகள் கவுன்சில் அமெரிக்க ஆதரவுடன் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்பதுடன், இலங்கைக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியதற்கு நன்றி... தவறு செய்தவர்கள் தண்டனையை அடைந்தே தீரவேண்டும் அந்த வகையில் இவர்களுக்கு தண்டனைக்கு கிடைக்குமா ? பொறுத்திப்போம்...
..................................................................................................

சீனாவில் உள்ள நகரங்களில் ஆண்களுக்கு அதிக அளவில் பொது கழிவறைகள் உள்ளன. பெண்களுக்கு மிக குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் கழிவறைக்கு செல்ல பெண்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவலம் உள்ளது. இதற்கு பெண்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று ஆண்களின் கழிவறையை கைப்பற்றும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். அவர்கள் ஆண்கள் கழிப்பறையை கைப்பற்றி முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள். கையில் 'பேனர்'களை தாங்கி இருந்தனர். அதில் 'ஆண்கள் நேசிப்பதாக இருந்தால் கழிவறைக்கு செல்ல எங்களை காக்க வைக்காதீர்கள்' என எழு தப்பட்டிருந்தது.


இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பு குவான்ஷு நகரில் இப்போராட்டம் நடந்தது. இதை தொடர்ந்து அங்கு ஆண்களைப் போன்று பெண்களுக்கும் கூடுதலாக கழிவறைகள் கட்டப்பட்டு வருகிறது.
..................................................................................................

 
ரொம்ப நாட்களுக்கு அப்புறம் சமீபத்தில் தான் இந்திய இலங்கை கிரிக்கெட் போட்டியைப் பார்த்தேன் 40 ஓவரில் 320 ரன்கள் அடிக்க வேண்டும் என்று சொன்னதால் 20/20 மேட்ச் போல் இருக்கும் என்று ஆவலுடன் ஓடி ஓடி மேட்ச் பார்த்தேன்.. நான் எதிர்பார்த்தபடியே நம் கோலி அடித்த அடியில் உற்சாகம் கரைபுரண்டது.


தகவல்
 
 
ஆழ்ந்த உறக்கத்துக்காக சிலர் தூக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் உயிரை பறித்து விடும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 23,500 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர் களில் 10,500 பேர் தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள்.

தூக்க மாத்திரை சாப்பிட தொடங்கிய 2 1/2 வருடத்தில் பலவிதமான நோய்களுக்கு ஆளாகினர். இவர் களில் 35 சதவீதம் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக 18 முதல் 55 வயதுக்குட் பட்டவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூக்க மாத்திரைகள் சாப்பிடும் அளவை பொறுத்து அவர்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


எனவே, தூக்க மாத்திரைகளை எடுத்து கொள்வது உடல் நலத்துக்கு ஆபத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்துபவர்கள் தங்களது டாக்டர்களின் அறிவுரையை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக வஜிர் அலியின் கவிதைகள் பெயரில் எழுதி வருகிறார். இவரின் கவிதைகள் அனைத்தும் சமூக கண்ணோட்டத்தோடு இருக்கின்றன அனைவரும் படிக்க வேண்டிய கவிதைகள்...
http://vazeerali.blogspot.in/

 
தத்துவம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை


யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.

6 comments:

  1. ///யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து. ///


    punchchu superoooo spuper bro

    ReplyDelete
  2. தூக்க மாத்திரை :((.

    Useful post about sleeping pills.

    Ammaavai romba nambureenga Sangavi.

    ReplyDelete
  3. எனக்கு அரசியல் கொஞ்சம் அலர்ஜி.. அது தவிர்த்து பதிவு நல்லாயிருக்கு..

    ReplyDelete
  4. தகவல்கள் அருமை..கடைசி நச்!

    ReplyDelete
  5. கூடங்குளம் விவகாரத்தில் இன்னும் முதல்வர் மௌனமாக இருப்பது ஏனோ.. ஒரு வேளை சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த பின் அம்மாவின் அடுத்த அதிரடி இந்த விவகாரமாத்தான் இருக்கும்...

    அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  6. அருமையான தத்துவம் சதீஷ்.சிறப்பான பதிவு.

    ReplyDelete