Monday, June 28, 2010

உடல் ஆரோக்கியத்திற்கு மூச்சுப்பயிற்சி


ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்று விநாடி கழித்து இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்தக் கை மேலே உயருகிறது? அடிவயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான். இதுதான் உண்மையாக மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.

எந்த வயதுக்காரரும் தரையில் தலையணை எதுவுமின்றி படுத்துக் கொண்டு இப்படி வயிற்றிலும் நெஞ்சிலும் கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால், நுரையீரல்களின் கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன் கிடைக்கும்.இதனால் எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.

ஆனால், 100க்கு 99 பேர் நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள். குப்பை அள்ளும் லாரி போகும் போதும், வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர் விடும் மூச்சு நாற்றம் முதலியவற்றைக் தடுக்க மூச்சையும் மூக்கையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறோம் அல்லவா, அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை. உலகில் இப்படிச் சுவாசிப்பவர்களே அதிகம். நெஞ்சினால் சுவாசிப்பவர்கள் உலகில் 99 சதவிகிதம் பேர்களாம். ஆனால் இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே! இது எப்படி? ஆனால் இவர்கள் மூச்சுவிடுதல் தொடர்பான நோய்களைப் பெற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். சரியாக மூச்சுவிடத் தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில் அங்கங்கே வலிகளும் காய்ச்சல் வகைகளும் எட்டிப் பார்க்கும்.

பிராணாயாமம் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடங்கள் மாலையில் ஐந்து நிமிடங்கள் என தரையில் படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும். எரிச்சல் வராது. பிறர் மேல் எரிந்து விழமாட்டீர்கள்.

அடுத்து ஆஸ்துமா, இதயநோய், ஒற்றைத்தலை வலி, காக்காய் வலிப்பு போன்ற நோய்கள் கட்டுப்படும். இந்த நான்கு நோய்களும் சரியாக மூச்சு விடத் தெரியாதவர்களுக்குத்தான் வருகின்றன என்கிறது கொலராடோவின் பெளல்டரில் உள்ள சர்வதேச மூச்சுப்பயிற்சி நிலையம்.

தரையில் படுத்துக்கொண்டு இப்படி ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொண்டால் நுரையீரல்களின் கீழ்ப்பகுதிகளுக்கும் நன்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால் மனமும் உற்சாகமாக இருக்கும். நல்ல இரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் கிடைத்து விடுவதால் வாழ்நாளும் நீடிக்கிறது.

ஒரு நிமிடத்திற்கு எட்டு முதல் 14 முறையே சராசரி மனிதன் மூச்சுவிடுகிறான். ஆனால் நுரையீரல்களுக்கு நன்கு காற்று கிடைக்காதவர்கள் 20 தடவைக்கு மேல் சுவாசிக்கிறார்கள். இதேபோல் ஆண்கள் பெல்ட்டுகளை இறுக்கி அணிந்தாலும் பெண்கள் நாடாக்களை இறுக்கிக் கட்டினாலும் நன்கு மூச்சுவிட முடியாது. சேலை, வேட்டி, பேண்ட் என அனைத்தும் வயிற்றை அதிகம் அழுத்தாமல் இருக்குமாறு அணிய வேண்டும்.

மூச்சுவிடும் முறையை நன்கு கற்றுக்கொண்டால் மூளையையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இரத்தத்தில் காடித் தன்மையும், காரத்தன்மையும் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி உதவுகிறது.

முதல் பயிற்சி :
நேர்காணலுக்குச் செல்லும் போது இந்த முறையில் 5 நிமிடங்கள் சுவாசித்துவிட்டுப் புறப்பட்டால், நேர்காணலின் போது பதட்டம் ஏற்படாது. திடீர் இரத்தக்கொதிப்பு, ஸ்டிரோக் போன்றவற்றை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இரண்டாவது பயிற்சி :
சம்மணமிட்டு உட்காருங்கள். மூக்கினால் மூச்சை இழுத்துக் கொள்ளுங்கள். பிறகு வாயைத் திறந்து அதை வெளியேற்றுங்கள். அடுத்து மூச்சை இழுக்காமல் தொடர்ச்சியாக ஊ…ஊ… என்று காற்றை ஊதுங்கள். இதற்குப் பிறகு முன்பு செய்தது போல மூக்கினால் இழுத்து வாயினால் வெளியேற்றி கடைசியல் ஊ….ஊ…. என்று ஊதுங்கள். மூன்று முறை இது போல் செய்யுங்கள்.

மூன்றாவது பயிற்சி :
நன்கு நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தூக்கியபடியே மூச்சை உள்ளுக்குள் இழுங்கள். தலைக்குமேல் கும்பிடுவது போல் கைகளை வைத்ததும் அப்படியே மீண்டும் பழையபடி பக்கவாட்டில் மெதுவாக இறக்கவும். இப்படி கைகளை இறக்கும் போது இழுத்த மூச்சை மெதுவாக வெளியேற்றுங்கள். இந்தப் பயிற்சியை காலை உணவிற்கு முன்பு பத்துமுறை செய்துவிட்டு புறப்பட்டால் அந்த நாள் முழுவதும் படுசுறுசுறுப்பாக இருக்கும். மற்ற இரு மூச்சுப் பயிற்சிகளையும் நீங்கள் செய்திருந்தால் உங்களிடம் ஒற்றைத் தலைவலி, எரிச்சல் முதலியன வாலாட்ட முடியாது. ‘இனிமையாகப் பழகும் அரிய மனிதர்’ என்று பெயர் பெற்றுவிடுவீர்கள்.

ஆழ்ந்து சுவாசிக்கும் இந்த மூச்சுப் பயிற்சியை அமெரிக்க டாக்டர்கள் பலரும் இரு வேளைகள் செய்கிறார்கள். ரெய்கி மருத்துவத்தில் இந்த ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி முக்கியமான குணப்படுத்தும் உத்தியாக இடம் பெற்றுள்ளது.
எனவே, எளிமையான இந்த சக்தி வாய்ந்த மூச்சப் பயிற்சியை இன்று முதல் ஆரம்பியுங்கள்.

25 comments:

  1. நல்ல பயனுள்ள இடுகை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள இடுகை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. முதல் மூன்று பத்திகள் எல்லோரும் அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்று. மாற்றி மூச்சினை விடுபவரே அதிகம்.

    மிக நல்ல பகிர்வு சங்கவி. நன்றி நன்றி.

    ReplyDelete
  4. நல்ல விசயம் சொல்லி இருக்கீங்க..!


    இப்போ கோவை எப்படி இருக்குங்க..??

    ReplyDelete
  5. மிக நல்ல பகிர்வுங்க... ரொம்ப நாளாச்சு மூச்சுப்பயிற்சி செய்து... மறுபடியும் செய்யவேண்டும்... இதனால் ஏற்படும் நன்மைகளை உணர்ந்திருக்கிறேன்...

    ReplyDelete
  6. ரொம்ப உதவியாக இருக்கிறது இந்தப் பதிவு. நன்றி

    ReplyDelete
  7. //ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதான்.//

    உங்களுக்கு கலைஞரிடம் சொல்லி விஞ்ஞானி பட்டம் வாங்கித்தர்றேன்!

    மூக்குல சுவாசிச்சாலே அது நுரையீரல் சுவாசிப்பு தான், ஆழ்ந்து சுவாசிக்கிறதுன்னா தண்ணிகுள்ள ஆளத்துக்கு போய் தான் சுவாசிக்கனும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி

      வால்பையன்

      Delete
  8. எனக்கு தெரிஞ்சி வாயில் சிகரெட் புகையை இழுத்து மூக்கு வழி புகையை விடுவது சிறந்த மூச்சு பயற்சி, தக்காளி சொன்னா எவன் கேக்குறான்!

    ReplyDelete
  9. //
    எனக்கு தெரிஞ்சி வாயில் சிகரெட் புகையை இழுத்து மூக்கு வழி புகையை விடுவது சிறந்த மூச்சு பயற்சி, தக்காளி சொன்னா எவன் கேக்குறான்!//

    மிளகு பொடி கலந்து ரம் ஒரே மூச்சுல குடிச்சீட்டு காத்த வெளியில விடுவதும் நல்ல பயிற்சி..

    பக்கத்து வீட்டு பால்கனி வழியா குதிச்சு, கய்யில கிடச்சத தூக்கிட்டு ஓடினாலே . நல்ல மூச்சு பயிற்சி. இல்லையா வால்..??? :-)

    ReplyDelete
  10. "காயமே இது பொய்யடா இது வெறும் காற்றடைத்த பையடா

    சைகிள் Kப்பில ஆட்டோ ஓட்டுவது வாலுக்கு கைவந்த கலையடா"

    :-)

    ReplyDelete
  11. வாங்க சித்ரா வாங்க....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  12. வாங்க சென்ஷி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  13. வாங்க ராமலஷ்மி...

    ஆமாங்க மாற்றி மூச்சினை விடுபவரே அதிகம்...

    ReplyDelete
  14. வாங்க திருஞானம்...

    கோவை கொஞ்சம் இப்ப அழகாவே இருக்குது....

    ReplyDelete
  15. வாங்க பாலாசி...

    //மறுபடியும் மூச்சுப்பயிற்சி செய்யவேண்டும்....//

    வரவேற்கிறேன்...

    ReplyDelete
  16. வாங்க பின்னோக்கி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  17. வாங்க வால்....
    //
    உங்களுக்கு கலைஞரிடம் சொல்லி விஞ்ஞானி பட்டம் வாங்கித்தர்றேன்!//

    எனக்கு விஞ்ஞானி பட்டம் எல்லாம் வேண்டாங்க...

    //மூக்குல சுவாசிச்சாலே அது நுரையீரல் சுவாசிப்பு தான், ஆழ்ந்து சுவாசிக்கிறதுன்னா தண்ணிகுள்ள ஆளத்துக்கு போய் தான் சுவாசிக்கனும்!//

    ஆழ்ந்து மூச்சு விடுதல் என்பது மூச்சை இழுக்கும் போது இரண்டு நுரையீல் முழுவதும் காற்று போக வேண்டும் அதற்கு பெயர்தான் ஆழ்ந்த மூச்சு... ஆனால் இன்று அநேகம் பேர் பாதி நுடியீரலுக்குத்தான் மூச்சை இழுக்கின்றனர்... இதத்தாங்க நான் சொல்ல வந்த விசயம்...


    //எனக்கு தெரிஞ்சி வாயில் சிகரெட் புகையை இழுத்து மூக்கு வழி புகையை விடுவது சிறந்த மூச்சு பயற்சி, தக்காளி சொன்னா எவன் கேக்குறான்!//

    நல்ல பயிற்சி இத நீங்க தொடர்ந்து ஒரு நாளைக்கு ஐம்பது முறை செய்யுங்க தக்காளி....

    ReplyDelete
  18. மிகவும் பயனுள்ள இடுகை சங்கவி.

    சரிவரப் பழகிக்கொண்டால் பல நோய்களிலிருந்து விடுபடலாம்.

    மிக்க நன்றி!

    ReplyDelete
  19. நல்ல பதிவு பகிர்வு....

    ReplyDelete
  20. மூச்சு இருக்கும் வரை எல்லோரும் செய்ய வேண்டிய பயிற்சி.

    தினம் செய்யாவிட்டாலும் வாரத்தில் 3 நாட்கள் செய்கிறேன்.

    ReplyDelete
  21. நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.

    கவி.செங்குட்டுவன்,
    ஊத்தங்கரை - 635207

    ReplyDelete
  22. நல்ல பயனுள்ள தகவல்கல் நண்பரே தொடரவும்

    ReplyDelete
  23. நுரையீரல் சம்பந்தமான வியாதிகளைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன்.
    மூச்சுப் பயிற்சிக்கான தங்கள் விளக்கம் உபயோகமாக உள்ளது .

    ReplyDelete
  24. மிக அருமையான பதிவு...மிக்க நன்றி...

    ReplyDelete