Tuesday, September 13, 2011

திருமண நாள்.....


திருமணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் சந்தோசங்களை அள்ளிக்கொடுக்கும் காலக்கட்டம். வாழ்வில் பல சந்தோசங்கள் இருந்தாலும் திருமண நாள் என்ற சந்தோசம் மிக இனிமையானது.

சிறுவயதில் இருந்து சொந்தபந்தங்கள், நண்பர்கள் திருமணத்திற்கு செல்லும் போது நம் திருமணம் எப்படி நடக்கும் என்று ஒரு எண்ண ஓட்டம் நிச்சயம் மனதில் இருக்கும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இரண்டு  வகை சொந்தத்தில் திருமணம் செய்வது, புது சொந்தத்தில் திருமணம் செய்வது என்று சொல்லலாம். சொந்தத்தில் திருமணம் செய்வது மிக அதிக சந்தோசம் என்னைப் பொறுத்தவரை...

எனக்கு சிறுவயதில் இருந்து மாமா வீட்டுக்கு சென்றால் அங்கு மாமா பெண்ணோடு விளையாடிக்கொள்டு இருப்பேன். அப்போது பார்ப்பவர்கள் என்ன மாமனோடு விளையாடுகிறாயா என்று கிண்டல் அடிப்பார்கள். எதாவது நிகழ்ச்சிகளுக்கு சென்றால் என்னடா எப்ப பார்த்தாலும் அத்தை பொண்ணோடு சுத்தற என்று சிறுவயதில் இருந்து மன ஓட்டத்தை அத்தை பெண் மேல் திரும்பிய காலகட்டம் கல்லூரி செல்லும் போது தான் என்றாலும் ஞாபகம் தெரிந்து முதல் என் முதல் பெண் தோழி அத்தை பெண் தான்.


அத்தை பெண்ணை என் முதல் தோழியை  திருமணம் செய்து கொள்ளலாம் என்று நான் சொல்வதற்கு முன் என் அக்காக்கள் எல்லாம் முடிவு செய்து பேசஆரம்பித்தார்கள். என் குடும்ப பெரியவர் என் பெரியப்பாவிடம் நானும் என் முடிவையும் சொன்னேன் என் அத்தை மகளை கூப்பிட்டு கேட்டார் எனக்கும் சம்மதம் என்றதும். ஒரு நல்ல நாள் பார்த்து பேசி முடிவானது என் திருமணம். திருமண 14.09.2008 அன்று அந்தியூரில் லட்சுமி திருமண மண்டபத்தில் முடிவாகி சரியாக மூன்று வருடங்களுக்கு முன் என் முதல் தோழியை, என் அத்தை மகளை பெற்றோர்கள், உற்றார்கள், உறவினர்கள் முன் மனைவியாய் ஏற்றேன்...



இன்றோடு மூன்றாண்டுகள் முடிந்து நான்காவது ஆண்டில் உங்கள் வாழ்த்துக்களோடு அடிஎடுத்து வைக்கிறேன்....

என்றும் அன்புடன்
சங்கமேஸ்வரன்
கவிதா
(சங்கவி)

27 comments:

  1. கை தலம் பற்றிய துணையை புரிந்து கொள்வதும் அன்பில் நெகிழ்ந்து போவதுமாகிய இனிய இல்லறம் நல்லறமாக, இன்னும் பல அருமையான நாட்களை வழங்குமாறு இறைவனிடம் வேண்டி வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  3. என்றும் இல்லறத்தில் சந்தோசம் நீடித்து நிலைத்து நிற்க வேண்டுமென இறைவனை வேண்டி தம்பதிகள் இருவரையும் மனமார வாழ்த்துகிறேன் !

    திருமணநாள் வாழ்த்துக்கள் சதீஷ் !! :)

    ReplyDelete
  4. திருமண நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. பலநூறு ஆண்டுகள் திருமணவிழா நீங்கள் காண இந்த சிறுவனின் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. ட்ரீட் நீங்க வந்து கொடுப்பிங்களா? இல்ல நான் அங்க வரணூமா?

    ReplyDelete
  7. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

    http://samaiyalattakaasam.blogspot.com/2011/09/onion-capsicum-pizza-bread.html

    ReplyDelete
  8. இனிய திருமண நாள் வாழ்த்துகள் நண்பா...

    ReplyDelete
  9. இனிய திருமண நல்வாழ்த்துகள்..!! :)

    ReplyDelete
  10. திருமணநாள் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  11. இன்னும் பல, திருமணநாள் பதிவுகள் தொடர வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  12. உங்க முதல் தோழிகிட்டயும் என்னோட வாழ்த்துக்களைப் பகிர்ந்துடுங்க..

    ReplyDelete
  13. தம்பதியினருக்கு இனிய மணநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. தம்பதிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. இன்றுபோல் என்றும் வாழ்க நண்பா.....

    ReplyDelete
  16. திருமணநாள் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  17. மனம் நிறைந்த திருமண நாள் நல்வாழ்த்துகள் நண்பரே..... இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் இனியதாய் அமையட்டும்....

    ReplyDelete
  18. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நண்பா..

    ReplyDelete
  19. இனிய திருமணநாள் வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  20. சங்கமேஷ்+கவிதா தம்பதிகள்

    குன்றாத மகிழ்ச்சியுடன்
    என்றென்றும் வாழ
    இந் நன்னாளில் வாழ்த்துகிறோம்

    - சத்ரியன் குடும்பத்தினர்.

    ReplyDelete
  21. இனிய?? திருமண நாள் வாழ்த்துக்கள்..

    பதினாறும் பெற்று
    பேரு வாழ்வு வாழ்க!!

    வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  22. சங்கமேஸ்வரன்
    கவிதா தம்பதியினருக்கு

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. மனம் நிறைந்த திருமண நாள்வாழ்த்துக்கள் . என்றும் அன்பாக வாழ்க. பரிசு உண்டா ?
    ( குழந்தை குட்டி உண்டா ? )
    (ஆச்சி )

    ReplyDelete
  24. நீவீர்
    தம்பதி சமேதராய்
    தரணியில் யாவும் பெற்று
    தார்மீக மனைவாழ்வை
    இன்பமாக களித்திடவே
    இறைவனை இறைஞ்சுகிறேன்.

    வாழி நீவீர் பல்லாண்டு.

    ReplyDelete
  25. sangavi....:)

    manamaarntha vaazhthukal....!

    ReplyDelete