Thursday, May 30, 2013

அஞ்சறைப்பெட்டி 30/05/2013

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

கிரிக்கெட் விளையாட்டை பரிட்சைக்கு செல்லாமர் பார்த்த காலம் எல்லாம் உண்டு மேட்ச் பிக்ஸிங்க கேள்விப்பட்டு அசார், ஐடேஜா எல்லாம் வெளியே வந்த போது இருந்து அதில் நாட்டம் குறைந்து விட்டது.. ஐபிஎல் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது லலிச்மோடியின் தில்லாங்கடிக்கு பின் அதையும் பார்ப்பதை தவிர்த்தேன். இப்போது ஐபிஎல்லில் நடப்பதெல்லாம் பார்க்கும் போது தூக்கத்தை கெட்டு மேட்ச் பார்த்தவர்களையும், டீ க்கடையில் நேற்றைய மேட்சை பற்றி பேசுபவர்களையும், அலுலக கேண்டீனில் பெருமை பீத்துபவர்களையும், முகநூலிலும், டிவிட்ட்ர்களிலும் ஐபிஎல் பெருமை பீத்தியவர்களை நினைச்சா சிரிப்பா வருது....
இனியாவது திருந்துங்க மக்களே....
  ................................................................

மீண்டும் ஒரு தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவில் தஞ்சம்.. யாரைக்குற்றம் சொல்வது என்பது தான் புரியாத புதில் இழுத்தவர்களையா அல்லது இழுத்ததும் போய் சேர்ந்தவர்களையா என்று... முடிவாக அரசியலில் இதெல்லாம் சாதாரணம்ப்பா என்று கண்டு கொள்ளாமல் போக வேண்டியது தான்....
..........................................................................................
இந்த வருடம் தென்மேற்கு பரும மழை முன்னதாகவே வந்து விடும் என்றனர். அவர்கள் சொன்னதால் வருணபகவான் கோவிச்சுகிட்டார் போல இன்னும் காணவில்லை.. இந்த வருடம் மழை பொய்த்தால் நிச்சயம் எல்லாரும் தண்ணீருக்கு சிங்கி அடிக்கவேண்டியது தான்... விலைவாசி உயர்வில் முக்கிய இடம் தண்ணீருக்குத்தான் உண்டு. இப்பவே தண்ணீர் பாட்டில் 20 ரூபாய் என்கின்றனர் இனி அந்த விலையை தாண்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
................................................................................................

பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிப்பதற்கான சட்டம் கடந்த 18-ம் தேதி நிறைவேறியது. இதையடுத்து முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்தது.

இதில் நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வின்செண்ட் ஆடினும் புரூனோ பாய்லீயு ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் அந்த ஜோடி, தங்கள் திருமணத்திற்கு வந்திருந்தோர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை வரவேற்று ஒரு புறம் கொண்டாட்டமும், மற்றொரு புறம் எதிர்ப்பு போராட்டமும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.



தகவல்

அண்டத்தில் பல ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான உல்ப் ரயேட் 104 என்று பெயரிடப்பட்ட நட்சத்திரம் பூமியிலிருந்து 8 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

இது, 5 லட்சம் ஆண்டுகளில் எந்த நேரத்திலும் தீப்பிளம்பாக வெடித்துச் சிதறலாம் என்று அமெரிக்க விஞ்ஞானி கிரான்ட் ஹில் தெரிவித்துள்ளார். அப்படி வெடிக்கும் போது, அதிலிருந்து தீங்கு விளைவிக்கக் கூடிய காமா கதிர்கள் வெளியேறும். அதன் கதிரியக்க வேகத்தைப் பொருத்து, பூமியின் மீதான தாக்கமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலத்தில் நான்கில் ஒரு பகுதி அழிந்து விடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக பூமியை அடையும் புற ஊதாக் கதிர்களின் அளவில் 50 சதவீதம் அதிகரிக்கும். பூமியின் வெப்ப நிலையும் உயரும் என்று அவர் கூறியுள்ளார்.

தத்துவம்

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான். 

உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.

செய்வதற்கு சில, நேசிப்பதற்குச் சில, மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில, இவைகளே மகிழ்ச்சியின் தேவைகள்...


8 comments:

  1. 5 லட்சம் ஆண்டு... 5 ஆண்டுகளாக இருக்கலாம்...

    ReplyDelete
  2. வேண்டும்நீ எனக்கு வேண்டும்....
    ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
    ஆசைக்குப் பிள்ளைகள் வாழ்ந்தாலும்
    ஆம்பிளைத் துணைக்கு ஈடுண்டா
    அவரின் இணைக்கு நிகருண்டா

    பெற்றவர் பிறந்தவரி ருந்தாலும்
    உற்றவர் அன்புக்கு விலையுண்டா
    கற்றவருமே கண் கலங்குவார்
    கல்லாதவரோ மனம் புழுங்குவார்

    சொத்தும் சொந்தமு மெனனக்கு
    சொல்லென்னா துயரம் தருமே
    சுகமும் பணமும் வேண்டாமே
    சொந்தமே என்னுயீரேநீ வேண்டுமே

    வாழ்ந்த நாட்களை எண்ணியே
    வாழ்வு முழுதும் நானிருப்பேன்
    வாடிபோடி என்றழைத்தே நீயும்
    வசைபாட வேண்டும் அன்பாக

    மீண்டும் எழுந்து வருவாய்
    மேனியில் எழுந்திடு உணர்வாய்
    தாங்கியே அருகில் உன்னைத்
    தாய்போல் காப்பேன் அன்பாய்

    வேண்டும்நீ எனக்கு வேண்டும்
    மீண்டும் துணைக்குநீ வேண்டும்
    தாண்டும் வாழ்க்கையோடுநீ வேண்டும்
    தைரியம் சொல்லநீ வேண்டும்


    ReplyDelete
  3. அன்பின் சங்கவி - பல்வேறு தகவல்கள் - அஞ்சறைப் பெட்டியில் அழகாக ஒன்றுடன் ஒன்று கலவாமல் - தனித்தனியே பதிவிட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. கிரிக்கெட் பற்றி இந்த முடிவுக்கு நான் வந்து ரொம்ப நாள் ஆயிற்று

    ReplyDelete
  5. மனதிலே அன்பிருந்தால்...

    இப்போது வணங்கும் இறைவனே
    முற்போது வாழ்ந்த மனிதனே
    வெவ்வேறு வுருவில் வணங்குவர்
    வேதமும் சொல்லுமெனக் கூறுவர்

    கல்லாக வீசுகின்ற காற்றாக
    இல்லாத உருவாய் கூறுவர்
    நில்லாத நிலையிலும் ஆடுவர்-சாமி
    நேரில் வந்ததாய் கூறுவர்

    கல்லாமை இல்லாதோர் வணங்கிடும்
    இல்லாத உருவமே கடவுளே
    பொல்லாத வைத்தியம் சொல்லுவர்
    பேரதிர்ச்சி நடக்குமென கூறுவர்

    இயற்கையே கடவுள் என்றிருந்தால்
    எதற்குக் கோயிலும் குருக்களும்
    அதற்குப் அன்றாடம் பூசையும்
    ஆடும் கோழியும் வேண்டாமே

    இல்லற வாழ்வை துறந்துதான்
    இறைவனைக் காண முடியுமானால்
    இறைவனின் தூதனாய் இருப்பவரும்
    இல்லறம் தவிர்த்து இருக்கலாமே

    மனதிலே அன்பைக் கொண்டிருந்தால்
    மனிதனை நண்பனே என்றிருந்தால்
    துணிவையே மனதினில் வளர்த்திருந்தால்
    துணைக்கு சாமியும் வேண்டுமா

    ReplyDelete
  6. ஆனந்த வாழ்வை பிரியோம்


    உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள்
    உருமாறும் காலங்கள் நேரங்கள்
    உண்மையை புரிந்ததா மனிதம்
    உலகமே அறியாத புதிராம்

    பொய்த்துப் போன இயற்கை
    புரியாத காலநிலை மாற்றம்
    சொல்லிலே பேசும் செயற்கை
    சோகமாய் மாறிவிட்ட நேர்மை

    வெல்லுவோர் வீழ்த்து தோற்றவர்
    சொல்லிலே விஷத்தை சேர்த்தவர்
    நல்லதை நாளும் செய்பவர்
    நாணயமே இல்லாத மனிதர்

    வாழ்கையில் ஏமாற்றம் வரும்
    வந்தபின் பணிந்து செல்லும்
    வசந்தமும் வந்து வாழ்த்தும்
    வாழ்ந்ததை சரித்திரம் சொல்லும்

    இன்னும் உள்ளது மனிதம்
    எப்படியும் மாறிவிடும் உலகம்
    அப்படியே சுழற்சி நின்றிடாது
    ஆழ்கடலும் வற்றிடாது அறியோம்

    அன்பினை யாருமே மறுத்து
    அறமே செய்வாரே பொறுத்து
    நீதியும் நேர்மையும் செயிக்கும்
    நித்தமும் மகிழ்ச்சியே பெருகும்

    ஆனாலும் எல்லோரும் மகிழ்வோம்
    ஆனந்த வாழ்வை பிரியோம்
    இருக்கும் வரையே நமது
    இறந்த பின்பு யாரறிவார்

    ReplyDelete
  7. பெத்தவங்களை போற்றுங்க

    கற்றதனால் மறக்குமோ
    பெற்றோரின் கடமைகள்
    காசுக்கெங்கும் கிடைக்குமோ-அன்பு
    கடையிலும் கிடைக்குமோ

    கனிவுடனே பேர்சொல்ல
    கண்குளிரப் பார்த்திருக்க
    மீண்டும் வந்து பிறப்பாரா
    மகிழ்ச்சியோடு அழைப்பாரா

    மற்றவரும் நினைப்பாரோ
    மகிழ்ச்சியாக சிரிப்பாரோ
    உற்றாரும் வாருவாரோ
    உடனிருந்து பார்ப்பாரா

    கருவுற்ற நாள்முதல்
    கண்ணுறக்கம் பாராமல்
    உருவாக்கி வளர்த்தாரே
    உதிரத்தை உணவாக்கி

    பெத்தவங்களை போற்றினாலே
    பேரிண்ப தடையேது மகிழ்ச்சி
    பெற்றதனால் பிள்ளைகளின்
    பெருமைக்கு வேறென்ன புகழ் ஈடு

    ReplyDelete
  8. தினமும் தினசரி பார்த்தாலே.....


    தினமும் தினசரிப் பார்த்தாலே
    மனதும் வருத்தமாய் ஆகிறதே
    பணத்தின் தேவையால் பலருமே
    பாசம் இன்றி செய்வதுமேன்

    குணமே கெடுக்கும் பணத்துக்காக
    குற்றம் மறந்து செய்வதனால்
    கொடுமையான கொலை செயலை
    சுற்றம் மறந்து செய்வதுமேன்

    கொலைக் கொள்ளைக் கற்பழிப்பு
    கொடுமை அவதி தீஞ்செயலால்
    குடும்பம் அமைதி மனமொடிய
    குற்றச் செயலைச் செய்வதுமேன்

    உழைக்க வழிகள் பலதிருக்க
    உயர தொழிலே வேறிருக்க
    தழைக்கும் மனித பண்பிழந்து
    தீராப் பழியும் சுமப்பதுமேன்

    நிலைமை எப்போ மாறுமோ
    நிதமும் மனிதம் போற்றுமோ
    தலைமைக் கடவுள் இதையெல்லாம்
    தவிர்க்கும் வழியைச் செய்வாரோ


    ReplyDelete