உள்ளுரில் இருந்து உலகம் வரை........
கிரிக்கெட் விளையாட்டை பரிட்சைக்கு செல்லாமர் பார்த்த காலம் எல்லாம் உண்டு மேட்ச் பிக்ஸிங்க கேள்விப்பட்டு அசார், ஐடேஜா எல்லாம் வெளியே வந்த போது இருந்து அதில் நாட்டம் குறைந்து விட்டது.. ஐபிஎல் ஆரம்பத்தில் நன்றாக இருந்தது லலிச்மோடியின் தில்லாங்கடிக்கு பின் அதையும் பார்ப்பதை தவிர்த்தேன். இப்போது ஐபிஎல்லில் நடப்பதெல்லாம் பார்க்கும் போது தூக்கத்தை கெட்டு மேட்ச் பார்த்தவர்களையும், டீ க்கடையில் நேற்றைய மேட்சை பற்றி பேசுபவர்களையும், அலுலக கேண்டீனில் பெருமை பீத்துபவர்களையும், முகநூலிலும், டிவிட்ட்ர்களிலும் ஐபிஎல் பெருமை பீத்தியவர்களை நினைச்சா சிரிப்பா வருது....
இனியாவது திருந்துங்க மக்களே....
........................................................... .....
மீண்டும் ஒரு தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவில் தஞ்சம்.. யாரைக்குற்றம் சொல்வது என்பது தான் புரியாத புதில் இழுத்தவர்களையா அல்லது இழுத்ததும் போய் சேர்ந்தவர்களையா என்று... முடிவாக அரசியலில் இதெல்லாம் சாதாரணம்ப்பா என்று கண்டு கொள்ளாமல் போக வேண்டியது தான்....
............................................................ ..............................
இந்த வருடம் தென்மேற்கு பரும மழை முன்னதாகவே வந்து விடும் என்றனர். அவர்கள் சொன்னதால் வருணபகவான் கோவிச்சுகிட்டார் போல இன்னும் காணவில்லை.. இந்த வருடம் மழை பொய்த்தால் நிச்சயம் எல்லாரும் தண்ணீருக்கு சிங்கி அடிக்கவேண்டியது தான்... விலைவாசி உயர்வில் முக்கிய இடம் தண்ணீருக்குத்தான் உண்டு. இப்பவே தண்ணீர் பாட்டில் 20 ரூபாய் என்கின்றனர் இனி அந்த விலையை தாண்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
............................................................ .............................. ......
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அங்கீகரிப்பதற்கான சட்டம்
கடந்த 18-ம் தேதி நிறைவேறியது. இதையடுத்து முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள்
திருமணம் நேற்று கோலாகலமாக நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வின்செண்ட் ஆடினும் புரூனோ பாய்லீயு ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் அந்த ஜோடி, தங்கள் திருமணத்திற்கு வந்திருந்தோர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை வரவேற்று ஒரு புறம் கொண்டாட்டமும், மற்றொரு புறம் எதிர்ப்பு போராட்டமும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வின்செண்ட் ஆடினும் புரூனோ பாய்லீயு ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர் அந்த ஜோடி, தங்கள் திருமணத்திற்கு வந்திருந்தோர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
பிரான்சில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை வரவேற்று ஒரு புறம் கொண்டாட்டமும், மற்றொரு புறம் எதிர்ப்பு போராட்டமும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல்
இது, 5 லட்சம் ஆண்டுகளில் எந்த நேரத்திலும் தீப்பிளம்பாக வெடித்துச் சிதறலாம் என்று அமெரிக்க விஞ்ஞானி கிரான்ட் ஹில் தெரிவித்துள்ளார். அப்படி வெடிக்கும் போது, அதிலிருந்து தீங்கு விளைவிக்கக் கூடிய காமா கதிர்கள் வெளியேறும். அதன் கதிரியக்க வேகத்தைப் பொருத்து, பூமியின் மீதான தாக்கமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால், வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலத்தில் நான்கில் ஒரு பகுதி அழிந்து விடும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக பூமியை அடையும் புற ஊதாக் கதிர்களின் அளவில் 50 சதவீதம் அதிகரிக்கும். பூமியின் வெப்ப நிலையும் உயரும் என்று அவர் கூறியுள்ளார்.
தத்துவம்
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே, ஆனால் சந்தர்ப்பம், சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன.
செய்வதற்கு சில, நேசிப்பதற்குச் சில, மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில, இவைகளே மகிழ்ச்சியின் தேவைகள்...