Tuesday, March 23, 2010

யமுனா.....ஒரு காதல் கதை...

யமுனா அந்த கிராமத்து தேவதை அப்படின்னு தான் எல்லாரும் சொல்லுவாங்க ஆனா அவ அழகு இருக்கு என எப்பவும் யாரிடமும் சொல்லமாட்டாள். அவள் கண் எப்போதும் மீன் போல் துள்ளிக்கொண்டே இருக்கும் தன் நடை உடை பாவனையில் அவள் வீட்டில் மட்டுமல்ல அந்த ஊரிலும் அனைவரையும் கொள்ளை கொண்டவள். அவள் அப்பா ஒரு கட்டடி மேஸ்த்திரி அம்மா குடும்ப தலைவி. 11ம் வகுப்பு படிக்கும் இந்த இளமங்கைக்கு அந்த ஊர் மட்டமல்ல பக்கத்து ஊரில் இருந்தும் தூது வரும் ஆனால் எங்க அப்பாகிட்ட சொல்லிருவேன் என தூது வரும் ஆட்களை மிரட்டிவிடுவாள். பள்ளி, பள்ளி விட்டால் வீடு டியூசனுக்கெல்லாம் போகமாட்டாள். வெள்ளிக்கிழமை மாலை கோயிலுக்குச் செல்வாள் யமுனாவைப்பார்ப்பது கொஞ்சம் கஷ்டமான காரியமே.
யமுனா 11ம் வகுப்பு முடிந்து விடுமுறையில் வீடடில் இருக்கும் காலத்தில்தான் அவர்கள் ஊர் மாரியம்மன் திருவிழா நடக்கும் மே மாத விடுமுறையில் தான் வெளி ஊரில் தங்கிப்படிக்கும் பசங்க எல்லாம் திருவிழாவிற்கு வருவார்கள் அப்படி வந்தவர்களில் ராமமூர்த்தி அனைவராலும் ராமு என்று அழைக்கபடுபவன் சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் படிக்கிறான் அவனுடன் சுந்தர், சதிஷ், ரமேஸ், பாலா என அவ்வூர் இளவட்டங்கள் எல்லாம் வந்து ஊரைச்சுற்றிக்கொண்டும் மட்டை விளையாடிக்கொண்டு சந்தோசமாக அக்கிராமத்து மண் வாசனையில் சுற்றிக்கொண்டு இருந்தனர்.
ஊர்த்திருவிழா தொடங்கிவிட்டதால் எல்லோரும் மாலை நேரங்களில் கோயில் வளாகத்தில் ஆட்டம் ஆடுவார்கள் அதை ஊர் மக்கள் எல்லாம் வேடிக்கைப்பார்ப்பார்கள் ஆட்டம் ஆடிய களைப்பில் தண்ணீர் குடிக்க கோயில் பின்பக்கம் ராமு சென்றான் மண்குடத்தில் மண்சொம்பில் தண்ணீர்குடித்துவிட்டு மீதை தண்ணீரை தலையில் ஊற்ற அப்போது மேஸ்த்திரி குடும்பத்தினர் சாமிகும்பிட்டு விட்டு அவ்வழியாக வர மேஸ்த்திரி மேல் தண்ணீர் பட்டுவிட்டது ராமு சார் மன்னிச்சுங்க தெரியாம பட்டுருச்சுன்னு சொல்ல அவர் சரிப்பா பரவாயில்லை விடுவிடு என சொல்லி சென்றுவிட்டார் செல்லும் போது யமுனாவை கூப்பிட ராமு அன்றைக்குத்தான் பக்கத்தில் யமுனாவைப்பார்க்க கானததை கண்ட மாதிரி பாத்துகிட்டே இருந்தான் அப்ப தண்ணிகுடிக்க வந்த பாலா என்னடா என்னாச்சு இல்லடா யமுனா யமுனான்னு சொல்லிட்டு ராமு கோயிலில் ஆட்டம் ஆடி சென்று ஆட ஆரம்பித்தான் ஆனால் இவன் கண் எல்லாம் யமுனா எங்கே எங்கே எனத் தேடிக்கொண்டு இருந்தான். கூட ஆடிய பாலா என்னடா சித்தாள் வேலைக்கு ரெடியா? என கேட்க போட என்று முதல் முதலாக வெட்கப்பட்டான்.
அன்றில் இருந்து ராமு யமுனா கோவிலுக்கு வரும் நேரம் முதல் எப்வெல்லாம் வீட்டை விட்டு வெளியே வருவாள் என அறிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் அவள் பார்க்கும் போதேல்லாம் அவள் முன் தோன்றினான் எப்படியும் இந்த மாத இறுதியில் மீண்டு கல்லூரிக்கு சென்று விடுவேன் அதற்குள் எப்படியும் சொல்லி விடுவேன் என மார்தட்டடிக்கொண்டு தூது அனுப்பலாமா இல்லை நாமே சொல்லலாமா எப்படி பேசுவது என மண்டை குழம்பினான் சரி முதன் முதலில் இன்று கை அசைக்கலாம் என முடிவு செய்து காத்திருந்து அவள் மொட்டை மாடியில் துணி காயவைக்கும் போது நண்பர்களுடன் உட்கார்ந்து டேய் நீங்க யாரும் இங்க பாக்காதீங்க நான் மட்டும் பார்க்கிறேன் என அவள் திரும்பும்போது தைரியம்தை வரவழித்து கை காட்டினான் அவள் கைகாட்டியதை பார்த்து விட்டு பார்க்காத மாதிரி இருக்கவே அவன் திரும்ப கைகாட்ட அவள் பார்த்துவிட்டு திரும்பி வேற துணியை காய வைத்து மீண்டும் திரும்பிப் பார்த்தாள் ராமு சந்தோசத்தில் குதிக்க ராமுவின் அப்பா அங்க வந்து வாட வீடடில் மாமா வந்திருக்கிறார் உன்னை எங்கெல்லாம் தேடுவது வா என அழைக்க ராமு முகம் சிவந்து வீடு கிளம்பினான்.

அன்று முதல் திருவிழா நடைபெறும் வரை தினமும் அவளைப்பார்க்க தவம் கிடந்து தினமும் அவள் இருக்கும் இடமெல்லாம் இருப்பான் திருவிழாவில் இரு முறை பேச முற்பட்டான் முடியாமல் சிரிப்புடன் வந்து விட்டான். அவளும் இவனை தினமும் ஒரு முறை மட்டுமே சிரிப்பாள் ராமு அதற்காகவே தவம் கிடந்தான் இன்னும் கல்லூரிக்கு செல்ல 15 நாட்கள் மட்டும் மீதமிறுந்த நிலையில் எப்படியும் சொல்லிவிடலாம் என நண்பனிடம் ஐடியா கேட்க பேசமுடியாது ஆனா கடிதம் கொடுக்கலாம் என சொல்ல இரண்டு நாட்களாக நண்பர்கள் அனைவரும் தீர யோசித்து வைரமுத்து வின் கவிதையை உல்டா செய்து ஒரு கடிதம் ஒரு வழியாக தயாரித்துவிட்டனர் எப்படி கொடுப்பது என யோசிக்க பாலாவின் தங்கை மூலம் கொடுக்க முடிவெடுத்து அவளுக்கு சாக்லெட் எல்லாம் வாங்கிக்கொடுத்து கொடுத்துவிட்டு வர சொல்ல யமுனா எதுவும் சொல்லால் வாங்கிக்கிட்டா ராமுவிற்கு சந்தோசம் தாங்காமல் அன்றைக்கு நண்பர்களுக்கு எல்லாம் தம் வாங்கிக்கொடுத்து கொண்டாடினான்.
கடிதம் கொடுத்து இரண்டு நாள் ஆச்சு அவளும் வீட்டை விட்டு வரவில்லை எந்த பதிலும் காணவில்லை ராமு மண்டை குழம்பி அடுத்த கடிதம் எழுதி மீண்டும் நண்பனின் தங்கை மூலம் தங்கைக்கு கொஞசம் செலவு செய்து அனுப்பிவிட்டான் மீண்டும் கடிதம் வாங்கிவிட்டு இரண்டு நாட்கள் பதில் இல்லை ராமு இன்னும் நான்கு நாட்களில் கல்லூரி செல்லவேண்டும் என்ன செய்வது என நண்பனின் தங்கையிடம் சொல்லி அனுப்பினார்கள். யமுனா அவளிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சரி நான் கடிதம் எழுதுகிறேன் ஆனால் இப்ப எழுதமுடியாது கடிதம் எழுதி போஸ்டலில் அனுப்புகிறேன் ராமுவின் விலாசம் என்ன என கேட்டாள்.
அதை தங்கை சொல்ல ராமு மீண்டும் நண்பர்களுக்கெல்லாம் விருந்து படைத்து காதல் ரசம் சொட்ட சொட்ட சொந்தமாக கடிதம் எழுதி விலாசத்தோடு கொடுத்து அனுப்பினான். வாங்கிய யமுனா திங்கட்கிழமை நான் அனுப்புகிறேன் என சொல்லி அனுப்பினாள்.
ராமு நண்பர்களிட்ட எல்லாம் விடைபெற்று அப்பாகிட்ட பொய் சொல்லி கொஞ்சம் பணம் சேர்த்து வாங்கி விட்டு யமுனாவை கடைசியாக பார்க்க அவள் கை அசைக்க இன்னும் சந்தோசம் அதிகமாகி கனவுகளுடன் கல்லூரி சென்றான் தூங்காமல் யமுனாவுடன் நான்கு நாட்களாக கனவில் மிதந்தான். இன்று திங்கட்கிழமை கண்டிப்பாக கடிதம் எழுதி இருப்பால் என நினைத்து சந்தோசத்துடன் இருந்தான்.
யமுனா இங்கு தோழிகளிடம் காண்பித்து அனைவரும் பதில் கடிதம் எழுதலாம் என முடிவெடுத்து பள்ளியில் மதிய இடைவேளையில் யமுனா எனக்கு கையெழுத்து அழகாக இருக்காது நீ எழுது என இவளும் வைரமுத்துவின் சில வரிகளை உல்டா செய்து அவள் தோழி கீதா எழுதினாள் அடுத்தநாள் மாலை தபால் பெட்டியில் அனுப்பினாள்.
ராமு தூங்காமல் கொள்ளாமல் புதன்கிழமை மதியம் தான் கடிதம் கிடைக்கும் என தவமிருந்தான் புதன்கிழமை மதியமட விடுதில் இவனுக்கு ஒரு கவர் இருக்க எடுத்து ஒழித்து வைத்து விடுதி அறையில் நண்பர்கள் எல்லாம் மதியம் கல்லூரிக்குச் செல்ல ராமு வயிற்று வழி என்று சொல்லி அனைவரையும் அனுப்பிவிட்டு கடித்தை சாமி படம் முன் வைத்து கும்பிட்டு பிரித்தான் உள்ள நிறைய பேப்பர்கள் இருந்தது முதல் கடித்தை படித்தான்.. அன்பு ராமுவிற்கு நலமா? நீங்க இங்க இருந்த ஒரு மாதமும் எனக்கு நிறைய சந்தோசம் உங்க கோயில் ஆட்டம், சிரிப்பு, உங்க டிரசிங், நண்பர்களுடன் ஆட்டம், எல்லாரிடமும் சகஜமாக பேசுவது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நீங்கள் என்னை காதலிப்பீர்கள் என்று எனக்கு தெரியும் எனக்கும் பிடிக்கும் ஆனால் என்னைத் திருமணம் செய்வபவர்கள் பெரிய அதிகாரியாகவும், கை நிறைய சம்பளம் வாங்குபவராகவும் இருக்க வேண்டும் இருக்கவேண்டும் என நினைக்கிறேன் நீங்க இப்ப தான் படிக்கறீங்க எப்ப பெரிய அதிகாரியாக வரப்போறீங்க அப்ப சந்திப்போம் நீங்க கொடுத்த அனைத்து கடிதத்தையும் அனுப்பிவிட்டேன் இனி உங்க வேளையப்பாருங்க என உல்டா கவிதையுடன் முடிந்தது கடிதம்.....
ராமு குப்புறப்படுத்து அழுதான் கொஞ்ச நேரம் யோசித்தவனாய் இனி படித்து பெரிய ஆளாகி இவள் முன் வாழ்ந்து காட்டவேண்டும் என வெறியுடன் படிக்க வேண்டும் என படிக்க ஆரம்பித்தான்
யமுனா கொஞ்சம் சோகமாவே காணப்பட்டாள் கீதா ஏன் என விசாரிக்க இல்லடி அன்றைக்கு மாலை எங்க வீட்டுக்கு அவங்க அம்மா வந்து பணம் கடன் வாங்குனாங்க அப்ப எங்க இடம், நகை எல்லாம் வித்து மகனை படிக்க வைக்கிறேன் அவன் நால்லா படிச்சு பெரிய வேலைக்குப் போனாத்தாம்மா எங்களுக்கு சோறு என கூறினாள் அதைக்கேட்டு அந்தக் கடித்ததை கிழித்துவிட்டு நான் வேறு கடிதம் எழுதினேன் எப்படியும் அவன் பெரிய ஆளாக வருவான் என்ற நம்பிக்கையில்....

25 comments:

  1. ஒரேயடியாக நெகிழ வச்சிட்டீங்களே!
    Good story.

    ReplyDelete
  2. அய்யா நான்தான் பர்ஸ்ட் !

    இதோ இப்ப வந்துவிடுகிறேன் !

    ReplyDelete
  3. ரொம்ப நல்லாருக்கு சங்கவி

    ReplyDelete
  4. நல்லாருக்கு சங்கவி

    :)

    ReplyDelete
  5. அருமை. மனசுக்குள் ஒரு படமே ஓடியது. நல்ல முடிவு. ராமுவின் கூட்டத்தில் நானும் இருந்திருக்கன் போல... நல்லா இருக்கு

    ReplyDelete
  6. நல்லா இருக்கு

    ReplyDelete
  7. நண்பரே அருமை .
    எப்படி நண்பரே !

    ReplyDelete
  8. அருமை , ரொம்ப நல்லா இருக்கு

    ReplyDelete
  9. கதை நல்லாயிருக்கு சங்கவி!!

    ReplyDelete
  10. வாங்க சித்ரா வாங்க....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  11. வாங்க சங்கர்....

    சீக்கரம் கருத்து சொல்லுங்க....

    ReplyDelete
  12. வாங்க வானம்பாடி ஐயா,,,

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  13. வாங்க எறும்பு....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  14. வாங்க ராதாகிருஷ்ணன் சார்...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  15. வாங்க சின்ன அம்மிணி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  16. வாங்க சங்கர்....

    எல்லாம் உண்மை தான்...

    ReplyDelete
  17. வாங்க அனானிம்ஸ் ( பேர் சொல்ல தைரியம் இல்லாதவரே,,,)

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  18. வாங்கு மங்குனி...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  19. வாங்க Menagasathia

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  20. நல்ல கரு தல.. கொஞ்சம் சுருக்கி எழுதினா இன்னும் நல்லா வரும்..:-)))

    ReplyDelete
  21. நல்ல நெகிழ்வான கதை சங்கவி

    ReplyDelete
  22. sagavi is wonderful story.
    thank you so much.

    ReplyDelete