Tuesday, March 3, 2015

துடிக்கிறேன் பாஸ், துடிக்கிறேன்...

மகனை பள்ளியில் இருந்து மதியம் அழைத்து வந்தேன். மதிய நேரம் எனக்கு கொஞ்சம் அவரச நேரம் தான், மகனை வீட்டில் இறக்கி விட்டு பின் அலுவலகம் செல்லவேண்டும். எனக்கு ஒதுக்கிய மதிய உணவு நேரத்திலேயே இதை செய்யவேண்டும் என்பதால் மிக அவசர நேரம் என்று கூட சொல்லலாம்.

எப்போதும் போல அன்றும் பள்ளியில் இருந்து பிரசன்னாவை அழைத்துக்கொண்டு அவிநாசி சாலையில் நுழைந்தேன். அண்ணாசாலை சிக்னலில் இருந்து அதி வேகமாக செல்லும் உலகப்புழ்பெற்ற கார்களுடன் போட்டி போட இயலாமல் எப்போதும் எனது யமஹா 60 கிலோ மீட்டர் வேகத்தை மட்டுமே தொட்டுச் செல்லும், எனக்கும் அது தான் பிடிக்கும். உடன் வரும் ஸ்கூட்டி பெப்களும், மகனின் தோழிகளை அழைத்து வரும் ஆட்டோக்கள் என இருவரும் பராக்கு பாத்துக்கொண்டு தான் வருவோம்.

இது அத்தனைக்கும் நடுவில் எமனை அவ்வப்போது காண்பது போல எமன் வடிவில் கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு செல்லும் தனியார் பேருந்துகள் கண் மூடி கண் திறப்பதற்குள் காணமல் சென்று விடும்.

இந்த சம்பவங்கள் எல்லாம் தினமும் நடக்கும் ஒன்று தான். ஆனால் அன்று எங்கள் வண்டி ரெசிடென்சி ஓட்டலை தாண்டி வருகையில், குப்புசாமி நாயுடு சிக்னலில் பச்சைவிளக்கு 10,9,8,7,6,5, என்று குறைந்து கொண்டே வர வர எனது வண்டி அன்று 60வதை தாண்டி வேகம் எடுத்தது.

சிக்னலை நான் தொடும் முன் மஞ்சள் விளக்கு எரிய ஆரம்பித்தது, ஆனாலும் நான் வண்டியை முடுக்கி சிகப்பு விளக்கு எரியும் போது சிக்னலை கடந்துவிட்டேன், அந்த ஆனந்தத்திலேயே லஷ்மி மில் சிக்னலை அடைந்தேன்.

எப்போதும் எதையாவது பேசும் பிரசன்னா, அன்று சிக்னலில் நிற்கும் போது அவனது ஆட்டோ தோழிக்கு டாட்டா காண்பித்துவிட்டு என்னிடம் பேச ஆரம்பித்தான்..

அப்பா, அப்பா !

என்ன தங்கம், சொல்லு !

ஏம்ப்பா, yellow light எரியும் போது வண்டியின் வேகத்தை குறைத்துவிட்டு, Red Light எறியும் போது வண்டியை நிறுத்தத்தானே வேண்டும்??

ஆமாம் தங்கம், இப்ப மஞ்சள் விளக்கு எறியும் போது, வண்டியை தயாராக வைத்துக்கொண்டு, பச்சை விளக்கு எறியும் போது புறப்படனும் !

அது எனக்கு தெரியும்பா !!

அம்மா நிறைய தடவை சொல்லிருக்கு, ஸ்கூல்லியும் எங்க மேடம் சொன்னாங்க...

குட் குட்.. சமத்துடா என் செல்லம்...

அப்பா?

என்னடா?

நீ எதுக்கு அங்க மஞ்சள் லைட் போடும் போது வண்டிய மெதுவாக்காமால், சிகப்பு விளக்கு எரியும் போது வேகமாக வந்தாய்

அது வந்து தம்பி...

அப்பா சொல்லுப்பா? நீ எதுக்க வந்த?

அட இருப்பா சிக்னல் போட்டாச்சு, போகலாம் என்று அவனிடம் இருந்து தப்பவேண்டும் என்று வண்டியை எடுத்து ஏர்டெல் ஆபிசில் சந்தில் விட்டு,  வீட்டை நோக்கி வந்தேன்...

அப்பா எதுக்கப்பா சிக்னல்ல தாண்டி வந்த ??

அது பிரசன்னா, என்று மழுப்பிக்கொண்டே, இவனிடம் பொய் சொல்வதா? இல்லை தப்பு என்பதா? அவசரத்தில் வந்துவிட்டேன் என்று சொல்வதா? என ஒரே மண்டக்குழப்பம் !!

பதில் சொல்லவில்லை என்றால் விடமாட்டான் என்பதால் யோசித்தேன். கடைசியில் உண்மையை சொல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்...

தம்பி பிரசன்னா, அப்பா செய்தது தப்பு தான், அவசரத்தில் வந்துவிட்டேன், இனி வரமாட்டேன் என்றேன்..

தப்பு தானே ??

ஆமாண்டா !!

நான் தப்பு செய்தா மட்டும் அடிக்கி வர, இப்ப உன்னைய யாரு அடிக்கவருவாங்க?

சரி வீடு வந்திட்டது, நாம் மாலை பேசலாம், நான் ஆபிஸ் போகிறேன் என்ற இறக்கி விட்டேன்.

அவனது புத்தக பையையும், சாப்பாட்டு பையையும் எடுத்துக்கொண்டு, இன்னிக்கு சாப்பிட்டானா? இல்லையா? என்ற கவலையில் சாப்பாட்டு பையை பிரித்து பார்த்தேன்...

அப்பா, நீ தப்பு செய்தாய்யல்லவா? இந்த வாங்கிக்க, என்று அவனது கைவிரல்களை மடக்கி குத்துச்சண்டை பாத்து பழகி அதே போல் கையை வேகமாக இறக்கினான் என்னை நோக்கி...

அவன் உயரத்துக்கு அவன் இறக்கிய இறக்கு சரியாக என்னை தாக்கியது...

என் அடிவயிருக்கும் கீழ்...

நீங்க நினைக்கிற அதே இடம் தான் பாஸ்... ரெண்டு நாளா துடிக்கிறேன் பாஸ், துடிக்கிறேன்...

4 comments:

  1. சிரிப்பை அடக்க முடியாமல் சப்தம் போட்டு சிரித்தேன்...

    ReplyDelete
  2. நாம் வெறுக்கும் சட்ட மீறல்களை நாம் செயாமல் இருப்பது சான்று!
    சிறு பிள்ளைக்கு அப்பா பெண்களுக்கு காட்டும் மரியாதை
    சட்டம் மீற கூடாது ! எனும் அறிவுறை பசுமரத்தாணி !
    சும்மாவா சொன்னங்க... தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.. தந்தை போல role modelலும் இல்லை. !!!.

    ReplyDelete
  3. அதெல்லாம் சரி...! திருந்துவீர்களா...?

    ReplyDelete