Wednesday, March 18, 2015

அஞ்சறைப்பெட்டி 18.03.2015

ஒவ்வொரு முறையும் சொல்வதைத்தான் இந்த முறையும் சொல்கிறேன், மிக நீண்ட நாட்களாகிவிட்டது உங்களை எல்லாம் சந்தித்து, ஆனாலும் முஞ்சிபுத்தகத்தில் சந்தித்து கொண்டு தான் இருக்கின்றேன். 

வலைப்பதிவு போல இல்லை அங்கு. வலைப்பதிவாளர்கள் நிறைய பேர் நண்பர்களாக இருந்தும் முகப்புத்தகத்தில் எல்லோரையும் சந்திக்க இயலவில்லை என்பது தான் நிதர்சனம். அதற்கு மிக முக்கிய காரணம் வலைப்பதிவாளர்களை விட முகப்புத்தக நண்பர்கள் அதிகம் என்பது தான். 

எது எப்படியோ இது தானே நம் பொறந்த வீடு அதனால் இந்த வாரம் ஒரு உங்களை சந்திக்க வந்து விட்டேன். மீண்டும் மீண்டும் நிச்சயம் வருவேன்...

**************************

சில நாட்களுக்கு முன் கோவை விழாவைக்காக செல்லும் போது பாலசுந்தரம் சாலை வழியாக சென்றேன் அப்போது வழி எங்கும் நிறைய பேர் உறங்கிக்கொண்டு இருந்தார்கள் சில இளைஞர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். என்னடா இது இந்த பனியிலும், கொசுக்கடியிலும் இங்கு உறங்குகின்றார்களே என்ற சந்தகத்தோடு நிகழ்ச்சியை காண சென்றேன்.

நிகழ்ச்சி முடிந்து திரும்ப அவிநாசி சாலை வழியாக வரும்போது நிறைய பேர் காவல் பயிற்சி பள்ளியை ஒட்டி ரெசிடென்சி ஒடடல் வரை வழியெங்கும் அதே கொசுக்கடியிலும், பனியிலும் உறங்கிக்கொண்டு இருந்தனர். வண்டியை மெதுவாக்கி நின்று கொண்டு இருந்த இளைஞர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். இன்று காலை நடக்கும் உடற் தேர்விற்கு வந்தவர்கள் என அறிந்தேன். வேலைக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு தேர்விற்கு வந்தவர்கள் எல்லாம் தேர்வு பெற வேண்டும் என வேண்டுவோம்...


**************************


செய்தித்தாளில் கோவையில் நடந்த ஒரு நிகழ்வைப் படித்து ரொம்ப நொந்து போனேன் காரணம் விபச்சார ரைடில் கைதான 3 பெண்களும் தற்போது படித்துக்கொண்டு இருப்பவர்கள். ஒவ்வொருவரும் சொல்வது ஒரு காரணம் இதில் மிக கேவலமானது தன்னை மிரட்டி பணம் பறிக்கும் காதலனால் விபச்சாரத்துக்கு போனது ரொம்பவே பாதிக்கிறது.

காதலிக்கும் போது காதலனுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்ததால் இந்த வினை. இந்த கால பெண்களுக்கு அதுவும் படித்த பெண்களுக்கு ஒரு பிரச்சனையில் சிக்கினால் அதில் இருந்து வெளியே வரத்தெரியவில்லை என்றால் தன் பெற்றோரிடம் உண்மையை சொல்லி இருந்தாலாவது நிச்சயம் காப்பாற்றி இருப்பார்கள்.

தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதிவும் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தேவை இல்லாத பயம் காரணமாக இன்று இப்படி ஒரு பழி சொல்லுக்கு ஆளான அந்த பெண் மேல் பரிதாபப்படுவதா? அந்த பெண் செய்த தவறுக்கு தண்டனை என்பதா? படித்திருந்தும் விழிப்புணர்வு இல்லை என்பதா? இப்படி பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் போகலாம்.

இவள் தான் அந்த பெண் என்ற அறிந்தவர்களுக்கு, நிச்சயம் இந்த சமூகம் மீண்டும் அதே பாதையில் தான் தள்ளும்.
 
**************************
 
மகளிர் தினத்துக்கு மகளிருக்கு விடுமுறை விட்டு அவர்களை அன்று கொண்டாடவேண்டும் என்பது எல்லாம் சரி தான். அதற்காக காத்தால இருந்து சமைச்சு, வூட்டப்பெறுக்கி, சமைச்ச பாத்திரத்தை எல்லாம் நீ தான் கழுவனும் என்று எல்லா வேலையையும் என் தலையில சாத்தி வேலை வாங்குவது நியாயமா? என்று கேட்டால் ஆண்கள் தினத்தன்று நீங்க ஜாலியா இருங்க அன்னிக்கு வூட்டுல நீங்க என்ன வேலை செய்யறீங்களோ அதை எல்லாம் நான் செய்கிறேன் என்று பன்னு கொடுத்து பக்குன்னு உட்கார வெச்சிட்டாங்க நேத்து என் தங்கமணி...
 
 **************************
 
குழந்தையின் உணவு விசயத்தில் மிகுந்த அக்கறை இல்லாமல் தான் இருப்பேன். பசிச்சால் சாப்பிடுவான் அவனை ஏன் தொந்தரவு செய்கின்றீர், என வீட்டில் உள்ளவர்களை சத்தமிடுவேன். செல்ல மகனோ அவனுக்கு பிடிச்சதை சாப்பிடுவான், அவனை அவன் போக்கில் விடுங்க குழந்தைக்கு என்ன ஆகப்போகிறது என்று தான் எப்போதும் பேசுவேன்..

சத்தான ஆகாரங்களை சாப்பிட்டாலும், எல்லா ஆகாரங்களிலும் எல்லா சத்தும் கிடைப்பதில்லை. பழங்கள் சாப்பிட அவனுக்கு பழக்கும் போது மாங்காய் மட்டும் தான் அவனுக்கு பிடித்தது என்பதால் எப்போதும் மாங்காய் வாங்கி தருவேன். பின் கமலா ஆரஞ்சு சாப்பிடுவான். அதுவும் அவனுக்கு பிடித்திருந்தால் அல்லது மூடு இருந்தால் தான் சாப்பிடுவான். நாங்களும் கட்டாயப்படுத்துவதில்லை.

குழந்தை ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற கனவு எல்லா பெற்றோரை போல எனக்கும் உண்டு. நான் சாப்பிடும் ஆகாரங்களை சாப்பிட பழக்குவேன், அதன் அருமை பெருமைகளை கூறுவேன் ஆனாலும் என் மகன் அதை எனக்கு வேண்டாம் என்று தான் ஒதுக்குவான்..

நேற்று என் கனவில் மண்ணை போடும் நாள் என்று நான் சற்றும் கூட எதிர்பார்க்கவே இல்லை, ஆம் அவனது பள்ளி ஆசிரியை தங்கள் மகன் கடந்த 10 நாட்களாக சரியாக எழுதுவதில்லை, எப்போதும் நன்றாக எழுதுபவன் தற்போது எழுத மறுக்கிறான் என்றார்கள். எனக்கு என்னமோ அவனின் பார்வை குறைபாடு உள்ளது போல இருக்கிறது மருத்துவரிடம் பாருங்கள் என்றார்.

ஆரோக்கியமாக வளர்த்தவேண்டும் அவனுக்கு பிடித்த விளையாட்டை விளையாட வைக்க வேண்டும் என்று இருந்த கனவெல்லாம் பொய்த்தது போல இருந்தது. அதை விட எங்கள் வீட்டில் யாருக்கும் கண் பிரச்சனை சுத்தமாக இல்லை இந்த 5 வயதில் பார்வை குறைபாட? என என்னை அறியாமல் கண்ணீர் தான் வந்தது.

மாலை மருத்தவரிடம் சென்றால் ஆம் பார்வை குறைபாடு தான் வைட்டமின் A குறைபாடுதான். கண்ணாடி போட வேண்டுமா? இல்லை உணவில் சரிபடுத்த முடியுமா? என்று மருந்து ஊற்றிதான் பார்க்கவேண்டும். சனி ஞாயிறுகளில் வாங்க என்று அனுப்பிவிட்டார்கள்..

ஒழுங்காக உணவுப்பழக்கத்தை பழக்கப்படுத்தி இருந்தால் இன்று இந்த நிலை வராது தான். மருத்துவ தொழில்நுட்பம் நிறைய வளர்ந்து விட்டது பார்க்காம் இனி என்ன நடக்கும் என்று...

இந்த வயதில் கண்ணாடியா என்று கலங்கிக்கொண்டு இருக்கிறேன்.. வைட்டமின் A பிரச்சனை தான் ஆகாரத்தில் சரி செய்திடலாம் என்று மருத்துவர் சொல்வார், சொல்லவேண்டும் என்று எல்லா கடவுளையும் பிராத்திக்கிறேன்.

 **************************
 
சிக்னலில் நின்று பிச்சை எடுப்பவர்கள் மேல் பரிதாபம் வராது, நல்லாத்தானே இருக்கிறான் உழைச்சு சாப்பிட்டால் என்ன என்று தோன்றும், அதுவும் மிக வயதானவர்களாக இருந்தால் வண்டிகளின் இடையில் புகுந்து வந்து பிச்சை கேட்கும் போது கோபம் தான் வரும். சிக்னல் போட்டால் என்ன ஆவதுன்ன யோசிக்கவே மாட்டேன் என்கின்றனரே என்று.

சிக்னலில் பிச்சை கேட்பதற்கு பதில் சின்ன சின்ன விளையாட்டுப்பொருட்களை விற்பனை செய்வார்கள் இது கூட பரவாயில்லை என்று தோன்றும், பிச்சை எடுப்பதற்கு பதில் உழைக்கிறார்களே என்று.

இரவு 7 மணி இருக்கும் வீட்டிற்கு வந்த உறவினர்களை வழிஅனுப்ப லஷ்மி மில் பேருந்து நிறையத்தில் நின்று கொண்டு இருந்தேன். சிக்னலில் பொம்மை விற்கும் பையன் ஒரு உயர்தர காரை துரத்திக்கொண்டு ஓடினான், அந்த கார் நிற்காமாலே சென்று விட்டது. பின்பு திரும்பி வந்த பையன் திட்டிக்கொண்டே வந்தான். என்ன என்று பார்த்தால் 3 பொம்மைகள் வாங்கி உள்ளனர் காரில் உள்ளவர்கள் ஆனால் பணம் எடுப்பதற்குள் சிக்னல் விழுந்துவிட்டது. பரவாயில்லை என்று வண்டியை கொஞ்ச முன் சென்று ஓரம் கட்டி பணம் கொடுத்திருந்தால் மனிதாபிமானம் மிக்கவர் என்று சொல்லலாம்.

சிக்னல் போட்டதே போதும் என்று அந்த 3 பொம்மைக்கும் பணம் கொடுக்காமல் செல்லும் இந்த உயர்தர காரில் சொகுசாக பயணிக்கம் இவர்களை என்ன சொல்ல... பிச்சை எடுப்பதற்கு பதில் உழைத்து வாழ நினைக்கும் இவர்களை இந்த மாதிரி செய்வதால் தான் அவர்கள் விரக்திக்கு சென்று மேலும் தவறுகளை செய்ய உந்துகிறார்கள்..

3 comments:

  1. Give your kid fish head (particularly eye) and liver atleast twice a week to improve eye sight.

    ReplyDelete
  2. பிரார்த்திக்கிறேன்...

    கவலைப்பட வேண்டாம்...

    ReplyDelete
  3. வணக்கம்

    அருமையாக உள்ளது தவல்கள் ஒவ்வொன்றும் கை கால் நல்லா இருந்து பிச்சை எடுப்பது தப்பு.. உழைத்து வாழ்வதே மேல். பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete