Sunday, August 24, 2014

ஜிகர்தண்டா ( இது சினிமா விமர்ச்சனம் அல்ல)



இன்று மாலை படம் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து, எந்த படத்துக்கு செல்வது என்று எங்க வீட்டில் பொதுக்குழு போட்டு முடிவெடுக்கும் போது,  அஞ்சான் தான் போக வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர் எங்க வீட்டு பொதுக்குழு தலைவி. நான் படம் பார்த்தது வீட்டுக்கு தெரியாது, சோ அமுக்கி அமர்ந்து வேடிக்கை பார்த்தேன், படத்தை பற்றியான அறிக்கையும், இணையதள விமர்ச்சனமும் சொல்ல மனது துடிக்குது ஆனாலும் சொல்ல முடியல, சரி டிக்கெட் வாங்கி வரேன் என்று சென்றேன். 

இன்னொரு முறை இதை பார்க்கவேண்டுமா என என்னி செந்தில் தியேட்டரில் டிக்கெட் வாங்காமல் பக்கத்து குமரன் தியேட்டரில் ஜிகர்தண்டாவுக்கு டிக்கெட் வாங்கி வந்துட்டேன். வீட்டின் பொதுக்குழுவின் முடிவை எதிர்த்த நடந்து கொண்டதால் எப்படி எதிர் கொள்வது என்று தடுமாறி நிற்கிறேன்.. இன்றைக்கு எனக்க இருக்கு....

இந்த மன நிலையிலேயே அஞ்சான் தான் பார்ப்பேன் என அடம்பிடிச்ச என் தங்கமணியிடம், ஜிகர்தண்டா பற்றி சொல்லாமல் தியேட்டருக்கு அழைத்து சென்றேன். அங்கே போன பின்பு தான் டிக்கெட்டை பார்த்த என் தங்கமணி செம்ம காண்டு, கார் ஓட்ட தெரியும் என்பதால் சாவியை கையில் எடுத்து என்னை முறைக்க, அட வாங்க வாங்க நேரம் ஆச்சு என்று நான் புக் செய்திருந்த Queen circle க்கு அழைத்துச்சென்றேன்.

உள்ளே போனதும் படம் போட்டதால் அக்னிப்பார்வையில் இருந்து தப்பித்தேன், சோப செட்டில் உட்கார்ந்து படம் பார்த்தும் திரும்பி ஒரு சிரி சிரிக்க முடியல. தங்கமணியின் ஆஸ்தான நாயகன் படத்துக்கு கூட்டிச்செல்லாததால் என் மேலே செம்ம கோபமாம். ஜிகர்தண்டாவை பார்த்த தங்கமணி கொஞ்சம் கொஞ்சமாக சிரிக்க, எனக்கும் படம் செம்ம இன்ட்ரஸ்டிங்காக சென்றது. இடைவேளையில் எனக்கு ஒரு ஐஸ்க்ரீம் மட்டும் போதும் என சொல்ல, அப்பவும் கோபத்தை குறைச்சிக்கல.

இடைவேளைக்கு பின் ஜிகர்தண்டாவுக்கு தியேட்டரில் செம்ம க்ளாப்ஸ். ஒரே சிரிப்பலை தான். வில்லன் செய்யும் அட்டகாசங்களும் அவன் ஆடும் ஆட்டங்களும் செம்ம.. இடையே என் பழைய சைட்டு அதுதாங்க படத்தின் ஹீரோயின் லஷ்மி மேனன் சும்மா வந்துட்டு வந்துட்டு போகுது. பட் நான் இந்த தடவை ரொம்ப சைட் அடிக்கல.. எனக்கு இந்த படத்தில் நொம்ப பிடிச்சது வில்லன் தான், அசால்ட்டா பட்டையக்கிளப்பி இருக்கறாது மனுசன். பிடம் ரீலிசுக்கு அவர் செய்த அலப்பறையும், படத்துக்கு அவர் வரும் அலப்பறையும் செம்ம க்ளாப்ஸ்..

படம் வெளியாகும் அன்று தியேட்டரில் டைரக்டர் மக்களின் கைதட்டலுக்கு காத்திருக்கும் அந்த இடம் மனதை வருடியது. இப்படித்தானே புதிதாக படம் எடுக்கும் டைரக்டர் எல்லாம் தனது படத்திற்கு மக்களின் விமர்ச்சனம் என்னவாக இருக்கும் என்று முதல் நாள் முதல் ஷோவிற்காக காத்துக்கிடப்பர். அந்த முதல் காட்சியில் வைத்த டிவிஸ்ட் செம்ம. அங்க தான் நம் மனதில் மிக இடம் பிடிச்சுட்டார் டைரக்டர்.

இந்த சந்தோசத்தில் என் மேலே கோபமாக இருந்த என் தங்கமணி பக்கம் திரும்பி பார்த்தேன் அம்மிணிக்கு செம்ம சந்தோசம். நான் தங்கமணியை பார்ப்பதை கவனித்த அவள் ஓவரா வலியாத, அங்க  உன் சைட்டு லஷ்மி மேனன் வந்திருக்கா அவளையே பாரு என ஒரு பிதுக்கு பிதுக்கினாள். இது என் பழைய சைட்டு இப்ப என் சைட்டு நயன்தாரா என்று சொல்லி ஒரு இடி வாங்கியது தான் மிச்சம்...

படத்தில் சண்டைக்காட்களே இல்லை, முக்கியமாக பாதி உடை அணிந்த குத்தாட்டம் இல்லை, ஒவ்வொரு காட்சி அமைப்பும் செம்ம, அந்த வில்லனின் பாடி லேங்வேஜ், காமெடி நடிகரின் கலக்கல் காமெடி என படம் பட்டையக்கிளப்புது. புது முக இயக்குநருக்கு ஒரு க்ளாப்ஸ் பாஸ்...

படம் முடிஞ்சு வெளியே வரும் போது தங்கமணி பக்கத்து தியேட்டரில் போஸ்டரை பார்த்துட்டு உம் என்று வந்தவள் ( சூரியாவ பார்க்க முடியலின்னு கோவம் போல) காரில் ஏரியதும் படம் நல்லா இருக்குல. அதுக்குள்ள முடிஞ்சிடுச்சு, ஒரு காட்டுக்கத்தல் இல்ல, பாரீன் டூயட் இல்ல, பத்து பஞ்ச் டயலாக் இல்லாம, முழுமனதாக படம் பார்த்த திருப்திப்பா... சோ... நொம்ப நன்றி... இந்த படத்துக்கு அழைத்து வந்ததற்குப்பா....
சுபம்.....

1 comment: