Tuesday, August 5, 2014

பரபரப்பான நேரத்திலே...

அவிநாசி ரோட்டில் உள்ள நாட்டுடமையாக்கப்ட்ட வங்கிக்கு அரக்க பறக்க சென்றேன். பத்து நிமிட பர்மிஷனில் வேலையை முடிச்சிட்டு ஓடனும் என்ற வேகமும், சொன்ன நேரத்துக்கு அலுவலகத்துக்கு போகவேண்டும் என்ற மனஓட்டமும் எண்ண ஓட்டமாக மாறி இருந்தது.

பரபரப்பாக இருந்த அந்த வங்கியில் தானியங்கி டோக்கன் வாங்கும் போது என்னுடைய டோக்கன் எண் 73, வரிசையில் 55வது டோக்கன் போய்க்கொண்டு இருந்தது. அப்படியே அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்த வாரே எனது படிவத்தை பூர்த்தி செய்தேன். ஒரு குழந்தை தன் தாயின் மடியில் தவழ்ந்து கொண்டு இருந்தது, ரிட்டேர் ஆன மூத்தவர்கள் எல்லாம் தங்கள் வரிசையை எதிர் நோக்கி காத்திருந்தனர். எங்கு சென்றாலும் அங்கு யாரையாவது தேடி அவர்களை நோக்குவது நம் பழக்கமாக இருந்ததால் சுற்றி சுற்றி பராக்கு பார்த்தேன்... ம்கும் இன்னிக்கு கண்ணுக்கு குளிர்ச்சி இல்லை என்று ஆண்டவன் சொல்லிட்டான்ன போல, பசுமையே இல்லாமல் வறண்டு இருந்தது அந்த இடம்.

அவ்வப்போது கவுண்டரில் யார் பேரையாவது அழைத்து பேசிக்கொண்டு இருந்தனர். செக்புக், பாஸ்புக் என மிக பரபரப்பாக இருந்த வேளையில் தான் நம்ம ஹீரோ உள்ளே வந்தார். ஆள் நன்கு வாட்டசாட்டமாக எல்லாம் இல்லை பட் தோல் வெள்ளை, இவரைப்பற்றி விளக்க வேண்டும் என்றால், நம்ம ஊருக்கு பீகாரிங்க பெட்சீட் விற்க வருவாங்கதானே அவுங்களைப்போல இருந்தான். பட் அவனது உயர்தர ஆடையும், உயர்தர சென்டும் கலக்கியது.
டோக்கனை எடுத்து என் அருகில் அமர்ந்தவன் உங்க டோக்கன் எண் என்ன சார் என்றான் 73 என்றேன், ஓஓ.. என்னுது 80 இன்னும் 20 நிமிடம் ஆகும் போல என்று பேசிக்கொண்டே அவனது ஆப்பிளில் மூஞ்சி புத்தகத்தை நோண்ட ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் ஒரு கெட்ட வாடை அடித்தது, பக்கத்தில் இருப்பவர்கள் என்னைப்பார்க்க, நான் திரு திரு வென விழித்தேன். பெரிதுங்க எல்லாம் மேலேயும் கீழேயும் பார்த்து விழித்தனர். வாடை அதிகமாக அதிமாக என்னால் உட்கார இயலவில்லை. எங்கிருந்து வருகிறது என பார்க்க. நம்ம ஹீரோ 3500 ரூபாய் வுட்லேண்ட் சூவில் இருந்து காலை வெளியே எடுத்து கால் மேல் கால் போட்டு இருந்தார். நாங்க எல்லாம் மூக்கு மேல் இரண்டு கையையும் பொத்தி இருந்தோம்.

இவ்வளவு காசு போட்டு வாங்குறவன்,  10ரூபாய்க்கு தண்ணி வாங்கி அதை துவைக்கமாட்டான் என யோசிக்கும்போது டோக்கன் 65 தான் போய் இருந்தது.
கப்பு முடியாமல் வெளியேற எத்தனிக்கும் போது அந்த பெட்சீட் விற்பவனை பார்த்தேன் மனுசன் அம்புட்டு கப்புலியும் ஒன்னுமே இல்லாதது போல உட்கார்ந்திருந்த அவன் நேர்மையை என்னவென்று சொல்வது...

3 comments:

  1. அதான் அவ்வளவு சென்டா? ஹா..ஹா..ஹா..

    ReplyDelete
  2. அடப்பாவி! அஞ்சு நிமிசத்துல கூட்டத்தை கலைச்சுட்டான் போல! ஹாஹாஹா!

    ReplyDelete
  3. வெள்ளயா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல வெள்ளையா இருக்கிறவன் சுத்தமா இருப்பான் என்பது இன்னொரு மூட நம்பிக்கை போல.

    ReplyDelete