Thursday, July 24, 2014

மனம் நிறைந்து சினிமா பார்க்கலாம் இங்கு.

செந்தில், குமரன் தியேட்டர், கோவை

நீண்ட நாட்களுக்கு பிறகு வார நாட்களில் படம் பார்க்க நேற்று வாய்ப்பு கிடைத்தது. வீட்டுக்கு அருகில் இருக்கும் தியேட்டருக்கே போகலாம் என யோசித்த போது நண்பர் பாலாஜி குப்தா செந்தில் தியேட்டருக்கு போங்க பெஸ்ட் ஆக இருக்கும் என்றார். 

வேலையில்ல பட்டதாரி படத்துக்குத்தான் செல்லவேண்டும் என்று என் இன்ஜினியர் மனைவி சொன்னதால் சரி என்றேன். ஊருக்குள்ள இந்த மால்கள் வந்த பின் எப்பவாவது பார்க்கும் ஒரு படத்தையும் மால்களில் தான் பார்ப்போம், டிக்கட்டுக்கு 450, பாப்கார்ன், பப்ஸ், பெப்சி என்று 500, பார்க்கிங்கிற்கு 50 என 3 பேருக்கு 1000 செலவாகிடும். இதற்காகவே எப்போதாவது ஒரு படம் பார்ப்போம்.

நேற்று செந்தில் தியேட்டருக்கு 2 மணி காட்சிக்கு டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்று தான் சென்றேன். Queen circle 85, King circle 80. first class 50 என்று விலைப்பட்டியல் இருந்தது. கவுண்டர் சென்றால் கிங் சர்க்கில் தான் இருக்கிறது என்றனர் அதுவும் 2 டிக்கெட்தான் என்றதும் சரி என்று படத்திற்கு சென்றேன். தியேட்டர் சுத்தமாகவும், அழகாகவும் இருந்தது. படம் போடுவதற்கு முன் திரை அப்படியே மேலே செல்லும், அதை ஈரோடு அபிராமி தியேட்டரில் நீண்ட நாட்களுக்கு முன் பார்த்த ஞாபகம். 

தியேட்டரின் சுத்தம் தான் எப்போதும் முக்கியம், அந்த சுத்தத்தை அந்த தியேட்டரில் பார்த்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. முக்கியமாக கழிப்பறை மாலைகளில் உள்ள கழிப்பறைகளை விட மிக சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுவதில் மகிழ்ச்சி. தியேட்டருக்குள் உச்சா வந்தால் அந்த கப்பிற்காகவே உச்சாவை அடக்கி வந்து காலமெல்லாம் எங்க ஊர் தியேட்டரில் படம் பார்க்கும் போது நிகழ்ந்தது உண்டு.

மிக முக்கியமாக  திண்பண்டங்கள், நிச்சயம் நிறைய பேர் மால்கள் மற்றும் பிற சினிமா தியேட்டருக்கு சென்று, திண்பண்ங்களை வாங்கும் போது மனசு நிறைஞ்சு பணம் கொடுத்திருக்கமாட்டோம், நான் மட்டுமல்ல இங்கு நிறைய பேர் கொடுத்திருக்க மாட்டீங்க, ஒரு பெப்சி 60 ரூபாய், ஒரு பாப்கான் 125 சொல்கிறான் என்று மனதார திட்டிகிட்டுத்தான் வாங்கி இருப்போம், அதில் படத்துக்கு செல்லும் போதோ நம்ம பைய அவர்கள் வாங்கி சல்லடை போட்டு தேடும் படலம் எல்லாம் நடக்கும். இதை எல்லாம் சகிச்சிகிட்டு தான் நாம் படம் பார்க்கிறோம் இல்லை என்று யாரும் மறுக்க இயலாது.

ஆனால் இந்த தியேட்டரில் பாப்கான் 15, ஐஸ்கிரீம் 15, பப்ஸ் 12, காபி 10 என அனைத்து பொருட்களும் 15 ரூபாய்க்கு மேல இல்லீங்க இது தான் ஆச்சயர்மான உண்மையும் கூட. எதோ ஒரு தியேட்டரில் பப்ஸ் 50 ரூபாய்க்கு வாங்கி திட்டிகிட்டே திண்ணு அனுபவம் உண்டு. ஆனால் நேற்று பாராட்டிகிட்டே சாப்பிட்டேன். படம் முடிந்த பின் அந்த ஸ்கிரீனை கீழே இறக்கியது அந்தநாள் ஞாபகத்திற்கு கொண்டு போய்விட்டது..

சுத்தமாகவும், சுகாதராமாகவும், தரமாகவும், விலைகுறைவாகவும் நிம்மதியாக படம் பார்க்கவேண்டும் என்றால் நம்பி செல்லலாம் இந்த தியேட்டருக்கு...

எல்லா தியேட்டரும் இப்படியே இருந்தா நிச்சயம் மக்கள் விசிடியை தேடாமல் தியேட்டரை நோக்கி படை எடுப்பார்கள்...



2 comments:

  1. வணக்கம்
    உண்மைதான்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உண்மைதான்! தியேட்டர் அசுத்தம், பொருள்களின் தாறுமாறான விலைகளால்தான் நான் சினிமா பார்ப்பதையே விட்டுவிட்டேன் எனலாம்!

    ReplyDelete