Friday, July 18, 2014

எடுறா இரண்டாயிரம் ரூபாயை...

அலுவலக இடைவேளை நேரத்தில் செல்போனை கையில் பிடிச்சு செவுத்தில் சாய்ந்து, கிடைக்கும் 5 நிமிடத்தையும் உச்சா கூட போகாம நேரத்தை பயன் படுத்துகின்றனர் நம் ஆட்கள். அவர்கள் பேசுவது அவர்களின தனிப்பட்ட உரிமை தான் இதை நீங்களும் நானும் கேட்டா, போட கேனப்பையான்னு திட்டத்தான் செய்வானுக.

இப்படி அடிக்கடி அலுவலகத்தில் ஓதுங்கி பேசும் ஒருவனைப் பார்ப்பேன், அவன் பக்கத்து அலுவலகம் தான், ஆனாலும் அவ்வப்போது அவன் கொஞ்சி, அழுது பேசுவதை நான் கொஞ்சம் ரசிச்சு பார்த்து, சின்ன ஸ்மைலியோட சென்று விடுவேன்.

6 மணிக்கு அலுவலகத்தை விட்டு ஓடும் ஆட்களில் நான் முதல் ஆள். வண்டிய எடுத்து தலைக்கவசத்தை அணியும் போது, அந்த பையன் போனை எடுத்து, தலைக்கவசத்தின் உள் வைத்து பேசிகிட்டே சென்றான். ஏந்தம்பி பேசிகிட்டே வண்டிய ஓட்டுகிறாய் என்று யார் கேட்கமுடியும், கேட்டா போட வெண்ணெய் என்பான்.

2 நிமிடத்திற்கு பின் எப்பவும் போல என் வீட்டுக்கு செல்ல ஆயுத்தம் ஆனேன். சில நாட்களாக சாரல் மழையாக இருந்த கோவையில் நேற்று தான் சூரியன் எட்டிப்பார்த்தது. அப்படியே அலுவலக கேட்டிற்கு என் யமாஹாவைக் கிளப்பி வந்து நின்றேன். பக்கத்தில் இருந்த பள்ளி மாணவிகள் எல்லாம் அவர்களுக்கு பிடிச்ச தோழிகளோடு சிரித்து சிரித்து கூடவே தலைக்கவசத்துடன் இருந்த என்னையும் நமட்டு சிரிப்பு சிரிக்க வைத்தனர்.

சிங்கத்தை சிலிப்பி வண்டியை முறுக்கினேன், எங்கிருந்தோ சைக்கிளில் வந்த ஒருவன் அந்த பெண்களை கடக்கும் போது கையை நீட்டினான் அந்த பெண் லபக் என்று வாங்கி பள்ளி பாட மூட்டையில் திணித்தாள்.. ஆஹா 2014லிலும் காதல் கடுதாசி கொடுத்து காதலிக்கிறானே என்று மிக ஆச்சர்யம். அந்த காதலை வாழ்த்த வேண்டும் போலத்தான் இருந்தது. இந்த காதல் கடிதத்தை நானும் நிறைய எழுதி, நிறைய பேர்க்கு கொடுத்திருந்தாலும் ஒருத்தியும் என்னை காதலிக்கவில்லை என்பது தனிக்கதை. இந்த பேஸ்புக், டிவிட்டர், செல்போன் கலாச்சாரத்தில் காதல் கடிதம் என்பது நிறைய மகிழ்ச்சியை தந்தது. வாழ்க அந்த கடிதக்காதல்.

மீண்டும் சிங்கத்தை சிலிப்பி எஸ்என்ஆர் காலேஜ் தாண்டி பாப்பாநாயக்கன் பாளையத்திற்கு வண்டியை திருப்பினேன், மகன் வந்திருப்பான் அவன வீட்டு பாடம் எழுத வைக்க இன்னிக்கு என்ன பொய் சொல்லாம் என்று யோசிச்சிகிட்டே வந்தேன். சில முக்கிய முடிவுகள் இப்படித்தான் எடுக்க முடிகிறது. தனியோ யோசிச்சுகிட்டு போற ஒரே இடம் பயணம் தான். கவனத்தை சிதறவிடாதே, அப்புறம் நீ சிதறிவிடுவாய் என நீங்க நினைக்கறது புரியுது, எப்பவும் 40க்கு மேலே எண் சிங்கம் சீராது, சீரவும் விடமாட்டேன் அப்படி ஒரு கட்டுப்பாடு.

சிங்கம் திரும்பியதும் வேகத்தடைக்கு பக்கத்தில் நிறைய கூட்டம், நமக்குத்தான் ஊராம் வீட்டு விசயம் என்றால் மூக்க தூக்கிட்டு போய் அது என்ன நாத்தம் என்று பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராதே. வண்டியை நிறுத்தி இறங்காமல் வேடிக்கை பார்த்தேன், ஓர் அழகான ஆண்டி வந்து என் முன் நின்றது, அதன் முடி முட்டியை தாண்டி நின்றதால் ஒரு நிமிடம் சண்டையை விட்டு விட்டு ஆண்டடிய பார்க்க ஆரம்பித்தேன். தலைக்கவசத்தை கழட்டி ஆண்டடியிடம் பேசி விட வேண்டும் என்று கழட்டும் போதே அந்த ஆண்ட்டி அந்த குழந்தை மேல தான் தப்பு, இவுங்க விடாம சண்டை போடுறாங்க பாருங்க என்றதும், ஆஹா இது தான் சாக்கு என்று அப்படீங்களா என்று கதை கேட்ட ஆரம்பித்தேன், ஆண்டியின் நீள முடியை ரசிச்சபடியே..

இருசக்கர வாகனத்தில் மெதுவாகத்தான் வந்திருக்கிறான், வேகத்தடை இருந்ததால் மெதுவாகத்தான் வரமுடியும், வேகமாக வர வாய்ப்பு இல்லை, ஒளிஞ்சு விளையாட்டு விளையாடிய பாப்பா ஓடி வந்து வண்டிக்குள் விழுந்து விட்டது இது தான் மேட்டர். அந்த பெண்ணுக்கு கையில் சிராய்ப்புடன் கூடிய காயம் மட்டுமே பட் 2000 கொடு இல்லை என்றால் வா ஆஸ்பத்திரிக்கு போகலாம் அந்த ஸ்கேன், இந்த ஸ்கேன் என்று இவர்கள் போட்ட பிட்டில் பையன் திரு திரு என்று விழித்து நின்றான்.

நான் வண்டிய விட்டு இறங்கிய அவன் மேல தப்பு இல்லை என்று சொல்லனும் என்று என் மனசு துடிச்சது, கூட ஆண்டடி வேற இருக்கிறாங்க என் தைரியத்தை காட்டவேண்டும் என்று வேகமாக இறங்கினேன், ஆண்டி வேண்டாம் தம்பி நமக்கேன் வம்பு, அவுங்கள பார்த்தா பணம் வாங்காம விட மாட்டாங்க போல, நாம பொழப்ப பார்ப்போம் என்றது, எனக்கும் அது தான் சரி என பட்டது. நாம நியாயம் கேட்க போய், அவர்கள் நிறைய இருந்தாங்க, நம்மள ரெண்டு வீசினால் நாம் அடிவாங்கி ஓட வேண்டும் என்று  நம்ம ஊர் சராசரி மனது நினைத்தது, வா வீட்டுக்கு போகலாம் என்றும் சொன்னது மனசு, ஆண்டியிம் கிளம்பி விட்டது.. நானும் கிளம்பிட்டேன்..

அப்போது கூட்டத்தில் சத்தமாக கேட்டது உனக்கு வேண்டாம் எனக்கும் வேண்டாம் எடுறா 2000 ரூபாயை....

5 comments:

  1. சில விஷயங்களில் நம்மால் பரிதாபப்படவே முடிகிறது!

    ReplyDelete
  2. வணக்கம்
    கதை நகர்வு நன்றரக உள்ளது

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அடி வாங்க பயந்தீங்களா!? ஆண்டி போகுதேன்னு கிளம்பினீங்களா!?

    ReplyDelete
  4. நல்ல கோர்வு, அருமையான பதிவு...

    ReplyDelete