Sunday, June 29, 2014

பரபரப்புக்கு பஞ்சமில்லை நம்ம ஊரில்...

தினமும் ஊடகங்களின் பரபரப்புக்கு தீனி கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது. இன்று ஒரு பிரச்சனை அதைப்பற்றியான நேரடி ஒளிபரப்புக்கள், யார் மீது குற்றம், இதற்கு என்ன தேர்வு என அந்நாள் முழுவதும் நம்மை கட்டிப்போடுகின்றனர். அடுத்த நாள் வேறு ஒரு பிரச்சனை வந்ததும் நம்மை அந்த பிரச்சனைக்கு அழைத்துப்போகின்றனர், முந்தியநாள் பிரச்சனைக்க தீர்வு கிடைச்சுதா இல்லை கிடைக்குமா என்ற பாலே அப் செய்திகளை காணுவது அரிது. அப்படியே பாலே அப் வந்தாலும் இரண்டு நாட்களுக்குத்தான் அதற்கான தீர்வு நிச்சயம் கிடைத்தபாடில்லை என்று தான் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக நம்மை கட்டிப்போட்ட விசயம் 11 மாடி குடியிருப்பு கட்டப்படும் போதே தரைமட்டம் ஆனது. இதற்கு யாரை குற்றம் சொல்ல, அந்த இடத்தை அப்ரூவல் செய்தவரையா, கட்டிடம் கட்டுபவரையா, அதற்கு அனுமதி கொடுத்தவரையா என்று ஒரு பக்கத்துக்கு கேட்டுகிட்டே போகலாம், ஆனால் இதற்கு முடிவு நிச்சயம் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

இதற்கிடையே டிவி பேட்டியில் பொதுமக்கள் அப்படியே விழுந்தது என்கின்றனர், இடையில் புகுந்த சில பேர் இடி விழுந்ததால் கட்டிடம் நொறுங்கியது என்கின்றனர். இந்த கட்டிடம் கட்டிய மேலாளர் ஒருவர் இடி விழுந்ததற்கு நான் எப்படி சார் பொறுப்பாக முடியும் என்று அந்த பருப்பு வாய் கூசாமல் சொல்கிறது. அதுவும் அந்த இடத்தில் பலத்த மழை இல்லை என்ற தகவல் தான் அனைத்து மீடியாக்களும் சொல்கின்றனர். சொத்தை மழைக்கே பில்டிங்க இடியும் போது புயல் மழை பெய்தால் நிலமை மோசமாகி இருக்கும்.

இப்போது எல்லாம் பூமி பூஜை போடும் போதே வீட்டை விற்கின்றனர். இப்படித்தான் கோவையில் நிறைய விளம்பரங்கள் கொடுத்து, வீடு 30 இலட்சம் என்று இருந்தது, குறைந்த வீடுகளே உள்ளன, புக்கிங் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று மிக கவர்ச்சியான விளம்பரங்கள், விளம்பரங்கள் அனைத்தும் அழகாக வடிவமைக்கப்பட்டு பார்த்த உடனே வாங்கனும் போல இருந்தது. பாழப்போன நடுத்தர வர்க்கத்து மனசு சும்மா இருக்குமா உடனே எப்படியாவது வாங்கிடலாம் என்று நானும் குடும்பத்தில் இருக்கும் எல்லாத்தையும் அழைத்து போகலாம்ன்னு முடிவு செய்திட்டேன்.

அந்த சீட்டை எடுத்த இம்புட்டு பணம் வரும் மீதிக்கு நகைய அடகு வெச்சிக்கலாம் மீதி பாதிக்கு லோன் போட்டுக்கலாம் என்ற டாக்குமெண்ட் எல்லாம் தயார் செய்துவிட்டு எல்லாரும் வீடு பார்க்க போறத அக்கம் பக்கம் வீட்டுக்கும், ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் போனை போட்டு சொல்லிட்டேன் அம்புட்டு சந்தோசம், ஜிம், நீச்சல்குளத்தோடு வீடுன்னு பெருமை பீத்திக்கிறதில் அடிச்சுக்கு முடியுமா. அந்த அளவிக்கு பீத்திட்டு அடுத்த நாள் காலை எல்லாரையும் கூட்டிகிட்டு, வீடு வாங்குற இடத்துக்கு போனோம், அவன் சொன்னதில் இருந்து 2 கிலோ மீட்டர் அதிகம் போனதுக்கு பின் அந்த இடம் வந்தது, எங்களைப்போலவே நிறைய கார்கள் இருந்தன. இறங்கியதும் நறுக்குன்னு நாலு அரேபியன் குதிரை மாதிரி பிகருங்க வாங்க வாங்க என்றதும் என்க்கு ஜிவ்வின்னு ஆகிவிட்டது.

அப்புறம் ஒரு இருட்டு அறைக்கு கூட்டிட்டு போனாங்க ( வேறு மாதிரி கற்பனை வேண்டாம் பாஸ்) அங்க போய் வீடு எப்படி இருக்கும் என்று டேமோ காட்டினாங்கா. அரேபியன் குதிரை வந்து வீடு பிடிச்சிருக்கா சார் என்றது. ம்ம்ம் என்று மண்டைய ஆட்டிகிட்டே நின்னேன். உங்களுக்கு எந்த தளம் பிடிச்சு இருக்கு என்றதும். 2 வது த்ளம் என்றேன் வாங்க பார்க்கலாம் என்று கூட்டிட்டுப்போனாங்க. நானும் வீட்டை பார்க்கற ஆசையில் குதிரை கூடவே சென்றேன். ஒரு வெட்ட வெளி புல் தரையில் நின்று இது தான் நீச்சல் குளம், நீச்சல் குளத்துக்கு மேலே உங்க வீடு இருக்கும். அப்படியே அன்னாந்து பாருங்கன்னு சொன்னாங்க. எனக்கு அன்னார்ந்து பார்த்தால் வானம் தான் தெரிஞ்சுது. தரையில் இருந்து 20 அடியில் உங்க வீடு என்று வெட்ட வெளியையும், வானத்தையும் காண்பித்து நாம் கனவு காண்பது போல பிட்டா இறக்கிட்டு போய்ருச்சு அந்த அழகு பதுமை..

10 நிமிடம் எனக்க கையும் ஓடல, காலும் ஓடல அட படுபாவிகளே சும்மா இருந்த என்ன இப்படி கேனப்பயல் ஆக்கிட்டிங்களேன்னு கடுப்புல வந்தேன், குறுக்கே வந்த மற்றொரு அரபியன் குதிரை, சார் மதிய உணவு ஏற்பாடு செய்திருக்கிறோம் மறக்காம சாப்பிடுங்க என்றனர், ஆள விட்ட போதும் என்று காரை நோக்கி வரும் போது மீண்டும் வந்தது அரேபியன் குதிரை, சார் எப்ப புக் பன்றீங்க. உங்க பேரை நோட் செய்துகொள்கிறேன் என் கேட்டதும், முதல்ல அடுக்குமாடிய கட்டுங்க, அப்புறம் வந்து வாங்கிக்கிறேன் என்று பின்னங்கால் பிடறி அடிக்க ஓடியாந்தேன்.

இப்போது இடிந்த கட்டிடத்தை எத்தனை பேர் வாங்கினார்களோ, அப்படி வாங்கியவர்கள் இனி கீழே நின்று, அதோ பாருங்க இங்கிருந்து 20 அடி உயரத்தில் மேலே எங்க வீட்டு சமையல் அறை இருந்தது, பெட்ரூம் இருந்தது என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளவேண்டியது தான்.

நாளை வேறு ஒரு பிரச்சனை வரும் அப்போது அனைவரும் இந்த பிரச்சனையை மறந்து விட்டு நம் வேலையை பார்க்க போக வேண்டியது தான்..

4 comments:

  1. எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க! பாவம் பொதுஜனம்!

    ReplyDelete
  2. பணம் கொடுத்து முன்பதிவு செய்தவர்களின் நிலையினை நினைத்தால்,,,,
    எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன
    அவர்களது குடும்பங்களின் கதி.,,

    ReplyDelete
  3. பல அடுக்குமாடி கட்டிடங்களின் நிலை இது தான்...

    ReplyDelete