நாம் தினமும் பல உடற்பயிற்சிகளை
கேள்விப்பட்டு இருக்கிறோம் இன்னும் சில பேர் செய்து கொண்டு இருக்கிறோம்
எல்லா பயிற்சியிலும் ஒரு நிவாரணம் இருக்கும். உடலில் உள்ள அனைத்து
பாகங்களும் வேலை செய்ய நீச்சல் என்னும் உடற்பயிற்சி பயன்படுகிறது.
நீச்சல் கலையை கிராமத்தில் உள்ள
சிறுவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள் நகர்புரத்து இளைஞர்கள் நிறைய
பேருக்கு நீச்சல் தெரியாது என்பது மறுக்க இயலாத உண்மை. கிராமத்து இளைஞர்கள்
நீச்சல் கற்க காரணம் அவர்கள் ஊரில் கிணறு, வாய்க்கால், ஏரி அல்லது ஆறு
இருக்கும் இதனால் இவர்களுக்கு நீச்சல் கற்கும் வாய்ப்பு தானாக வருகிறது.
நீச்சலில் பல வகை உண்டு கிணற்று
நீச்சல், ஆற்று நீச்சல், கடல் நீச்சல் என மூன்று வகையாக சொல்லலாம்.
கைகளையும் கால்களையும் இடத்திற்கு தகுந்தவாறு அதன் அசைவுகளை மாற்றுவதால்
நீச்சலை பிரித்துச் சொல்கிறோம்.
முக்கியமான விசயம் நீச்சலும், சைக்கிள் ஓட்டுவதும் வாழ்க்கையில் ஒரு முறை கற்றால் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்.
நீச்சல் கற்பது எப்படி?
கிணற்று நீச்சல்
நீச்சல்
கற்க நிச்சயமாக நன்கு நீச்சல் தெரிந்த நபர் வேண்டும். அவரின் உதவியுடன்
தான் கற்க முடியும். முதலில் அவர் தனது கைகால்களை எவ்வாறு அசைக்கிறார் என
பார்க்கவேண்டும். காலும் கையும் தண்ணீருக்குள் இருக்கும் தலைமட்டும் மேலே
தூக்கி கை, கால்களை மெதுவாக ஆட்டியபடி மிதப்பார் இதை நன்கு கவனித்துவிட்டு
நாம் தண்ணீரில் இறங்க வேண்டும்.
தண்ணீருக்குள் இறங்குவதற்கு முன்
கிராமத்தில் புரடை(சுரைக்காயை ஒரு 2 மாதம் காய வைத்தால் அதற்கு பெயர்
புரடை) கட்டுக்கொண்டு இறங்க வேண்டும். தற்போது லாரி டியூப்பில் காற்றை
நிரப்பி நடுவில் உட்கார்ந்து கொண்டு காலை மட்டும் அசைக்கலாம்.
ஒரு இரண்டு நாட்கள் உதவியுடன்
நன்கு நீச்சல் அறிந்தவருடன் இறங்கினால் மூன்றாம் நாள் தைரியம் வந்து நாமும்
மெதுவாக இறங்கி கை, கால்களை அசைக்கும் போது நன்கு நீச்சல் தெரிந்தவர்
நமது அரைநான் கயிறை பிடித்துக்கொள்ள வேண்டும் அப்போது கையையும் காலையும்
ஒன்றாக அசைக்க வேண்டும்.
ஒரு
இரண்டு முறை பிடித்து விட்டு மூன்றாவது முறை விட்டு விட்டு பிடிக்கும் போது
நல்ல பழக்கம் ஏற்படும் கிணற்றில் பழகும் போது இந்தப்பக்க சுவரையும்
அந்தப்பக்க சுவரையும் நீச்சல் அடித்து பிடிக்க முயற்சிக்க வேண்டும். ஒரு
வாரத்தில் எளிதாக நீச்சல் கற்றுக் கொள்ளலாம்.
ஆற்று நீச்சல்
ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது
எப்பபொழுதும் தண்ணீர் செல்லும் பக்கமாகதான் செல்ல வேண்டும். எதிர்
திசையில் செல்வதை எதிர் நீச்சல் என்பர் இது மிகவும் கடினமான ஒன்று.
ஆற்றிற்கும் ஒரு நல்ல அனுபவமிக்க நீச்சல் தெரிந்தவர்களுடன் செல்லவேண்டும்.
ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது கால்களை விட இரண்டு கைகளையும் ஒவ்வொன்றாக
முன்புறம் தூக்கி தண்ணீரை பின்னுக்கு கொண்டு வரைவேண்டும் அப்பொழுது நாம்
முன்னுக்குச்செல்வோம். கைகளை எந்த அளிவிற்கு வீசுகிறோமோ அந்த அளவிற்கு
நாம் முன்னிற்குச் செல்லலாம். ஆற்று நீச்சல் கற்க குறைந்தது 10 நாட்கள்
ஆகும். கைகளை வீசும் போது சுழல் இருந்தாலும் எளிதாக தப்பிக்கலாம்.
நீச்சலின் பயன்கள் :
1. நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டும்லல நல்ல உடற்பயிச்சியும் தான்.
2. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும்.
3. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.
4. நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
5. இரத்த ஓட்டம் சீராகிறது.
6. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.
7. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
8. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.
9. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.
10. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது.
நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க முடியும்
நுரையீரலை
வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து
800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. மேலும் உடல் மென்மையாகி
மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.
வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
1. தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
2. நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.
3. நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
2. நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.
3. நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
எனது வேண்டுகோள் :
குழந்தைகள் படிக்கும்போது
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும்.
நீச்சல் கற்றுத்தருவதன் மூலம் உடல் நலம் நலன்பெறும்.
நீச்சலில் பொதுவான முறைகளான வண்ணத்துப்பபூச்சி அசைவு, பின்புறமாக-கப்பாடாங் நீச்சல் அடித்தல்
ReplyDeleteஆகியனவாகும்.
கிணற்று நிச்சல் அடிக்கும் போது பழகின ஆள் ஒருவரை நறுக்கெண்டு கிள்ளி விட்டு குதிக்கனும். அப்ப தான் மேலே வந்ததும் நம்மைக் திருப்பிக் கிள்ளலாம் என்று அவர் காத்திருப்பார். நாம் சமாளிக்க முடியாமல் தத்தளித்தால் குதித்து காப்பாற்று வார். (பதில் கிள்ளு உறுதி)
.முங்கு நீச்சல் அடிக்கும் போது கவணமாக இருக்கனும். எல்லாரும் ஒழுங்கான உள்ளாடை உடுத்தியிருக்கிறார்களா எனப்தை உறுதி செய்யனும் முங்குறதுக்கு முன்னால்.
பெண்கள் குளிக்கிற இடத்தில் நோ முங்கு அப்புறம் 101-ஐ கூப்பிடவேண்டீருக்கும். முட்டை பூரி சாப்பிட்டதும் கண்டிப்பாக முங்கு நீச்சல் கூடாது.
தண்ணீரில் உடல் எடைக் குறைவாக இருப்பதாலும், எளிதில் அசைக்க முடிவதனாலும், நீந்தாமல் நடந்தாலே, உடல் வலிமை அடையும். வார விடுமுறை நாட்களில் சென்னை டூ பாண்டிச்சேரி நடக்கலாம். கோவைக் காரார்கள் வாளாங்குளத்தில் குறிச்சியில் குதித்து நடக்கலாம். உதவி வேண்டுமானால் சங்கவியைக் கேட்கலாம்.
கவனிக்க வேண்டியவை:
* நீச்சல் நல்ல பயிற்சின் போது எப்போதும் நிறைய பேர் இருப்பது போல பார்த்துக் கொள்ளவும். காசு கொடுத்து கூட்டிப் போகலாம். ஆனால்
அழைத்துச் செல்லும்
அல்லக்கைகளுக்கு சாராயம் கோழிக்கறி வாங்கிக் கொடுத்தால் உங்களைக் காப்பாற்ற உதவ மாட்டார்கள்.
* நீச்சல் தெரியாதவர்கள் முறைப்படி கற்றுக் கொள்வது அவசியம். அதன் பின்னரே இந்த வகை பயிற்சி செய்ய வேண்டும். இல்லையேல் ஆபத்தை விலைக் கொடுத்து வாங்குவது போல் ஆகிவிடும்.
கோச்சைக்கறி தின்றால் கால்கள் வலுவிழந்து காணப்படும். அப்போ நீச்சல் அடிப்பதும் தனக்குத் தானே ஆப்பு அடிக்கறதும் ஒன்று தான்.
நான்கு வருடம் முன்பு தினமும் கிணற்றுக்கு செல்வதுண்டு... இன்றைக்கு சுத்தமாக தண்ணீர் இல்லை...
ReplyDeleteநீச்சலின் பயன்கள் பலருக்கும் உதவும்... நன்றி...
பயனுள்ள பதிவு! கிராமத்தில் வளர்ந்தும் பயம் மற்றும் பெரியோர்கள் பாசக் கண்டிப்பில் இந்த கலையை அறியாதவன் நான்! அருமையான பதிவிற்கு நன்றி!
ReplyDeleteநல்ல உடல்பயிற்சியுடன் அவசர பாதுகாப்பும் தரும்.
ReplyDeleteநல்ல வேண்டுகோள் விடுத்துள்ளீர்கள்.
மகளுக்கு பழக்கிவிட்டோம்.
நீச்சல் ஓர் அற்புதமான உடற்பயிற்சி...
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே....
நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.//தெரியாத தகவல்
ReplyDelete