Wednesday, March 21, 2012

அஞ்சறைப்பெட்டி 22/03/2012


உள்ளுரில் இருந்து உலகம் வரை........
 
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு என்று மன்மோகன் அறிவித்ததற்கு மிக்க நன்றி. ஆனால் அந்த தீர்மானத்தில் உள்ள விசயங்கள் என்னவோ தமிழ்மக்களுக்கு அதிகம் பயன்படுவது போல் தெரியவில்லை. இந்த தீர்மானத்தில் இலங்கை தோற்றால் அது இலங்கைக்கு நிறைய எதிர்ப்புகளை உருவாக்கும். அவர்கள் செய்த போர்குற்றத்திற்கு தண்டனை அனுபவத்தே தீரவேண்டும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்றே நம்புவோம்...
...............................................................................................

கூடங்குளம் விவகாரத்தில் அம்மா சங்கரன்கோயில் இடைத்தேர்தலுக்கு அப்புறம் நிச்சயம் முடிவெடுப்பார் என்று ஏற்கனவே அஞ்சறைப்பெட்டியில் எழுதி இருந்த போது நண்பர்கள் அம்மா மேல் உங்களுக்கு ரொம்ப நம்பிக்கைபோல என்று கூறி இருந்தனர்.

 இப்போது அது நடந்து விட்டது கூடங்குளம் அனு உலையால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அது ஆபத்தானது என்று தான் உதயகுமார் தரப்பினர் போராட்டம் நடத்துகின்றனர் இதற்கு ஆரம்பத்தில் அதிக ஆதரவு இருந்தது ஆனால் தற்போது மின்சாரத் தடையின் காரணமாக அனைத்து தரப்பினரும் ஆதரவு தரும் நிலைக்கு வந்து விட்டனர்.

அனைவரும் ஆதரவு தருகிறோம் ஆனால் கூடங்குளத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கு கிடைக்குமா என்று தான் இன்னும் விளங்கவில்லை..

...............................................................................................

கர்நாடக சட்டமன்றத்தில் நடந்தது போல் தற்போது குஜராத்தில் இரு எம்எம்ஏக்கள் ஆபாச படம் பார்த்துள்ளனர். மக்கள் ஓட்டுப்போட்டு மக்களின் பிரச்சனையை பேசு என்று சட்டமன்றத்திற்கு அனுப்பினால் அங்க போய் ஆபாச படம் பார்க்கும் இவர்கள் மக்களுக்காக என்ன பேசப்போகிறார்கள். எம்எல்ஏக்களுக்கு ஆபாச படம் பார்க்க இடமே இல்லை போலும்... மானங்கெட்ட மனிதர்கள்...
................................................................................................

மாநகராட்சிக்கு முறையாக கட்டணம் செலுத்தாததால் எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர்கள் பெயரில் ரூ.6. கோடி கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் எம்.பி.க்களின் கட்டண பாக்கி குறித்து டெல்லி மாநகராட்சியிடம் விவரம் கேட்டிருந்தார்.
 
அதற்கு அளித்த பதிலில் ரூ.6 கோடி பாக்கி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.க்களின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரம், குடிநீர் கட்டண பாக்கி தொடர்பாக 3,335 பில்கள் நிலுவையில் உள்ளது. இதற்கான தொகை ரூ.6.27 கோடியாகும். இதில் அதிக பட்டசமாக முன்னாள் மத்திய மந்திரி கனிகான் சவுத்ரி ரு.42 லட்சம் பாக்கி வைத்துள்ளார். இவர் இறந்துவிட்டார். இவருக்கான கட்டண பாக்கியை யாரும் செலுத்தவில்லை.
 
இதேபோல் மறைந்த முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ், முன்னாள் மத்திய மந்திரிகள் ராஜேஷ்பைலட், சுனில்தத், ஜானேஷ்வர் மிஸ்ரா, ஆகியோர் பெயரிலும் கட்டண பாக்கி உள்ளது. முன்னாள் எம்.பி. சவுத்திரி ரூ.34 லட்சம் டெலிபோன் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா, பாரதீய ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி ஆகியோரும் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

எது எதுக்கோ கேஸ்போட்டு மானத்தை வாங்குபவர்கள் இதற்கும் கேஸ் போட்டு அவர்களை கோர்ட்டுக்கு இழுத்தால் கட்டாமலா  விட்டுவிடுவார்கள்.. சம்பளம் கொடுக்கும் போதே இதுக்கெல்லாம் பிடிச்சிடனும்...

................................................................................................

கிராமப்புறங்களில் ரூ.22.40-க்கு மேல் ஊதியம் பெறுபவர்களும் நகர்ப்புறங்களில் ரூ. 28.65-க்கு மேல் ஊதியம் பெறுபவர்களும் ஏழைகள் அல்ல. இதற்கு கீழ் உள்ளவர்கள் ஏழைகள் என கூறலாம். நுகர்வோர் குறித்து ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இந்த வறுமைக்கோடு வரம்பு கொண்டுவரப்படவில்லை என கூறியுள்ளார்.

நாடு வல்லரச ஆகவேண்டும் என்றால் முதலில் இவ்ரைப்போல் ஆட்களை துரத்திவிடனும்.. இவர் இதை அறிவித்ததைப்பார்த்தால் பாரளுமன்ற கேன்டினில் சாப்பிட்டு விட்டு அங்க இருக்கும் விலையை வைத்து சொல்லி இருப்பரோன்னு டவுட்டு???

இவருக்கு சம்பளம் கொடுக்கம் போது ஒரு நாளைக்கு 32 ரூபாய் கணக்கு போட்டு கொடுத்தால் வாங்கிக்குவாரா ?? டவுட்டு?

...............................................................................................
 
கர்நாடக மாநிலம் கார் வாரா பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போர்ச்சுக்கீசியர்கள் ஆட்சி செய்து வந்தனர். அவர்களை எதிர்த்து காப்ரி என்பவர் போராடி வெற்றி பெற்றார். பின்னர் போர்ச்சுக்கீசியர்களிடம் அடிமைகளாக இருந்த பொது மக்களை மீட்டார். அவர் இறந்த பிறகு அவரது சமாதியை அப்பகுதி மக்கள் கோவிலாக மாற்றி வழிபடத் தொடங்கினர். காப்ரிக்கு மது, பீடி, சிகரெட் என்றால் இஷ்டம். இதனால் காப்ரி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவரது சமாதியில் மது ஊற்றி அபிஷேகம் செய்கிறார்கள்.
 
பின்னர் பீடி, சிகரெட் பாக்கெட்களை படையலாக வைத்து கும்பிடுகிறார்கள். நேற்று காப்ரியின் ஜெயந்தி விழா என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் அனைவரும் பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுபாட்டில்களை வாங்கி வந்தனர். மராட்டியத்தில் இருந்து வந்த பக்தர் ஷ்யாம் கூறும் போது எங்களது குலதெய்வம் காப்ரிதான். அவரது சிலைக்கு மது ஊற்றி அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் பலிக்கும். தோஷங்கள் நீங்கும். முன்பைவிட இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என்றார்.

..................................................................................................

 
பிரபல ஆலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன். 43 வயதாகும் இவர் தற்போதும் கூட ரசிகர்கள் மத்தியில் அழகு தேவதையாகவே கருதப்படுகிறார். இதுமட்டுமின்றி உணர்ச்சியை தூண்டும் கவர்ச்சிகரமான பெண் என்ற பட்டத்தையும் அவர் சமீபத்தில் பெற்றவர். இத்தகைய அழகை அவர் எப்படி? பாதுகாக்கிறார் என்ற ரகசியத்துக்கு விடை கிடைத்துள்ளது.  
 
இவர் அழகு மருத்துவத்துக்கு மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூ.72 லட்சம் (90 ஆயிரம் பவுண்ட்) செலவு செய்கிறார். கிட்டத்தட்ட தினமும் அதற்காக ரூ.20 ஆயிரம் ஒதுக்குகிறார். யோகா பயிற்சிக்கு ரூ.48 ஆயிரமும், கூந்தல் அலங்காரத்துக்கு ரூ.46 ஆயிரமும் செலவு செய்கிறார். 
 
..................................................................................................
 
இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களை விட சங்கரன்கோயில் இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியது காரணம் விலைவாசி உயர்வு, மின்சாரம் இல்லாதது, பேருந்து கட்டணம் உயர்வு போன்றவையால் ஆளும் கட்சிக்கு பாதிப்பு இருக்கும் என பல நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

அப்படியே ஆளும் கட்சி வெற்றி பெற்றாலும் ஒட்டுவித்தியாசம் மிக குறைவாக இருக்கும் என நடுநிலையாளர்கள் கருத்து இருந்தது ஆனால் அங்கு நடந்தது இதற்கு எதிர்மாறனது இதுவரை இல்லாத எதிர்த்து நின்றவர்கள் அனைவரும் டெபாசிட் இழந்து வெற்றி வாகை சூடியது அதிமுக..

இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதி ஆனால் எதிர்த்து நின்றவர்களை டெபாசிட் காலியாக்குவது எங்கள் அம்மாவின் புது விதி..

32 மந்திரிகள் வெற்றிக்காக பாடுபட்டார்கள் என்று சொல்கிறார்கள் எதிர்கட்சியில் எத்தனை முன்னாள் மந்திரிகள் வந்தார்கள் என்பதை மட்டும் சொல்ல தயங்குகின்றனர்..

மக்கள் தீர்பே மகேசன் தீர்ப்பு

சங்கரன்கோயில் இடைத்தேர்தலில் வென்ற சகோதரி முத்துச்செல்விக்கு வாழ்த்துக்கள்...

தகவல்
அமெரிக்காவில் உள்ள யுதா மாகாணத்தை சேர்ந்தவர் மேரி ஹார்டிசன். 101 வயதான இவர் பாரா கிளைடர் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார். இதன் மூலம் மிக அதிக வயதில் பாரா கிளைடரில் பறந்து சாதனை படைத்த பெண் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.
 
இது குறித்து அவர் கூறும்போது-
 
தனது 75 வயது மகன் பாரா கிளைடர் விமானத்தில் பறந்து பொழுதை கழித்து வந்தார். அதைப்பார்த்து எனக்கும் அதில் பறக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே கடந்த 2007-ம் ஆண்டு முதல் அதற்கான பயிற்சி பெற்றேன். தற்போது இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறேன்.
 
இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பாரா கிளைடரில் பறந்து சாதனை படைத்த மேரி ஹார்டிசனை அவரது குடும்பத்தின் 4 தலைமுறையினரும் வாழ்த்தினர்.

அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  இனியவை கூறல் என்று தனது வலைப்பூவிற்கு பெயரிட்டு கட்டுரைகள் பல, வரலாற்று நிகழ்வகள் என பல வகையில் எழுதி வருகிறார். இவரின் கொங்கு மண்டல வரலாற்று சான்று அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று..

http://eniyavaikooral.blogspot.in/
 
தத்துவம்
 
தராசைப்போல் நன்மைகளையும் தீமைகளையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்பவனே ஞானி. எதையும் சிந்தித்து பார்ப்பவனும் அவனே.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய ஆம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாவைக இருக்கின்றது...

சதுரங்க விளையாட்டைப்போல, வாழ்விலும் முன் யோசனை வெற்றி பெறுகிறது..

7 comments:

  1. அஞ்சரை பெட்டியில் அரசியல் நெடி அதிகம். மற்றவையும் பிற்பகுதியில் இருக்கு இடை தேர்தலில் ஜெயிச்ச குஷியில் இருக்கீங்க போல

    ReplyDelete
  2. அதிரடியாய்...

    நல்லதொரு தொகுப்பு

    ReplyDelete
  3. 101 வயது கேட்பதற்க்கே பிரமிப்பாக இருக்கிறது..

    ReplyDelete
  4. அன்பின் சங்கவி - அஞ்சறைப் பெட்டி மணக்குது - சூப்பர் - எல்லாச் செய்திகளுமே நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அரசியல் பெட்டியாய் அஞ்சறைப் பெட்டி... அருமை.

    ReplyDelete
  6. அரசியல் பெட்டியாய் அஞ்சறைப் பெட்டி... அருமை.

    ReplyDelete