Tuesday, March 13, 2012

அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "


உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான்.

எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்” என்பது சொலவடை. 

உறவுகளில் ஆகச் சிறந்தது தாய்மாமன் உறவு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பி இவற்றை விட சிறந்தது தாய்மாமன் உறவு. தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது எந்த வித முன் தொடுப்பும் இல்லாது வருவது.

தங்கைக்கு தகப்பனாய், அவள் பெறும் குழந்தைகளுக்குப் உற்ற பாதுகாவலனாய், நண்பனாக அந்த குழந்தை கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்து அதன் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன் தான். இன்றும் மாமா வருகிறார் என்றால் குழந்தையின் சந்தோசத்தை சொல்லிமாளது..

தன் தங்கையின் குழந்தைகளை தன் குழந்தைகளைப் போல கவனிப்பான். அக்குழந்தைகளின் ஒவ்வொரு நல்லதுக்கும் தாய்மாமனே முக்கியம் என்று தமிழர் பண்பாடு சொல்கிறது. காது குத்துவதிலிருந்து, திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் இன்னும் அனைத்து நல்லதற்கும், கெட்டதற்கும் தாய்மாமனே முன்னிற்பான்.

தங்கையின் அல்லது அக்காவின் கணவருக்கு அதிக உதவிகள் செய்வது எங்கள் மாமா என்று உரிமையோடு அவருக்கு துணையாக செல்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தன் குடும்பத்தைக் கவனிப்பதை விட தங்கையின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுபவன், அண்ணன் தனக்காக தன்னை வருத்திக் கொள்கிறானே என்று அண்ணன் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு நொடி அத்தங்கை நினைத்தால் என்றால் அண்ணன் மாடி மீது மாடி கட்டி வாழ்வான். எவனொருவன் கூடப் பிறந்தவர்களை அழ விடுகின்றானோ அவன் எந்தக் காலத்தும் சிறந்து வாழ முடியவே முடியாது.

சில ஊர்ப்பக்கம் தங்கையின் மகளோ அல்லது அக்காவின் மகளோ இயற்கை குறையோடு இருந்தால் தாய்மாமனுக்குத் தான் கட்டி வைப்பார்கள். தாய்மாமனுக்கு வயதாகி விட்டால் அவனின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். தாய் மாமன் உறவென்பது தியாகத்தின் உருவம். இந்த தியாகத்தை தந்தையோ, தனயனோ செய்ய முடியுமா? அப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து வாழ வைப்பவன் கடவுளுக்கும் நிகரனாவன் அல்லவா?

உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.

ஆனால் இன்று குழந்தைகளின் பெற்றோர் தனது வேலை காரணமாக வெளியூர்களில் இருப்பதால் குழந்தைகளும் அவர்களுடனே இருக்கும் அதனால் இப்போதெல்லாம் தாய்மாமன் உறவு முறை சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. குழந்தையும் தாய்மாமனை மாதம் ஒரு முறை என்று பார்த்து மாமாவின் முகம் மறைகிறது என்பதுதான் இன்றைய நிதர்சன உண்மை...

நண்பரின் அப்பா தனது அக்காள் குழந்தைகளை வளர்த்து இன்று அவர்கள் மரமாக நிற்கின்றனர் அவர்களுக்கு விழுதாக இந்த தாய்மாமன் இருந்தேன் என்று பெருமை பட நானும் அவரும் பேசிக்கொண்டு இருந்தோம் அப்படியே ஒரு கட்டுரையாக எழுதி விட்டேன்.. அந்த அக்கா குழந்தைகள் அந்த தாய்மானுக்கு முன்னின்று 60ம் கால்யாணம் செய்து வைக்க அடுத்த மாதம் வருகிறார்கள் என்று அவர் சொல்லும்போது அவரின் கண்களில் அந்த தாய்மாமன் என்ற பாசம் தெரிந்தது.

நமக்கும் தாய்மாமன்கள் நிச்சயம் இருப்பர் ஆனால் நாம் நமது வேலைப்பளுவாலும், கால ஓட்டத்தாலும் நாம் நம் தாய்மாமனை நிச்சயம் மறந்திருக்க மாட்டோம் அது போல் நம் குழுந்தைகளுக்கும் மாமாவின் அருமை பெருமைகளை சொல்லி வளர்க்க வேண்டும் என்பது என் ஆவா...

11 comments:

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. //வெள்ளிச்சங்கு தந்தா வௌக்கிவக்க வேணுமுன்னு தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்//

    கிழக்குச்சீமையிலே படத்தில் வைரமுத்துவின் தாய்மாமன் பாசத்தைப்பற்றிய அருமையான பாடல் ஞாபகத்துக்கு வந்தது நண்பரே...

    ReplyDelete
  3. இது எல்லாம் அந்த காலமோ?

    பதிவு இப்ப உள்ள சமுகத்துக்கு தேவையான ஓன்று. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. நீங்க சொன்னது நிஜமே. தன் பிள்ளைகளைவிட சகோதரிகளின் பிள்ளைமேல் அளவற்றா பாசம் வைட்த்ஹிருக்கும் மாமன்கள் பலருண்டு. என் தாய்மாமனும் நீங்க சொன்ன மாதிரிதான் என்னை பார்த்துக்கிட்டார். இப்போ அவருக்கு உடல்னினல் மோசமா இருக்குறதால நான் அவரை பார்த்துக்குறேன்.

    ReplyDelete
  5. மாமன் தன் மருமக்களிடம் திருமணம் வரை மிக அன்பாகத்தான் இருக்கிறார்! அன்பை மாமன் மேலும் தொடர்வது வரும் மாமியைப் பொறுத்தே அமைகிறது!

    ReplyDelete
  6. //உறவுகளில் மிகச் சிறந்த உறவு “ தாய்மாமன்” என்று அடித்துச் சொல்லலாம்.//

    தாய் மாமனின் பெருமை புரியாதவர்கள் கிழக்குச் சீமையிலே படம் பார்க்கவும்.:-)))))
    வாழ்த்துகள் சங்கவி.

    ReplyDelete
  7. பல கோணங்களில் பார்த்துப் பார்த்து நேர்த்தியாக தாய்மாமன் உறவைச் சொல்லியிருக்கிறீர்கள். எந்தப் பெண்ணுக்கும் தன் சகோதரன் கூட இருந்தால், யானை பலம் கிடைத்த மாதிரி. பிறந்த வீட்டிலிருந்து 'நான் இருக்கிறேன்' என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாது கிடைக்கும் பலம் அது. மாமனின் மனைவியான மாமியின் அன்பும் கூடக் கிடைத்தால், அது இரட்டை யானை பலம் மட்டுமில்லை, மாமனுக்கு நிம்மதி கொடுக்கும். அண்ணியின் அன்பை சம்பாதித்துக் கொள்வதில் தங்கையும் முனைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நினைவில் வந்தது.

    ReplyDelete
  8. மாமன் தன் மருமக்களிடம் திருமணம் வரை மிக அன்பாகத்தான் இருக்கிறார்! அன்பை மாமன் மேலும் தொடர்வது வரும் மாமியைப் பொறுத்தே அமைகிறது!

    ரமேஷ் வெங்கடபதி சொன்னது
    ரொம்ப சரி

    ReplyDelete
  9. மறந்து போன அழிந்துகொண்டு இருக்கிற ஒருகலச்சரத்தின் உன்னத உறவை மீண்டும் மீட்க இந்த பதிவு உதவட்டும் அருமை !!!!!!!!

    ReplyDelete
  10. எனக்கு 76 வய்து ஆகிறது.என் சகொதரியின் பேத்தி அமெரிக்காவில் இருக்கிறாள் காதல் திருமணம். மாப்பிள்ளை கர்நாடகாவைச்சேர்ந்த யாதவவ்ர்கள். அவர்கள் குல வழக்கப்படி திருமனம் நடந்தது.திருமணத்திற்கு முதல்நாள் மாமன் முறையான நான் அந்தப் பெண்ணிற்கு தாலி கட்டினேன். மறுநாள் திருமனத்தின்போது மாப்பிள்ளை கட்டினார். திருமணம் முடிந்ததும் பெண்ணிற்கு காலில் மெட்டி நான்தான் போடவேண்டும் என்றார்கள். தென்நாட்டில் மாமனுக்குதான் முறை.அவன்சம்மதமில்லாமல் திருமணம்நடக்காது.கணவனை மாமா என்று அழைக்க வேண்டும். வட மாநிலங்களில் மாமன் தந்தைக்குச்சமம். இந்தியா அழகான,விசித்திரமான நாடு---காஸ்யபன்.

    ReplyDelete
  11. உயர் குடியிலே பிறந்து, மனக் கசண்டால் ( கசடு= மாசு, குற்றம், அழுக்கு, வடு, dross, fault, stain, dust, scar. ஏற்படும் குற்றங்களுடன் சோம்பல், மறதி முதலிய குற்றங்களில் இருந்து நீங்கித் தமக்குக் குற்றம் வருமோ என்று அஞ்சி நிற்கும் நாணம் உடையவரையே ; நாம் நமது அரசுப் பணிகளை ஏற்று நடத்தத் தேர்வு செய்தல் வேண்டும் .

    ReplyDelete