Thursday, April 1, 2010

என்றும் இளமைக்கு கறிவேப்பிலை சாப்பிடுங்க....

நமது தமிழர்களின் வீட்டு சமையலில் கறிவேப்பிலை இல்லாமல் சமையலை பார்ப்பது மிகக்கடினம். நமது உணவுகள் அனைத்திலும் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும். கறிவேப்பிலை மணத்திற்காக பயன்படுத்துவது கிடையாது மணத்திற்காக தான் பயன் படுத்துகிறோம் என்றால் அது மிக தவறு. இயற்கை நமக்களித்த இயற்கை மருத்துவத்திற்கு கறிவேப்பிலை மிக சரியான உதாரணம். நமது முன்னோர்கள் தொட்டு இன்று வரை நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தி வருகிறோம்.
கறிவேப்பிலை இலையாக கையில் இருக்கும் போது அதிக மணம் இருக்காது. பச்சையாக சாப்பிட்டால் கசப்பது போல் இருக்கும் இளம் சூடான எண்ணெயில் போடும் போது தான் அதன் சுவையும், மனமும் அதிகரிக்கும். பல மருத்துவ குணங்களைக் கொண்டது தான் கறிவேப்பிலை.
நிறைய இடங்களில், நிறைய பேர் சாப்பிடும் போது பார்த்திருக்கிறேன் அவர்கள் கறிவேப்பிலையை சாப்பிடுவது கிடையாது எடுத்து இலையின் ஓரத்தில் வைத்து விடுவர் இது தான் இன்றளவும் அனைத்து இடங்களிலும் நடக்கும் உண்மை. இதன் நன்மைகள் முழுவதும் தெரியதாவர்கள் தான் இப்படி செய்கிறார்கள் நிச்சயம் இதன் நன்மை தெரிந்த எவரும் இனி சாப்பிடுவார்கள் என்பது தான் என் கருத்து.
கறிவேப்பிலையைப் பொடி செய்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். சட்னியாக செய்து தினப்படி சாப்பிட மிகவும் நல்லது.

கறிவேப்பிலைச் சட்னி:

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் இதுபோன்று துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.
 
கறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்:

கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:
  • இதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அடங்கியுள்ளன.
  • கறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.
  • இளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.
  • தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..
  • சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். 
  • கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
  • எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள். 
  • மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.
  • கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.
  • பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். 
  • கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.
  • குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.
  • வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.
  • கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.
  • கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது. 

24 comments:

  1. ஆஹா அருமை !
    வேண்டாம் என்று எடுத்து வீசும் கறிவேப்பிலைக்குள் இத்தனை விசேசமா !
    மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே !
    பல அறிய தகவல்களை திரட்டி தந்திருக்கிறீர்கள் .
    பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள பதிவு.

    உங்கள் தொடர் பதிவு (பேருந்து காதல்) அழைப்பை ஏற்று எழுதி உள்ளேன்.
    http://konjamvettipechu.blogspot.com/2010/03/interview.html

    ReplyDelete
  3. சூப்ப்ர்ர்!! அதில் இவ்வளவு நன்மைகளா??

    ReplyDelete
  4. கருவேப்பிலை அருமை , நரை விசயம் உண்மை. என் தாய்க்கு அறுபது இருந்தாலும் நரைக்கவில்லை, காரணம் கருவேப்பிலை. நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாங்க பனித்துளி சங்கர்....

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  6. வாங்க சித்ரா வாங்க.....

    கொஞ்சம் வேலைப்பளு அதிகமானதால் பாக்கல.... இப்ப பார்த்து படித்துவிடுகிறேன்

    ReplyDelete
  7. வாங்க Menagasathia....

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  8. வாங்க மதுரை சரவணன்....

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  9. உண்மைதான், இதைப்பற்றி நானும் எழுதி
    இருக்கிறேன், நேரம் கிடைத்தால் படித்து
    பாருங்கள். "உடல்நலம்" என்ற label -இல்
    உள்ளது.

    ReplyDelete
  10. அழகான பகிர்வு.

    என் மனைவி என் மகனுக்கு கருவேப்பிலை சாப்பிட்டால் நன்றாக கண் தெரியும் என சொல்லி சேர்த்து ஊட்டி விட்டது, என் மகன் இன்றும் அதை நினைவு கூறுவதை எண்ணும்போது... என்ன சொல்ல!

    அருமை நண்பா!

    பிரபாகர்...

    ReplyDelete
  11. கருவேப்பிலை துவையள விட்டுட்டீங்களே... என்னோட ஃபேவரைட்... அதோட நல்லகுணங்களை பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றிங்க....

    ReplyDelete
  12. கறிவேப்பிலையை வேண்டாம் என ஒதுக்கி விட்டு சாப்பிடுபவர்கள் தான் அதிகம், நான் உட்பட. இனியாவது சேர்த்து சாப்பிட பழகுவோம்.
    நல்ல பதிவு சங்கவி

    ReplyDelete
  13. வாங்க சைவகொத்துப்பரோட்டா....

    உங்கள் தகவல்களை படித்தேன் நன்று.....

    ReplyDelete
  14. வாங்க பிரபாகர்....

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா.....

    ReplyDelete
  15. வாங்க பாலாசி....

    சரி துவையள சேர்த்துகிட்டாப்போச்சு....

    ReplyDelete
  16. வாங்க அம்பிகா...

    ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்பத்தான் இந்த பக்கம் வர்றீங்க....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

    ReplyDelete
  17. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  18. மிகவும் பயனுள்ள பதிவு சங்கவி.

    இன்னும் அதிகமாக கறிவேப்பிலையை சமையலில் சேர்க்கணும்னு முடிவுபண்ணியாச்சு.

    நன்றி!

    ReplyDelete
  19. உஸ்.. அப்பா , ஏம்பா ஆண்டவா ? ஒரு கறிவேப்பிலைக் உள்ள இவ்வளவு மேட்டர் வச்சுருக்க ?

    ReplyDelete
  20. கறிவேப்பிலை பற்றி சொல்லிட்டு சமையல் குறிப்பையும் சேர்த்து சொல்லி அசத்திட்டீங்க.

    ReplyDelete
  21. நல்லா அடிச்சீங்க வேப்பிலை..!

    அருமை சங்கவி.:)

    ReplyDelete
  22. கருவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிடும் பழக்கம் உள்ளவன் நான். பலன்கள் அதிகம் என்று அறிவதில் சந்தோஷம்.

    ReplyDelete
  23. //பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.//

    அம்மாவின் அம்மா தினம் கைப்பிடியளவு கருவேப்பிலை மென்று சாப்பிடுவார்கள். 80 தாண்டிய பின்னும் ஊசியில் நூல் கோர்ப்பார்கள். 70 வயது வரை தலைமுடி நரைக்கவில்லை.

    ReplyDelete