Thursday, April 4, 2019

சோறு முக்கியம் பாஸ்... (ஓட்டல்களின் தொகுப்பு)

விகடனில் வெளி வந்த சோறு முக்கியம் பாஸ் என்ற கட்டுரையில் தமிழகத்தில் உள்ள பல ஓட்டல்களின் தொகுப்பில் ஓட்டல் பேரை மட்டும் தொகுத்து ஒரு லிஸ்ட் நண்பர் சுரேஸ் அவர்களால் பகிரப்பட்டது. அவரிடம் இருந்து அந்த தொகுப்பு உங்களுக்காக....

56    Shivanyas Kumbakonam kitchen restaurant    Anna nagar, Shanthi colony, 5th cross, Chennai    Uppukari, non veg, meals

55    Ponnaiya mess    Madurai - Mandabam road, Paramakudi    மீன் சாப்பாடு, காடை சாப்பாடு, கோழி சாப்பாடு,  மட்டன் சாப்பாடு, குடல் சாப்பாடு, மட்டன் முட்டைக்கறி சாப்பாடு

54    Akka Kadai Chennai- Trichy NH, Tholuthur @252kms, Before bridge    காலை 7.30-க்கெல்லாம் உணவகத்தைத் திறந்துவிடுகிறார்கள். இட்லி, பூரி, கட்டதோசை... கல் தோசையைத்தான்

‘கட்டதோசை’ என்கிறார்கள். தொட்டுக்கொள்ள எலும்புக் குழம்பு. முதல்நாள் வைத்து மிஞ்சுகிற மீன் குழம்பையும் கருவாட்டுக் குழம்பையும் அடுப்புத் தணலில் வைத்து மூடிவிடுகிறார்கள்.  11

மணிக்கெல்லாம் சாப்பாடு தயாராகிவிடும். 70 ரூபாய். சாதத்தோடு மீன்குழம்பு, நாட்டுக்கோழிக்குழம்பு, மட்டன் குழம்பு, கருவாட்டுக்குழம்பு, ரசம், மோர்... தொடுகறிகளாக கூட்டு, பொரியல்.

53    Keerthika A-1 Restaurant Tiruppattur road, Aandavar shed nearby, Devakottai    `நாட்டுக்கோழி உப்புக்கறி’, இறால் கிரேவி, நண்டு கிரேவி, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு,

மீன்குழம்பு, ரசம், தயிர்

52    Ganesh Mess Sivagangai - Tiruppattur road, Madagupatti    7 மணிக்குக் காலைச் சிற்றுண்டி. இட்லியும் பொங்கலும் கிடைக்கும். அதற்கும் நிறைய டிமாண்டு. மதியம் 12.30-க்கு

சாப்பாடு. செட்டிநாட்டுக்கே உரிய மண்டி, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, சாம்பார், வற்றல் குழம்பு, ரசம், மோர்.

51    Kovai alangar mess anna nagar east, near iyappan temple, Chennai    கொங்கு உணவு, கோவை அலங்கார் விலாஸின் சிறப்பே பிரியாணி வகைகள்தாம். அதுவும் கொங்கு

ஸ்டைல்தான். கீமா ரைஸ் என்று ஒன்று வைத்திருக்கிறார்கள். பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. கோழி வடை, ‘கொங்கனாபுரம் பிச்சுப்போட்ட கோழி’, பொள்ளாச்சி மிளகு லெக்பீஸ் 

வறுவல், பள்ளிப்பாளையம் சிக்கன், காங்கேயம் சிக்கன் சுக்கா

50    Alagappan grama hotel - hut type Omalur - Salem Dharamangalam road, indira nagar, near salem    காலை 8 மணிக்கெல்லாம் சுடச்சுட உணவுகள் தயாராகிவிடுகின்றன. களி,

சாமைச்சோறு, பொங்கச்சோறு, முட்டைப்பணியாரம். சுடச்சுடச் சாப்பிடலாம். பெரிய களி உருண்டை 25 ரூபாய். நாட்டுக்கோழிக் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, தலைக்கறிக் குழம்பு, மீன் குழம்பு...சைவ

விரும்பிகளுக்காகக் கீரைக்குழம்பு, சாம்பார், தக்காளிச் சட்னியும் வைத்திருக்கிறார்கள். நாட்டுக்கோழிக்குழம்பு அல்லது கருவாட்டுக் குழம்பு... களிக்கு அற்புதமான பக்கத்துணை.

49    Maya Bazaar restaurant    Bhavani road, near police station, Sangagiri    காலை 7.30-க்கு உணவகத்தைத் திறக்கிறார்கள். இட்லி, தோசை, அசைவத் தொடுகறிகள் அந்த

நேரத்திலேயே களைகட்டுகின்றன. மதிய உணவு 11.30-க்கெல்லாம் தயாராகிவிடுகிறது. 5 மணி வரை சாப்பாடு சாப்பிடலாம். அதன்பிறகு இரவு 9 மணி வரை சிற்றுண்டிகள். சைக்கிள் சுக்கா, மோட்டார்

வறுவல், ஹெல்மெட் வறுவல், ராக்கெட் ரோஸ்ட், ஏரோப்ளேன் வறுவல், அணுகுண்டு சிப்ஸ், கம்ப்யூட்டர் ஃப்ரை

48    Sethuram mess    Fathima high school nearby, Puthur, Trichy    1 மணிக்குத் திறந்து 4 மணிக்கெல்லாம் மூடிவிடுகிறார்கள், சிக்கன் தொக்கு, காடைத்தொக்கு, இறால்தொக்கு,

நண்டு மசாலா, மட்டன்குழம்பு, மீன்குழம்பு. கோழிப்பிரட்டல், காடை வறுவல், நண்டுவறுவல், இறால்வறுவல், மீன்வறுவல்

47    Prem's grama Bojanam    Sardar patel road, adayar, Chennai    12 மணிக்கு உணவகம் திறக்கிறார்கள். 3 மணி வரை சாப்பாடு, கிராம போஜனம் உணவகத்தின் சிறப்பு, ரொட்டி

வகைகள். கிராமத்தில், புகைகிற அடுப்பை ஊதிவிட்டுக்கொண்டே விரல் ரேகைகள் பதியப் பதிய பாட்டி சுட்டுத்தரும் அந்த நினைவுகளை மீட்கிறது. சோள ரொட்டி, ராகி ரொட்டி, கம்பு ரொட்டி, சாமை

ரொட்டி...கர்நாடகத்துத் தட்டே இட்லி, பெண்ணா தோசை,  நீர்தோசை, ஆந்திர பெசரட்டு... எல்லாம் சிறுதானியங்களில் செய்தவை

46    Palaniyappa mess South 4th street,Near dhandayuthapani temple, Tamil Nadu 622001    சாதம், ஒரு பொரியல், சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, சாம்பார், ரசம்,

மோர். கேட்பவர்களுக்கு நாட்டுக்கோழிக் குழம்பும், காரக்குழம்பும் தருகிறார்கள். பழனியப்பா மெஸ்ஸின் ஸ்பெஷல், பிரியாணி வகைகள். மட்டன் பிரியாணி, கோழி லெக்பீஸ் பிரியாணி இரண்டும்

சிறப்பு. காலை 7 மணிக்கெல்லாம் மெஸ்ஸைத் திறந்து விடுகிறார்கள். திறந்தவுடன் சுடச்சுட ஆட்டுக்கால் சூப் தருகிறார்கள்.  வெறும் சூப் 5 ரூபாய்தான். 11 மணியிலிருந்து இரவு 10 மணிவரை சாப்பாடு,

தொடுகறி வகைகள் சாப்பிடலாம். இரவு, இடியாப்பம், ஆப்பம், தோசை வகைகள் சாப்பிடலாம்.

45    Donnai Biriyani house சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில், ஒக்கியம்பேட்டை, துரைப்பாக்கத்தில் மூட்டக்காரன்சாவடி என்ற இடத்தில் இருக்கிறது தொன்னை பிரியாணி ஹவுஸ்.    

உணவகத்தை அதிகாலை 3 மணிக்குத் திறக்கிறார்கள். திறந்தவுடன் சுடச்சுட சிக்கன் பிரியாணி சாப்பிடலாம். 5 மணிக்கு மூடிவிடுகிறார்கள். மீண்டும் 12 மணிக்குத் திறந்து  2 மணிக்கு மூடுகிறார்கள்.

அசைவ மிலிட்டரி சாப்பாடு விரும்புபவர்கள் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் செல்லவேண்டும். இரவு 7 மணிக்குச் சிற்றுண்டி. கறிதோசை, கறிவேப்பிலைப் பொடி தோசை சாப்பிடலாம். மட்டன்

பிரியாணியும் கிடைக்கும்.

44    Sree Konar vilas புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில், ஜி.கே.எம்.மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஸ்ரீ கோனார் விலாஸ் மதியம் 11 முதல் இரவு 11 மணி வரை, பொன்னி

அரிசிச் சாதம், சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, சிக்கன் 65  நான்கு பீஸ், முட்டைத் தொக்கு, ரசம், மோர். நிறைவான மதுரைச் சாப்பாடு. சிக்கன் குழம்பும், மட்டன் குழம்பும் அமோகமாக

இருக்கின்றன. சிக்கன் 65, முட்டைத் தொக்கு, மட்டன் பிரியாணிதான் ஸ்ரீ கோனார் விலாஸின் அடையாளம். மிகச்சிறப்பு. சிக்கன் ரோஸ்டட் பிரியாணி என்று ஒருவகை இருக்கிறது. மதுரை மட்டன்

குழம்பு, சிக்கன் செட்டிநாடு குழம்பு, சிக்கன் முந்திரி கிரேவி, வஞ்சிரம் மீன் குழம்பு, விரால் மீன் குழம்பு

43    Manna Mess அச்சிறுப்பாக்கம் லூப் சாலையில், காவல் நிலையத்துக்கு அருகில் இருக்கும் மன்னா மெஸ்    காலை 11.30க்குத் தொடங்கி 3.30-க்கெல்லாம், வெள்ளிக்கிழமை செல்பவர்களுக்கு

நெய்ச்சோறும் மட்டன் நிஹாரியும் கிடைக்கும். கானாங் கெளுத்தி மீன் போட்டு சரிக்குச் சரியாக மாங்காய் போட்டிருக்கிறார்கள்

42    Selviyammal Grama hotel    சென்னை, ராமாவரம், கற்பகாம்பாள் நகர் முதல் தெருவில் உள்ள செல்வியம்மாள் கிராமிய உணவகம்     மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, கிளிச்சை மீன்,

சங்கரா மீன் வறுவல்கள், காடைப் பிரட்டல், நாட்டுக்கோழி வறுவல், மட்டன் மசாலா,  ஈரல் கிரேவி…இரவுச் சிற்றுண்டி ரொம்பவே ஸ்பெஷல். வாத்து கிரேவி, ஆட்டுக்கால் பாயா, கணவாய் மீன் தொக்கு,

சுறாப் புட்டு, தலைக்கறி என அசத்தலான அசைவத் தொடுகறிகளைச் சாப்பிடலாம். கூடவே, சிறுதானியச் சிற்றுண்டிகள். மூங்கிலரிசி தோசை, பனைவெல்ல இனிப்பு தோசை, நாட்டுச்சோளம்,

பச்சைப்பயறு, குதிரைவாலி தோசைகள், இடியாப்பம் - நாட்டுச்சர்க்கரை - தேங்காய்ப்பால், கல்யாண முருங்கை, கரிசலாங்கண்ணி என மூலிகைத் தோசைகள், கறி சப்பாத்தி

41    Hot pot hotel    ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை சாலையில்  இருக்கும் ‘ஹாட் பாட்’ உணவகம்.    1.30-க்கு உணவகம் தொடங்குகிறது. மண்பானை சாப்பாடு 80 ரூபாய். பொன்னியரிசி சாதம்,

கூட்டு, பொரியல், மீன் குழம்பு, மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு, சாம்பார், வற்றல் குழம்பு, ரசம், மோர், பாயசம். குழம்பு வகைகள், கூட்டு, பொரியலெல்லாம் மண்பாண்டத்தில் செய்தவை. ஹாட் பாட்

உணவகத்தின் சிறப்பு, பிரியாணி வகைகளும் தொடுகறிகளும்தான்.

40    Kooraikadai    ராஜபாளையம், ரயில்நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘கூரைக்கடை கூரைக்கடையின் ஸ்பெஷல், மட்டன் சாப்பாடு. அயிரை மீன் குழம்பு அசத்தலாக இருக்கிறது.

39    Madurai sree Devar hotel    சென்னை, பாரிமுனையில் உயர்நீதிமன்றத்துக்கு எதிரே, சுக்குராமத் தெருவில்    பிரியாணியில் மட்டும் சிக்கன், மட்டன், காடை, வான்கோழி,

முயல், நாட்டுக்கோழி, இறால், சிக்கன் 65, வஞ்சிர மீன், வாத்து என 10 வகைகளை வைத்திருக்கிறார்கள். நண்டு ஃப்ரை, வான்கோழி ஃப்ரை, சிக்கன் சுக்கா, வஞ்சிர மீன் வறுவல், வஞ்சிர மீன் கிரேவி,

நெத்திலி வறுவல், முயல் ஃப்ரை, மட்டன் கோலா, வாத்து ஃப்ரை, நாட்டுக்கோழி ஃப்ரை, கடம்பா மீன் ஃப்ரை, மட்டன் சுக்கா, இறால், தலைக்கறி

38    Nelveli veg restaurant    சென்னை, பெசன்ட் நகர், முதல் பிரதான சாலையில், மின்சார வாரிய அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் நெல்வேலி சைவ உணவகம்    ‘நெல்வேலி ஸ்பெஷல்

தென்னிந்திய விருந்து’,திருநெல்வேலியின் உன்னதமான சைவ உணவை அசலாகத் தருகிறார்கள் ‘நெல்வேலி’யில், 4 மணிக்கு ஸ்நாக்ஸ் தயாராகிவிடும். வாழைப்பூ வடை, கீரை வடை, பஜ்ஜி,

பக்கோடா வகையறாக்கள்...  மாலை சிற்றுண்டி... கம்பு தோசை, கொள்ளு தோசை, பச்சைப்பயறு தோசை, ஆப்பம்-தேங்காய்ப்பால், ஸ்பிரிங்ரோல் தோசை, தக்காளி தோசை, பொடி தோசை

37    Guruma hotel    சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காவேரிபாக்கம் என்ற இடத்தில் உள்ள ‘குருமா ஹோட்டல்’, பேருந்து நிறுத்தத்துக்கு எதிரில் சற்று

உள்ளடங்கியிருக்கிறது இந்த உணவகம்    குருமா ஹோட்டலின் ஸ்பெஷல், இடியாப்பம்- ஆட்டுக்கால் பாயா. ஆனால், காலை ஏழு மணியிலிருந்து எட்டு மணிக்குள் சென்றால் மட்டுமே கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் சிக்கன் பிரியாணி போடுகிறார்கள். மற்ற நாள்களில் மட்டன் பிரியாணிதான்

36    99 kilometer coffee stop சென்னையிலிருந்து சரியாக 99 கிலோ மீட்டர்... அச்சிறுப்பாக்கத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, ‘99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்’   

`சிறப்புச் சிறுதானிய மதிய உணவு’ காம்போ 190 ரூபாய்., காலை 5.40-க்கு உணவகத்தைத் திறக்கிறார்கள். 6.30 மணியிலிருந்து டிபன் கிடைக்கும். எல்லாம் நம் பாரம்பர்யச் சிற்றுண்டிகள். மாப்பிள்ளைச்

சம்பா அவல் உப்புமா, கொள்ளுக் கஞ்சி, வெங்காய ராகி ரவா தோசை, முளைக்கட்டிய பயிர் இட்லி, சீரக இட்லி, முடக்கத்தான் தோசை, வல்லாரைத் தோசை, தூதுவளைத் தோசை, பிரண்டைத் தோசை

33    Naidu mess திருவள்ளூர்ப் பேருந்து நிலையத்துக்கு எதிரில், ராஜாஜி சாலையில் சிறு சந்துக்குள் இருக்கிற நாயுடு மெஸ் நாயுடு மெஸ்ஸின் சிறப்பு, வஞ்சிர மீன் வறுவல், சுறாப்புட்டு, நாயுடு

மெஸ்ஸில் கட்டாயம் சாப்பிட வேண்டிய ஒன்று. நெத்திலிக் கருவாட்டு ஃப்ரை

32    Arusuvai restaurant சிதம்பரம், கீழவீதியில் உள்ள ஆறாம் திணை உணவகம், தூய அறுசுவை உணவை வழங்குகிறது இளநீர் பாயசம், புளிப்புக்கு மாங்காய் சாம்பார், கசப்புக்கு

முடக்கத்தான் ரசம், கார்ப்புக்கு சுண்டைக்காய் வற்றல் குழம்பு, துவர்ப்புக்குக் கோவைக்காய் பொரியல், உவர்ப்புக்கு கிடாரங்காய் ஊறுகாய். இவைதவிர, கீரைக்கூட்டு, உருளைக்கிழங்கு அவியல் கறி,

முளைக்கட்டிய பயறு சாலட், கருப்பட்டியில் செய்த சந்திரகலா, செக்கெண்ணையில் பொரித்த அப்பளம், மிளகாய் வற்றல், மண்பானைத் தயிரில் தாளித்த மோர்.

31    Ashoka mess அறந்தாங்கியில், புதுக்கோட்டைச் சாலையில் இருக்கும் அசோகா மெஸ்ஸில் 2 மணிக்கு மெஸ் தொடங்கிவிடுகிறது.  அன்லிமிடெட் சாப்பாடு 60 ரூபாய். மட்டன் குழம்பு, சிக்கன்

குழம்பு, மீன் குழம்பு, இறால் கிரேவி, வற்றல் குழம்பு, ரசம், மோர்... கூட ஒரு கூட்டு, ஒரு பொரியல். அசோகா மெஸ்ஸின் ஸ்பெஷலே சைடிஷ்தான்.  இறால், சிக்கன் , மட்டன், நண்டு. அளவெல்லாம் இல்லை.

கரண்டியில் அள்ளி வைப்பதுதான். போதுமென்று சொல்லும் வரைக்கும் அள்ளி வைக்கிறார்கள். இறால், மட்டன், நண்டு மூன்றும் தலா 120 ரூபாய்

30    Nilasoru restaurant புதுக்கோட்டை, வடக்குராஜ வீதியில் பிருந்தாவனத்துக்கு அருகில் இருக்கிற ‘நிலாச்சோறு உணவக    ஏழரை மணிக்கு டிபன் ரெடியாகிவிடுகிறது. சிறுதானிய இட்லி,

கேழ்வரகு தோசை,  கேழ்வரகுக்கூழ், கம்மங்கூழ், வரகுப் பொங்கல், கம்பு பூரி சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னி, மல்லிச் சட்னி, பிரண்டைச் சட்னி, கடலைச் சட்னி...மதியம், இயற்கைச் சாப்பாடு. 80

ரூபாய்...மாலை, இயற்கை தானியங்களில் செய்யப்படும் பலகாரங்கள்; இரவு, தானியப் பொடி தோசை வகைகள், இடியாப்பம் - தேங்காய்ப்பால், நவதானிய அடை சாப்பிடலாம்.

29    Amma Restaurant    வேலூர், பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருக்கிற `அம்மா ரெஸ்டாரன்ட்    சிக்கன் பிரியாணியும் மட்டன் பிரியாணியும் மட்டும்தான். தொடுகறியாக

வெங்காயப் பச்சடியும், எண்ணெய்க் கத்திரிக்காயும் தருகிறார்கள். வேறெந்த சைடிஷும் கிடையாது.  அரை பிளேட் பிரியாணி 100 ரூபாய். தேவைப்பட்டால் கால் பிளேட்டோ, அரை பிளேட்டோ குஸ்கா

வாங்கிக்கொள்ளலாம். கால் பிளேட் 20 ரூபாய்.

28    OK Burma atho shop மூலக்கடை, மேம்பாலத்துக்குக் கீழே, ஜி.என்.டி சாலையில் உள்ள ‘ஓ.கே. பர்மா அத்தோ கடை’     ஓ.கே. அத்தோ கடையின் ஸ்பெஷல் என்றால், பாங்கா அத்தோ,

சிக்கன் அத்தோ, முட்டை சீஜோ, பேஜோ மசாலா, பேஜோ மொய்ங்கா, முட்டை பேஜோ அத்தோ, இறால் வடை. அத்தோ, சீஜோ, மொய்ங்கா. மூன்றுமே நூடுல்ஸ் வகையறாக்கள்தான்.  அத்தோவுக்கு

ஆரஞ்சு நிற நூடுல்ஸ். சீஜோவுக்கு பிரௌன் கலர். மொய்ங்காவுக்கு வெள்ளை. பேஜோ குழம்பு, முட்டை மசாலா, பாங்கோ அத்தோ  வித்தியாசமான உணவு. முட்டைக்கோஸ், முட்டை, பேஜோ

மூன்றையும் சேர்த்து பர்மிய மசாலாவைத் தூவி நன்கு கிளறி அள்ளித்தருகிறார்கள், பேஜோ மசாலாவின் வடிவமே அழகு. உடைக்கப்படாத முழு பேஜோவின் நடுவில் புளித்தண்ணீர் விட்டு, பொரித்த

வெங்காயம், பூண்டு, கொத்தமல்லித்தழை, எண்ணெய் விட்டு, நடுவில் கொஞ்சம் கடலை மாவைத் தூவி, அகன்ற தட்டில் வைத்துத் தருகிறார்கள்.

27    Karaikudi Aachi mess திருவண்ணாமலை சந்நிதித் தெருவில் உள்ள காரைக்குடி ஆச்சி மெஸ்ஸில்    லஞ்ச் மட்டும்தான். 12 மணிக்குத் தொடங்கி 4 மணிக்கு நிறைவடைந்துவிடும்.

ஸ்பெஷல் சாப்பாடு 170 ரூபாய். ஒரு கப் சிக்கன், ஒரு கப் மட்டன், ஒரு துண்டு மீன்,  ஒரு முட்டை, கூட்டு, பொரியல், சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, மீன்குழம்பு, சாம்பார், ரசம், மோர், தயிர்.

26    Carnival family restaurant சென்னை, பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள கார்னிவல் ஃபேமிலி ரெஸ்டாரன்டில்    `ராஜபோக விருந்தி’ல் மொத்தம் 25 டிஷ்கள். சிக்கன்,

மட்டன், இறால், காடை தொடங்கி தேன்மிட்டாய், கடலை மிட்டாய், இளநீர்ப் பாயசம். `மெகா ராஜபோக விருந்து’ம் இருக்கிறது. அதன் விலை 699 ரூபாய். மேற்கண்ட டிஷ்கள் தவிர்த்து, நண்டு ஃப்ரை,

தலைக்கறி, குடல் வறுவல் கூடுதலாக வரும். மாலையில், `ராஜபோகச் சிற்றுண்டி’ சாப்பிடலாம். அதுவும் 599 ரூபாய். சைடிஷ்கள் எல்லாம் ஒன்றுதான். சாதத்துக்குப் பதில் கொத்துப்பரோட்டா,

இடியாப்பம், கறிதோசை தருகிறார்கள்.

25    New President hotel செக்காலை ரோட்டில், பாண்டியன் தியேட்டருக்கு எதிரில் இருக்கிற, ‘நியூ பிரசிடென்ட்’ ஹோட்டல்    காலை 7 மணி முதல் 11.30 வரை வழக்கமான டிபன் வகைகள்.

11.30 முதல் 3 மணி வரை கட்டுச் சாதங்கள். லெமன் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம்,  தேங்காய் சாதம், சாம்பார் சாதம். கூடவே  வெஜ் பிரியாணி, காளான் பிரியாணியும் உண்டு. மாலை 4

மணி வரை கட்டுச்சாதம் களைகட்டுகிறது. அதன்பிறகு இடைப் பலகாரம். காரைக்குடிக்கே உரித்தான மரபுப் பலகாரங்கள். வெள்ளைப்பணியாரம், குழிப்பணியாரம், பூரணக் கொழுக்கட்டை,

கந்தரப்பம், கற்கண்டு வடை, போளி, மகிழம்பூப் புட்டு, கேழ்வரகுப் புட்டு.

24    Vignesh nattukoli kooraikadai    தேனியிலிருந்து போடி செல்லும் பிரதான சாலையில் கோடாங்கிபட்டியில் இருக்கிறது, ‘விக்னேஷ் நாட்டுக்கோழிக் கூரைக்கடை.’      அன்லிமிடெட்.

நாட்டுக்கோழிக் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, ரசம், மோர்..இந்த உணவகத்தின் ஸ்பெஷல், நாட்டுக்கோழி சுக்கா. மாலை நாட்டுக்கோழிக் குழம்பு, வறுவல், சுக்காவோடு

சுடச்சுட இட்லி, தோசை, பரோட்டா சாப்பிடலாம். 

23    Sree Narayana Coffee house கானாடுகாத்தான் ராஜா சர் தெருவிலிருக்கும் ‘ஸ்ரீ நாராயணா காபி ஹவுஸு’    வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், பூரணக் கொழுக்கட்டை எனச்

செட்டிநாட்டுப் பலகாரங்கள் எல்லாம் கிடைக்கின்றன. மதியம் ‘செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச்’ சாப்பிடலாம்.

22    Nalan restaurant `நளன் உணவகம்.’ கரூர் உழவர் சந்தைக்கு அருகில் பழைய பைபாஸ் சாலையில் இருக்கிறது.    சாமை, திணை, வரகு, குதிரைவாலி, பனிவரகு என தினமொரு தானியத்தில்

பொங்கல் கிடைக்கிறது. பாசிப்பருப்பு தோசை, முருங்கைக்கீரை தோசை, சோள தோசை... எனச் சொல்லும்போதே நாவூற வைக்கும் தோசை வகைகள் இருக்கின்றன. தூதுவளை சட்னி, பீர்க்கங்காய்

சட்னி, கேரட் சட்னி, வேர்க்கடலை சட்னி, இஞ்சி சட்னி என தினமொரு வித்தியாசமான சட்னியும் கிடைக்கிறது. 12 மணிக்கெல்லாம் மீல்ஸ் தயாராகிவிடுகிறது. 75 ரூபாய். சாதம், புடலங்காய் சாம்பார்,

மொச்சைக்குழம்பு, வெற்றிலை ரசம், அவரைக்காய்ப் பொரியல், சௌசௌ கூட்டு, பச்சரிசிப் பாயசம், சுட்ட அப்பளம், வாழைப்பூ வடை, சைவ மோர்...

21    Sree Murugavilas restaurant கரூர்-திண்டுக்கல் பைபாஸ் சாலைப் பயணத்தில், மலைக்கோவிலூர் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீமுருகவிலாஸ் உணவகத்தில் மண்பாண்டச் சமையலின் சுவை,

தண்ணிக் குழம்பு, மட்டன் எலும்புக் குழம்பு, மீன் குழம்போடு ஒரு மீல்ஸ், ஓர் உப்புக்கறி...  190 ரூபாயில் இதமான சுவையான அசலான பாரம்பர்யமான விருந்து

20    Maruthi restaurant    தேனி - மதுரைச் சாலையில் உள்ள மாருதி ரெஸ்டாரென்ட்டு    தினை சர்க்கரைப்பொங்கல், காளான் வரகரிசி பிரியாணி, சாமை சாம்பார்சாதம்,

குதிரைவாலி தயிர்சாதம்... எல்லாம் ஒவ்வொரு கிண்ணம் தருகிறார்கள். லிமிடெட்தான். சைடிஷாக, பாகற்காய் இனிப்புப்பச்சடி.  தொட்டுக்கொள்ள, நெல்லிக்காய்த் துவையல்...  இறுதியில், ஒரு

கிண்ணம் நிறையப் புதினா - மல்லி ஜூஸ்.

19    Thottathu virunthu ஈரோடு, வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள,  `தோட்டத்து விருந்து’ தோட்டத்து விருந்து ஸ்பெஷல்’ என்றே ஒரு சைடிஷ் வைத்திருக்கிறார்கள். ‘பிச்சுப்போட்ட

கோழி’-க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ஆந்திரா முட்டை’ என்று ஒன்று...

18    Karuppaiya mess    விருகம்பாக்கம், ஆற்காடு சாலை,  சந்திரா மெட்ரோ மாலின் உள்ளே இருக்கும் கருப்பையா மெஸ்ஸு    12 மணிக்கெல்லாம் லஞ்ச் ரெடியாகி விடுகிறது. சைடிஷ்

தனியாக வாங்க வேண்டியதில்லை. சாப்பாட்டோடு வந்துவிடும். மட்டன் சாப்பாடு, சிக்கன் சாப்பாடு, நாட்டுக்கோழி சாப்பாடு, காடை சாப்பாடு, நண்டு சாப்பாடு, மட்டன் கோலா உருண்டை

சாப்பாடு, விரால் மீன் குழம்பு சாப்பாடு என  12 வகையான சாப்பாட்டு வெரைட்டிகள் வைத்திருக்கிறார்கள். நாட்டுக்கோழி சாப்பாடும், நண்டு சாப்பாடும் சர்ப்ரைஸ். மீன் ஐட்டங்களும் சிறப்பு.

நெத்திலி மீன், விறால் மீன் குழம்புகள், வஞ்சிரம் ஃபிஷ் கறி மூன்றும் ஆஸம்.

17    Karthik mess திருச்சி கன்டோன்மென்ட், வில்லியம்ஸ் சாலையில் உள்ள கார்த்திக் மெஸ்    அயிரை மீன்குழம்பு, விறால் மீன்குழம்பு, நெத்திலி மீன்குழம்பு, காரப்பொடிக்குழம்பு என

நான்கு வகையான குழம்புகள், வஞ்சிர மீன் வறுவல், நெத்திலி மீன் வறுவல், போன்லெஸ் சில்லி ஃபிஷ் என ரசனையான மீன் சைடிஷ்கள் இங்கே கிடைக்கின்றன. காரப்பொடி மீன்குழம்பு ‘கார்த்திக்

மெஸ்’ஸின் ஸ்பெஷல்.

16    Mangalambika vilas கும்பேஸ்வரர் சந்நிதியின் உள்ளே இருக்கிறது ‘மங்களாம்பிகா விலாஸ்’ காபி ஹோட்டல்.    அன்லிமிடெட். சாம்பார், வற்றல் குழம்பு, மோர், பொரியல், இரண்டு

கூட்டுகள், ஊறுகாய், பாயசம், அப்பளம், மிளகாய் வற்றல். மனசுக்கு நிறைவான சாப்பாடு. குழைந்த பருப்பு கணக்காகக் கெட்டியாக, காய்கறிக் கலவையாக இருக்கிறது சாம்பார். உப்பு, புளி, காரம்

எல்லாமே கச்சிதம். வற்றல் குழம்புதான் மங்களாம்பிகாவின் அடையாளம்.

15    Sree Parasakthi hotel சேலம், செவ்வாய்ப்பேட்டை, வெங்கடப்பன் சாலையில் சற்று உள்ளடங்கியிருக்கும் ‘ஸ்ரீஸ்ரீ பராசக்தி உணவக’    மீன்குழம்பு, நாட்டுக்கோழிக்குழம்பு,

மட்டன்குழம்பு, ‘தண்ணி’க்குழம்பு, சிக்கன் மசால் குழம்பு என 5 விதமான குழம்புகள் தருகிறார்கள். பிச்சுப்போட்ட நாட்டுக்கோழி ஃபிரை, சேலத்துக்கேயான தனித்தன்மை மிக்க சைடிஷ்.

14    Idlies    சென்னை, அசோக்நகர் 18-வது அவென்யூவிலிருக்கிறது ‘இட்லீஸ்’ (Idlies) பொடி இட்லி, பொடிஸா, வெல்ல தோசை, தயிர்ப்பொடி இட்லி, நெய்ப்பொடி இட்லி, பூண்டுக்குழம்பு

இட்லி, தவா ஃப்ரை பட்டர் இட்லி, மோர்க்களி, மட்கா தயிர்சாதம்...

13    Vaira Maligai திருநெல்வேலி,   முருகன்குறிச்சியில்  இருக்கும் ‘வைர மாளிகை’     நாட்டுக்கோழி பிரியாணி, நாட்டுக்கோழி ஆனியன் ஃப்ரை, நாட்டுக்கோழி சாப்ஸ், நாட்டுக்கோழி

சுக்கா, இரவு  7 மணியில் இருந்து 11 மணி வரை ‘பரோட்டா- பொறிச்ச கோழி’ கிடைக்கிறது

12    Ezham suvai திருச்சி,  தில்லைநகர் இரண்டாவது கிராஸில் உள்ள ஏழாம் சுவை ‘சைவ’ உணவக    ஹாட் வெஜ் ஃபிஷ், மங்கோலியன் வெஜ் லாம்ப், ஆரஞ்சு வெஜ் சிக்கன், டிம் சம் வெஜ்

லாம்ப், வெஜ் சிக்கன் லாலிபாப்,  வெஜ் எக் போண்டா,  வெஜ் ஃபிஷ் ஃபிங்கர், வெஜ் சிக்கன் ரைஸ், வெஜ் கோலா உருண்டை, தந்தூரி வெஜ் சிக்கன் ரோல்...‘வாழைப்பூ ஃப்ரைடு ரைஸ்’ இந்த

உணவகத்தின் இன்னொரு ஸ்பெஷல்

11    Santhai mutton hotel நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட்டுக்கு எதிரில் இருக்கிற, ‘சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டலில்’    ஒரு கிண்ணம் நிறைய மட்டன்

தருகிறார்கள். குலதெய்வக் கோயில்களில் கிடா வெட்டி பூசை போடும்போது போடுவார்களே... படைப்புச் சாப்பாடு, அதே ருசி. எலும்பையும் கறியையும் போட்டு ஒரே குழம்பாக திரட்டிவிடுகிறார்கள்.

ரத்தக் குடல் பொரியலும், வெங்காயத் தயிர் பச்சடியும் சைடிஷாகத் தருகிறார்கள். தேவைப்பட்டால் ஒரு கிண்ணம் புளிரசமும் வாங்கிப் பருகலாம்

10    Krishna Vilasam    சென்னை, அடையாறிலுள்ள  `கிருஷ்ண விலாசம்’ உணவக    விசேஷச் சாப்பாட்டில் மொத்தம் 15 வகையான டிஷ்கள். சிந்தாமணி அல்வா, சிந்தாமணி ரவா இட்லி,

கலந்த தானியங்களால் செய்யப்படும் வாசனை தோசை என்று கிருஷ்ண விலாசத்துக்கே உரிய சில வித்தியாசமான டிஷ்களும் உண்டு

9    Sivakasi Nadar mess சங்கரன்கோவிலின், அங்கூர் விநாயகர் கோயில் தெருவிலிருக்கும் சிவகாசி நாடார் மெஸ்ஸு    பொன்னி அரிசி பிரியாணி, கரண்டி ஆம்லேட், நெய் சுக்கா

8    Thirukkural hotel அடையாறு, காந்திநகர் 2-வது பிரதான சாலையில் இருக்கும் `திருக்குறள் உணவக’    ‘நம்மாழ்வார் விருந்து’, ‘தொல்காப்பியர் விருந்து’ என இரண்டுவித

‘காம்போ’-க்கள். நம்மாழ்வார் விருந்து 158 ரூபாய்... மொத்தம் 19 டிஷ்கள். ஆறு வகை வெரைட்டி ரைஸ் தருகிறார்கள். குதிரைவாலி சாம்பார் சோறு, வரகு எலுமிச்சைச் சோறு, பனிவரகு ரசச் சோறு,

சீரகச்சம்பா பிரியாணி, குதிரைவாலி தயிர் சோறு, வரகு-தக்காளிச் சோறு.

7    Pattukkottai Kamatchi mess தஞ்சாவூர், புதிய பேருந்து நிலையத்துக்கு அருகிலிருக்கிற `பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்’     240 ரூபாய் மீல்ஸ்... அன்லிமிடெட்.  தலைவாழை

இலையில் பரிமாறுகிறார்கள். மணக்க மணக்க பொன்னியரிசி சாதம்... கூட்டு, பொரியல்... தவிர, எலும்புக் குழம்பு, மீன் குழம்பு, நண்டுக் குழம்பு, நாட்டுக்கோழிக் குழம்பு, நல்லியெலும்புக் குழம்பு என

ஐந்து வகைக் குழம்புகள்…காடை கிரேவி, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, நண்டு கிரேவி, இறால் கிரேவியைச் சுமந்துகொண்டு வரிசையாக வருகிறார்கள்....நாட்டுக்கோழி தெரக்கல், நாட்டுக்கோழி

பெப்பர் ஃப்ரை, ஈரல் வறுவல், நண்டு வறுவல், மீன் வறுவல்

6    Madyasa hotel சென்னை எழும்பூர், ஹால்ஸ் ரோட்டில் உள்ள மத்ஸயா உணவகத்தில் 13 டிஷ்கள் அடங்கியது உடுப்பி பிளாட்டர். பிற்பகல் 12 மணியிலிருந்து மூன்று மணிவரை சாப்பிடலாம்.

190 ரூபாய்...ரசவடை, நான்கு மங்களூர் போண்டா, இரண்டு பீஸ் குழிப்பணியாரம்... கூடவே ஒரு பிஸ்குட் ரொட்டி, சைடு-டிஷ்ஷாகக் கொஞ்சம் சாம்பார், வெள்ளரி தோசை, கார உப்புப்புளி தோசை,

கடுபு-காரக்குழம், பிசிபேளாபாத், பெல்லுளி அன்னம், தயிர் சாதம்

5    Kaliyuga hotel    சேலம், ஜங்ஷன் மெயின் ரோட்டில் இருக்கும்  `கலியுகா உணவக’    மணக்க மணக்க கேழ்வரகுக் களி, தொட்டுக்கொள்ள நாட்டுக்கோழிக் குழம்பு, மட்டன் குழம்பு,

தலைக்கறிக் குழம்பு, மீன் குழம்பு... விரும்பினால் கீரைக்கடைசல், பொட்டுக்கடலைச் சட்னியும் தருகிறார்கள். கருவாட்டுக் குழம்பில், வாசனையுடன் இணைந்த ஒரு ‘நாட்டுச் சுவை’  உண்டு

4    Kathirvel Vathu kadai    வேலாயுதம்பாளையத்தில், கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் இருக்கிறது ‘கதிர்வேல் வாத்துக்கடை.’    வாத்துக்கறி கிரேவி, வாத்து ஃப்ரை, வாத்து முட்டை

ஆம்லேட், கலக்கி...  நான்கும் கதிர்வேல் வாத்துக்கடையில் ஸ்பெஷல்.

3    Kaliyakudi coffee hotel    மயிலாடுதுறை மணிக்கூண்டு அருகிலுள்ள காளியாகுடி காபி ஹோட்டல்    காலை ஆறரை மணிக்கு காபி, பொங்கல், வடையுடன் விடிகிறது பொழுது. மதியம்

சாப்பாடு. வழக்கம்போல, கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், வற்றல் குழம்பு, பச்சடி, பாயசம், அப்பளம்தான். ஆனால், எல்லாவற்றிலும் அசல் சோழநாட்டுச் சுவை. காளியாகுடியின் இன்னொரு ஸ்பெஷல், அல்வா.

2    Appam happers    மதுரை கே.கே.நகர், எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் இருக்கிற `ஆப்பம் ஹாப்பர்ஸ்’    இலங்கையின் பாரம்பர்ய உணவான ஆப்பங்கள், அதற்கு சைட்-  டிஷ்ஷாக பொல்

சம்பல், சீனிச் சம்பல், நூல் நூலாகப் பிரிகிற பூப்போன்ற இடியாப்பம்... அதற்கு சைட்- டிஷ், மணக்க மணக்கத் தேங்காய் சொதி: முட்டை ஸ்டஃப் செய்யப்பட்ட  அசல் சிலோன் ரொட்டி,  திகட்டாத 

வாழைப்பழ இனிப்பு ரொட்டி, முழு விளை மீன் ஃப்ரை, மொத்தி மொத்தியான  இறால் வறுவல், வித்தியசமான நண்டு ஆம்லேட் என ருசி விரும்புபவர்களுக்கு வேறுபட்ட அனுபவத்தைத் தருகிறது இந்த

உணவகம்.

1    A.P. Food paradise    சென்னை, பெரும்பாக்கம் - மேடவாக்கம் நெடுஞ்சாலை, கைலாஷ் நகரில் இருக்கும் ஏ.பி. ஃபுட் பேரடைஸ் உணவக    பரோட்டா, குடல் வறுவல், தலைக்கறி,

எண்ணெய் சுக்கா, நாட்டுக்கோழி சாப்ஸ், பெப்பர் சிக்கன், சிக்கன் லெக் பீஸ், காடை ரோஸ்ட், கரண்டி ஆம்லெட், சிக்கன் பிரியாணி, சோறு, மீன் வறுவல், நண்டு மசாலா, ரத்தப் பொரியல், சிக்கன்

பிரட்டல், மட்டன் சிக்கன் மீன் குழம்புகள், ரசம், தயிர், ஊறுகாய், அப்பளம், இனிப்பு
.

Wednesday, January 23, 2019

சோத்துக்கடை ஸ்ரீதேவி ஸ்டோர்ஸ், சலீவன் வீதி, டவுன்ஹால், கோவை...

மாலை ஆனவுடன் நொறுக்கு தீனியை தேடி மனம் அழையும். மழை பெய்துவிட்டால் வாழக்காய் பஜ்ஜி தான் வேண்டும் என்று ஒத்த கால்ல நிற்போம். முன்னெல்லாம் மாலை வேளையில் வீட்டில் பொறி, கடலை கொடுப்பார்கள் இப்போது எல்லாம் காலம் மாறி வீட்டில் நொறுக்கு தீனி தின்பதும் மிக குறைந்துவிட்டது.

நம்ம ஊரைப்பொறுத்தவரை வட இந்திய உணவான பேல் பூரி, பானி பூரி, மசால் பூரி என்று ஊரைச்சுத்தி நிறைய கடைகள் உண்டு. ஆனால் நம் பாரம்பரியத்தில் ஊறிய நொறுக்கு தீனிகடைகள் மிக குறைவு தான். தேடித்தேடித் தான் திங்க வேண்டி இருக்கும்.

நம் பாரம்பரியத்தில் ஊறியது என்றால் பொறி, கடலை, மசால் பொறி, மசால் கடலை, தட்டு முறுக்கு செட், மசாலா கரம் போன்ற நொறுக்கு தீனிகள் தான். இந்த தீனி கடைகள் நம் வீட்டுப்பக்கத்தில் இல்லை. ஆனால் தேடனும் ஆசை தீர நாவிற்கு இனிய நொறுக்கு தீனி சாப்பிடவேண்டும் என்றால் தேடனும். அப்படி தேடி தேடி பிடித்த கடை தான் ஸ்ரீதேவி ஸ்டோர்ஸ் இது சலீவன் வீதியில் சின்ன கடையாக அமைந்துள்ளது.

கடைதான் சிறியது ஆனால் உள்ளே உள்ள நொறுக்கு தீனிகள் அனைத்து சுவையோ சுவை. இந்த கடைக்கு என்று நம்மை போல தேடி தேடி உன்னும் பலர் இங்கு வருகின்றனர்.

நாம் போய் ஆர்டர் செய்த பின் தான் மிக்ஸ் செய்து நமக்கு உண்ண தருகிறார். குறைந்தபட்சம் 5 நிமிடமாவது நின்றால் தான் நமக்கு சுவையான நொறுக்ஸ் கிடைக்கும். நான் இந்த கடையில் வாடிக்கையாளர் ஆகி 5 மாதம் தான் இருக்கும். பல முறை சென்று ஒவ்வொரு முறையும் ஒரு வகையான நொறுக்சை ரசித்து ருசிச்ச பின்தான் உங்களுக்கு பகிர்கிறேன்..


தட்டு முறுக்கு செட்தான் முதலில் ஆர்டர் செய்தேன் தட்டு முறுக்கு மேல் பீட்ரூட் காரச்சட்னி வைத்து பின் சிறிய தாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீட்ரூட் மற்றும் கொத்தமல்லி இலை தூவி பின் அடுத்த தட்டு முறுக்கை எடுத்து அதில் தக்காளி காரச்சட்னி தடவி ஒரு செட்டுக்கு 4 என்ற கணக்கில் சான்விஜ் போல கொடுத்தார்கள்..



முழு தட்டு முறுக்கை எடுத்து அப்படியே ஒரு வாய் உள்ளே போட்டேன் மிதமான காரம், மொறு மொறுவென இருந்த தட்டுமுறுக்கின் சுவை, வெங்காயம், கேரட், பீட்ரூட் துருவல் எல்லாம் கலந்து இருக்க சுவை அம்மியது. மனதிற்கும் சாப்பிட்ட சுவை இருந்தது நாவில் நின்றது அதன் காரம்.

தக்காளி கரம், பொடி கரம், பன் சேன்விஜ், பேல் மிகஸ் என ஒவ்வொன்றும் ஒரு சுவை. மாலை நேர சிற்றுன்டிக்கு அருமையான கடை. இது மட்டுமல்லாமல் வித விதமான நொறுக்கு தீனிக்கள் எல்லாம் சுவையோடு இருந்தது. விலையும் குறைவான விலையே...

மாலைநேரம் வாய்க்கு ரூசியா சாப்பிட இந்த கடைக்கு தாரளமாக போகலாம்.



டவுன்ஹால் சலீவன் வீதியில் ஆட்டோ ஸ்டேண்ட் முன்புறம் இந்த கடை அமைந்துள்ளது.

Friday, November 9, 2018

சோத்துக்கடை - அம்மன் மெஸ், பவானி-கொமராபாளையம்.


ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான மெஸ் இருக்கும், இது உள்ளுர் ஆட்களுக்கே அதன் சிறப்பு தெரியாது. அட அந்த ஓட்டல் நன்றாக இருக்கும் என்று மட்டும் தான் சொல்வாங்க அங்க என்ன சிறப்பு, எதன் சுவை மெருகேறி இருக்கும் என்றெல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்க.. அப்படியான மெஸ் தான் இந்த அம்மன் மெஸ். தினமும் மதியம் 12.30க்கு இங்கு களை கட்டும் சாப்பாட்டுத் திருவிழா 3.30க்கு முடிந்து விடுகிறது. இந்த மெஸ்சின் நேரமே 3 மணி நேரம் தான். காலை, மாலை எல்லாம் கிடையாது மதிய உணவு மட்டுமே இங்கு கிடைக்கும்..

இந்த மெஸ் கிட்டத்தட்ட 35 வருடத்திற்கு மேலாக இயங்குகிறது. நான் 4 வருடத்திற்கு முன் ஒரு முறை சாப்பிட்டுள்ளேன். அதன் பின் கடந்த 2 வருடமாகத்தான் இதன் சிறப்பை அரிய நேரிட்டது. அதனால் சாப்பிட நேரம் பார்த்து கிடந்தேன் இந்த தீபாவளி விடுமுறையில் அந்த சுவையை பதம் பார்த்து விட்டேன்.

மதியம் 2.20க்குத்தான் உள்ளே நுழைந்தோம் எதுவும் இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்திலேயே சென்றோம் எங்க நேரம் எல்லாமே இருந்தது.

உள் நுழைந்ததும் ஒரு சின்ன அறை பழைய காலத்து மர டேபில் போட்டு அதில் சேர் போட்டு உள்ளனர் அந்த அறையில் 8 பேர் மட்டுமே சாப்பிட இயலும், அதற்கு அடுத்த அறையில் ஒரு 10 பேர் சாப்பிடும் அளவிற்கு மர டேபிள் போட்டு இருந்தார்கள், மிக முக்கியமாக நன்றாக சுத்தமாக பராமரிக்கின்றனர் உணவு உன்னும் இடத்தை.
15 நிமிட காத்திருப்புக்கு பின் ஒடி போய் இடம் பிடித்து உட்கார்ந்தோம். ( இங்கு இடம் இருந்தால் தான் உள்ளே அனுமதிக்கின்றனர், இல்லை என்றால் வெளியில் காத்திருந்து தான் செல்ல வேண்டும்)

நல்ல தலைவாழை இலை போட்டு தண்ணீர் வைத்ததும் மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு கொண்டு வந்து வைத்தார்கள். மட்டன் கொத்துக்கறி, பிச்சுபோட்ட கோழி, சிக்கன் வறுவல், மட்டன் வறுவல் ஆர்டர் செய்தோம். ஒரு மொறத்தில் சாப்பாட்டை சுட சுட கொண்டு வந்து கொட்டினார்கள். உடன் கொத்துக்கறி வந்தது.

கொத்துக்கறி நன்கு மசாலாவோடு கலந்து இருந்தது, மசாலா ரொம்ப தூக்கலாக இல்லாமல் அளவான பதத்தில் இருந்தது. சாப்பாடு சேர்த்து பிசைந்து ஒரு கவளம் போட்டதும் தான் மனம் நிறைந்தது. அப்படி ஒரு சுவை கொத்துக்கறியின் மனமும், மசாலாவின் மனமும் இனைந்து சாப்பாட்டை நன்கு பதம் பார்த்தது. மட்டன் குழம்பை சாப்பாட்டில் ஊத்தி கொத்துக்கறியோடு இனைந்து சாப்பிடுவது மிகச்சிறந்த சுவையாக பட்டது என் நாக்கிற்கு..

குழம்பை பற்றி சொல்லவேண்டுமானால் மசாலாவின் காரம் குறைவு, மல்லித்தூள் வாசம் அதிகம் இல்லாமல் வீட்டுச்சுவை அப்படியே இருந்தது.


மட்டன் வறுவலில் கறி நன்கு வேகவைக்கபட்டு வெங்காயம், பெப்பர் போட்டு நன்கு கலந்து கொடுத்தனர். நண்பர்களோடு பகிர்ந்து உன்னும் போது எனக்கு 4 துண்டு தான் கிடைத்தது. நாலு துண்டும் நறுக்கென்று இருந்தது. கறியை நன்றாக மென்னும் திங்கும் அளவு சுவை நாவிலேயே இருந்தது.

சிக்கன் வறுவல் போன்லெஸ் கிடைக்கவில்லை எலும்போடு இருந்ததும் நன்றாக மென்னு திங்கும் அளவில் வேகவைக்கப்பட்டு இருந்தது. மட்டனின் உள்ள மசாலாவும் சிக்கனில் உள்ள மசாலாவும் வேறு வேறு போல இரண்டின் சுவையும் ஒன்று போல இல்லை ஆனால் தனி ரகமாக நாக்கில் ஜொலித்தது.

பிச்சு போட்ட கோழி பல ஓட்டலில் சாப்பிட்டு இருந்தாலும் இங்கு வேறு வித சுவையோடு இருந்தது. நிறைய வெங்காயமும், பச்சை மிளாய்யும் போட்டு அதில் கோழியை பிச்சு போட்டு நன்றாக பெப்பர், மிளாய் தூள் போட்டு பிரட்டி கொடுத்தனர். எனது நாக்கை பிரட்டி போட்டது இதன் சுவை. அடுத்த முறை போகும் போது இதத்தான் முதல்ல சாப்பிடனும்ன்னு அப்பவே முடிவு செய்துவிட்டேன்.

அடுத்து ஆந்திரா முட்டை கொடுத்தார்கள் கடலை எண்ணெய் போட்டு சமைத்திருப்பார்கள் போல முட்டை பொறியலில் வரமிளகாய் தூக்கலாக போட்டு நன்கு வனக்கி கொடுத்தனர். இதன் சுவையோ அபாரம்.

எனக்கு முன் சாப்பிட்டவர் ஸ்பெசல் கலக்கி என்றார், நான் ரசத்துக்கு தாவும் போது சரி என எனக்கும் ஒன்று என்றேன். கலக்கியில் சின்னவெங்காயம், பச்சை மிளகாய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு அதில் முட்டை பெப்பர் போட்டு கலக்கி கொடுத்தனர் ரசத்துக்கு எல்லாம் தொட்டுக்கவில்லை கப்புன்னு நானே சாப்பிட்டேன் இதுவும் அங்க சாப்பிட போகும் போது மறக்காமல் சாப்பிட வேண்டியது.

சுடச்சுட இலையில் சாப்பாடு அதில் இரண்டு கரண்டி ரசத்தை ஊற்றி நல்லா பிசைந்து ஒரு வாய்தாங்க போட்டேன் அப்பப்பபா என்னா சுவை, ரசம் அப்படி இருந்தது. தக்காளியும், புளியும் சேர்த்து இப்படி எல்லாம் ரசம் கொடுக்க முடியுமா என்னும் அளவிற்கு சுவையாக இருந்தது.

கடைசியா கெட்டித்தயிர்ன்னு சொன்னாங்க சரின்னு நானும் நண்பரும் தயிர் ஊத்தி சாப்பிட்டோம். எருமைத்தயிர் போல எந்த புளிப்பும் இல்லாமல் தயிர் சாப்பிட்டது போல இருந்தது. தயிர் பிசைந்து ரவுண்டு கட்டும் போது அதில் தேனை ஊற்றினார்கள், தேன் தயிர் அடடா என்னா சுவை செம்ம காம்பினேசனாக இருந்தது. இதை ரசித்து ரசித்து சாப்பிடும் போது குல்கந்து கொடுத்தாங்க.. அச்சோ அங்கியே என் நாக்கு செத்திடுச்சு.. தயிர், தேன், குல்கந்து எப்பா என்னா சுவை என்ன ஒரு கலவை அப்படியே இலையை நன்றாக வழிச்சு நக்கிட்டு ஒரு பருக்கை கூட விடாமல் எழுந்து வந்தேன்...

வெளியே பில் கொடுத்தார்கள் பில் தொகையை எல்லாம் பார்க்கல, அப்படி ஒரு சுவை.. கொடுக்கற காசுக்கு குறைவில்லா சுவை என்பதை அடிச்சு சொல்லலாம். அப்படியே நாக்கில் எல்லா சுவையும் வந்து வந்து போகுதுங்க...

அமைவிடம்: கோவையில் இருந்து பெங்களுர் செல்லும் பைபாசில் பவானி காவிரி ஆற்றைத்தான்டியதும் இடது பக்கம் கொமராபாளையம் செல்லும் வழி வரும் அதே சாலையில் ஒரு அரை பர்லாங்கு போனதும் இடது பக்கம் வீடு போலத்தான் இருக்கும் அங்க போனா நம்ம நாக்கு அனுபவிக்கும் அப்படி ஒரு சுவையை....

Thursday, December 29, 2016

Service Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...

எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று தான் வாய்ப்பு கிடைத்தது. உடனே வண்டியை சர்வீஸ்க்கு விட்டேன். சர்வீஸ் சூப்பர்வைசர் 2000க்குள் செலவு வரும் சார் என்றார். கையில் பணம் இல்லண்ணே கார்டுதான் போடனும் என்று கூறினேன். அப்ப தலைமை அலுவலகத்தில் தான் சார் கார்டு போடனும், சர்வீஸ் சார்ஸ் போடுவாங்க கேட்டுக்குங்க என்றார். சரிங்க என்று சொல்லி வண்டியை விட்டு விட்டு வந்துவிட்டேன்.
மாலை வண்டியை எடுக்க சென்றேன் பில் தொகை 1850 சார், நீங்க தலைமை அலுவலகத்தில் கார்டு போட்டுக்குங்க என்று அனுப்பி வைத்தார். தலைமை அலுவகத்திற்கு சென்றேன் பில் தொகை அதனுடன் 1.75 service tax 33 ரூபாய் சேர்ந்து வரும் என்றார் அங்க பில் போட்ட பெண்மணி.
எதற்கு சர்வீஸ் சார்ஜ் அது தான் இப்போது கேஸ்லெஸ் என்ற முறை வந்திருக்கிறது கார்டில் பணம் கட்டினால் சர்வீஸ் சார்ஜ் இல்லை என்று சொன்னார்கள், நீங்கள் சர்வீஸ் சார்ஜ் கேட்கறீர்கள் என்றேன். எனக்கு தெரியாது சார் நீங்க அக்கவுண்டன்ட் சாரைத்தான் கேட்கனும் என்றார்.
அக்கவுண்டன் சாரை கேட்டால் எனக்கு தெரியாது சார், நீங்க மேனேஜரைத்தான் பார்க்கனும் என்றார். சரி என்று இருக்கும் நேரத்தை எல்லாம் வீணாக்கி அவரை சென்று சந்தித்தேன்.
ரொம்ப தெளிவாக நிறுத்தி நிதானித்து பேசினார் மேனேஜர். சார் நாங்க சர்வீஸ் சார்ஜ் போடுவது உண்மை தான் ஆனால் அந்த பணம் எங்களுக்கு வருவதில்லை அது வங்கிக்கு போகுது என்று அவருடைய அக்கவுண்ட் புத்தகத்தை காண்பித்தார் ( வங்கி ஸ்டேட்மெண்டை காண்பித்தால் உண்மை தெரிந்துவிடுமுள்ள) இல்ல சார் இது தவறாக தெரிகிறதே என்றேன்.
நீங்கள் வங்கியைத்தான் கேட்கவேண்டும், வேண்டும் என்றால் நாளை வாங்க வங்கிக்கு சென்று கேளுங்கள் என்றார் அதாவது உங்க பில் தொகை 1850 தான் எங்களுக்கு வரும், சர்வீஸ் வரி வங்கிக்கு போய் விடும் என்றார். நேரம் 8 மணி ஆகிவிட்டது, அதற்கு மேலும் அங்கு பேச மனதில் தெம்பு இல்லை சரி என்று பில் போட வந்தேன்.
சரி அந்த சர்வீஸ் டேக்ஸ்க்கு பில் போட்டு கொடுங்க என்றால் அது வங்கிக்கு போகும் பணம், நாங்க எப்படி பில் போடுவது என்று சார் என்று மறுபடியும் பேசினார். போய்த்தொலையுது என்று பில்லை கட்டினேன்.
நான் பில் கட்ட கட்ட இன்னொருவரும் இதே சண்டையையிட்டார். அவரிடமும் சமாதானம் பேசி, அங்க இருந்து அனுப்பிவிடுவதிலேயே குறியாக இருந்தார் மேனேஜர்.
இந்திய பிரதமர் அறிவித்த பின்பும் சர்வீஸ் வரி பிடிக்கிறார்கள், கேட்டால் வங்கியில் பிடிக்கிறார்கள் என்கிறார்கள் அதற்கும் பில் தருவதில்லை. வங்கியில் பிடிக்கும் பணத்திற்கு நாங்கள் எப்படி பில் தருவது என்கிறார். என்னுடைய சந்தேகம் எல்லாம் இந்த 33 ரூபாய் யாருக்கு போகிறது வங்கிக்கா? இல்லை Orpi Agencyக்கா?.
வங்கி அதிகாரியை கேட்டால் வங்கியில் பிடிப்பதில்லை என்கிறார். Orpi Agency கேட்டால் வங்கிதான் பிடிக்கிறது என்கிறார்கள்..
நான் யாரை போய் கேட்பது. கண் முன்னே என் பணம் கருப்பு பணமாக மாறுகிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது. கேஸ்லெஸ் என்று அதற்காக பல திட்டங்களை போடுகிறார்கள் பல வழிகளை சொல்கிறார்கள் ஆனால் வரி என்ற பெயரில் சிறு சிறு பணமாக நம்மிடம் பிடுங்குகிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆக நம் செய்யும் செலவிற்கு ஒவ்வொன்றிற்கும் வரி கட்டுகிறோம். கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும்...

Monday, June 13, 2016

போகிர போக்கில்...

கோவை காந்திபுரம், கிராஸ்கட் ரோடு எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலை, மேல் தட்டு நடுத்தர வர்க்கம் எல்லாம் இங்கு தான் குண்டூசி கூட வாங்குவார்கள் அந்த அளவிற்கு பிரபலமான, மக்கள் அதிகம் நடமாடும் சாலை, அதுவும் தற்போது 100 அடி சாலையில் வேலை நடப்பதால் இங்கு எப்போது சென்றாலும் ஊர்ந்து தான் செல்ல வேண்டி இருக்கு அந்த அளவிற்கு வாகன நெறிசல்.

சிக்னலில் இருந்து முன்னாடி சென்ற உயர்தர வாகனங்களுக்கிடையே எறும்பு போல ஊர்ந்து சென்றது என் வாகனம், முன்னால் சென்ற பொலிரோவின் புகையால் தத்தளித்தது என் நாசி. இம்புட்டு கூட்டத்தின் நடுவிலே தேடினேன் அந்த பூக்கார அக்காவை. மங்களகரமாக உட்கார்ந்து அவுங்க பூ விற்கும் அழகே தனி. மல்லிகைப்பூ நெருக்கமாக கட்டியவை ஒரு கூடையின் மேலும், கொஞ்சம் லுசா கட்டிய பூக்கள் ஒரு கூடையிலும், துளசி கலந்து பூ ஒரு கூடையிலும், சாதி மல்லிகைப்பூ ஒரு கூடையின் மேலும் அழகாக வரிசையாக அடுக்கி அதன் நடுவே ஒரு பூப்போல அமர்ந்திருப்பார்.

வருபவர்களை வாஞ்சையாக வரவேற்று அவர் பூ அளக்கும் அழகே தனி, தம்பி வாங்க என்ன வேனும் என்று ஒவ்வொன்றின் விலையை அடுக்கி சொல்வோர் நமக்கு வேண்டியதை வாங்கி திரும்பும் போது, தம்பிக்கு புது கண்ணாலம் போல இந்த ரோசவையும் வாங்கிக்க சம்சாரம் சந்தோசமாக வாங்கிக்கும் என்று அங்கேயே வீட்டு நெனப்பை மனம் முழுவதும் பரப்பி விடுவார்.


எனக்கு அவுங்க எப்பவும் சென்டி மெண்ட், அதனால் அந்த சாலையில் பயணிக்கும் போது எல்லாம் பூ வாங்க மறக்கமாட்டேன். இம்புட்டு நெறிசலில் பூ வாங்க இயலவில்லை என்ற வருத்தத்தோடு வண்டியை உருட்டிக்கொண்டே சென்றேன். நான் பொருள் வாங்க வேண்டிய கடை வந்தது ஆனால் வாகனத்தை நிறுத்தத்தான் வழியக்காணம். வரிசையாக நிற்கின்றன இரு சக்கர வாகனங்கள். கடைசியாக ஒரு ஆண்டி தன் ஏக்டிவ்வாவை எடுத்ததும் அந்த இடத்தில் சொருகி நிறுத்தினேன்.

வண்டியில் இருந்து இறங்கி அப்படியே கண்ணாடிய பார்த்து புகைக்கு நடுவில் சிக்கிய என் முகத்தை சிறு துண்டின் மூலம் துடைச்சு கொஞ்சம் என் முகத்தை அழகாக்கி அந்த கண்ணாடியில் புன்னகையை காட்டி நடைய கட்டினேன் நான் செல்லும் கடைக்கு.

பொருளை வாங்கிவிட்டு கடையில் இருந்து காலை வெளியே வைத்தேன், அப்படியே ஒரு கூட்டம் இந்த பக்கம் தள்ளியது, இன்னொரு கூட்டம் எதிர்புறம் தள்ளியது, தள்ளி தள்ளி என் வாகனம் இருக்கும் இடைத்தை தாண்விவிட்டேன், எதிரே திரும்பினால் வழி எங்கும் வாகனங்கள் ஆமையை விட வேகம் குறைவாக நகர்ந்தன, ஸ்ரீதேவியில் இருந்து கூட்டம் இறங்குவதும், உள்ளே நுழைவதுமாக இருந்தது. கால் டெக்சி ஆட்களோ வழக்கம் போல நடுரோட்டில் ஆட்களை ஏற்றி இறக்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது தான் கவனித்தேன் என் வாகனத்தின் அருகே ஒரு டிப்டாப் ஆசாமியை, பார்ப்பதற்கு ஆள் இந்தி நடிகன் போல இருந்தார், ஆனால் இவரை எல்லாம் எங்க ஊர் ஆட்களிடம் காட்டினால் பெட்சீட் விக்கர இந்திக்கார பையனட்டியே இருக்குதும்பாங்க.. ஆம் அப்படித்தான் இருந்தார் ஒரு சாயலில். அவர் வந்து லாயமாக என் வண்டியின் பக்கத்தில் அவரின் பல்சரை நிறுத்திவிட்டு பந்தாவக இறங்கியவரை ஒரு நிமிடம் ஏற இறங்க பார்த்தேன், பின்னாடி பிகர் எதாவது கூட்டிக்கொண்டு வந்தாரா என்று... ம்கும் ஒன்னையும் காணம்.

அதற்குள் இறங்கிய அந்த இந்தி ஆசாமி வேகமாக என் வண்டியின் கண்ணாடியை திருப்பி தலையை வாரு வாரு என்று வாரினார். நீ எல்லாம் ஆல்ரெடி அழகு தான்டா அப்புறம் ஏன் சீவுகிறாய் என்று கேட்க தோன்றியது, வாட்ட சாட்டமா இருக்கிறான் ஒரு வீசு வீசினால் பல்லு 32ம் போய் விடும்மோ என்ற பயந்தான். இருந்தாலும் அவன் வண்டியை விட்டு விட்டு என் வண்டி கண்ணாடியை திருப்பி தலை சீவுபவனுக்கு ஒரு பஞ்ச் வெக்க வேண்டுமல்லாவா??

தலை வாரி முடித்த பின் அவன் திரும்புகையில், சார் இது என் வண்டி தான் என்றேன் தைரியத்தை வரவைத்துக்கொண்டு...

Sorry sir, sorry sir, very sorry sir என்று சொல்லிக்கொண்டே வேகமாக சென்று விட்டான்.. கண்ணாடியை சரி செய்யாமலே... 

தலையில் அடித்துகொண்டு வண்டியை எடுத்து வந்தேன், ஆனால் அவனை எத்தி போட்டு மிதித்துக்கொண்டு இருந்தேன் என் மனதில்...