Wednesday, January 23, 2019

சோத்துக்கடை ஸ்ரீதேவி ஸ்டோர்ஸ், சலீவன் வீதி, டவுன்ஹால், கோவை...

மாலை ஆனவுடன் நொறுக்கு தீனியை தேடி மனம் அழையும். மழை பெய்துவிட்டால் வாழக்காய் பஜ்ஜி தான் வேண்டும் என்று ஒத்த கால்ல நிற்போம். முன்னெல்லாம் மாலை வேளையில் வீட்டில் பொறி, கடலை கொடுப்பார்கள் இப்போது எல்லாம் காலம் மாறி வீட்டில் நொறுக்கு தீனி தின்பதும் மிக குறைந்துவிட்டது.

நம்ம ஊரைப்பொறுத்தவரை வட இந்திய உணவான பேல் பூரி, பானி பூரி, மசால் பூரி என்று ஊரைச்சுத்தி நிறைய கடைகள் உண்டு. ஆனால் நம் பாரம்பரியத்தில் ஊறிய நொறுக்கு தீனிகடைகள் மிக குறைவு தான். தேடித்தேடித் தான் திங்க வேண்டி இருக்கும்.

நம் பாரம்பரியத்தில் ஊறியது என்றால் பொறி, கடலை, மசால் பொறி, மசால் கடலை, தட்டு முறுக்கு செட், மசாலா கரம் போன்ற நொறுக்கு தீனிகள் தான். இந்த தீனி கடைகள் நம் வீட்டுப்பக்கத்தில் இல்லை. ஆனால் தேடனும் ஆசை தீர நாவிற்கு இனிய நொறுக்கு தீனி சாப்பிடவேண்டும் என்றால் தேடனும். அப்படி தேடி தேடி பிடித்த கடை தான் ஸ்ரீதேவி ஸ்டோர்ஸ் இது சலீவன் வீதியில் சின்ன கடையாக அமைந்துள்ளது.

கடைதான் சிறியது ஆனால் உள்ளே உள்ள நொறுக்கு தீனிகள் அனைத்து சுவையோ சுவை. இந்த கடைக்கு என்று நம்மை போல தேடி தேடி உன்னும் பலர் இங்கு வருகின்றனர்.

நாம் போய் ஆர்டர் செய்த பின் தான் மிக்ஸ் செய்து நமக்கு உண்ண தருகிறார். குறைந்தபட்சம் 5 நிமிடமாவது நின்றால் தான் நமக்கு சுவையான நொறுக்ஸ் கிடைக்கும். நான் இந்த கடையில் வாடிக்கையாளர் ஆகி 5 மாதம் தான் இருக்கும். பல முறை சென்று ஒவ்வொரு முறையும் ஒரு வகையான நொறுக்சை ரசித்து ருசிச்ச பின்தான் உங்களுக்கு பகிர்கிறேன்..


தட்டு முறுக்கு செட்தான் முதலில் ஆர்டர் செய்தேன் தட்டு முறுக்கு மேல் பீட்ரூட் காரச்சட்னி வைத்து பின் சிறிய தாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீட்ரூட் மற்றும் கொத்தமல்லி இலை தூவி பின் அடுத்த தட்டு முறுக்கை எடுத்து அதில் தக்காளி காரச்சட்னி தடவி ஒரு செட்டுக்கு 4 என்ற கணக்கில் சான்விஜ் போல கொடுத்தார்கள்..



முழு தட்டு முறுக்கை எடுத்து அப்படியே ஒரு வாய் உள்ளே போட்டேன் மிதமான காரம், மொறு மொறுவென இருந்த தட்டுமுறுக்கின் சுவை, வெங்காயம், கேரட், பீட்ரூட் துருவல் எல்லாம் கலந்து இருக்க சுவை அம்மியது. மனதிற்கும் சாப்பிட்ட சுவை இருந்தது நாவில் நின்றது அதன் காரம்.

தக்காளி கரம், பொடி கரம், பன் சேன்விஜ், பேல் மிகஸ் என ஒவ்வொன்றும் ஒரு சுவை. மாலை நேர சிற்றுன்டிக்கு அருமையான கடை. இது மட்டுமல்லாமல் வித விதமான நொறுக்கு தீனிக்கள் எல்லாம் சுவையோடு இருந்தது. விலையும் குறைவான விலையே...

மாலைநேரம் வாய்க்கு ரூசியா சாப்பிட இந்த கடைக்கு தாரளமாக போகலாம்.



டவுன்ஹால் சலீவன் வீதியில் ஆட்டோ ஸ்டேண்ட் முன்புறம் இந்த கடை அமைந்துள்ளது.

No comments:

Post a Comment