Thursday, December 29, 2016

Service Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...

எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று தான் வாய்ப்பு கிடைத்தது. உடனே வண்டியை சர்வீஸ்க்கு விட்டேன். சர்வீஸ் சூப்பர்வைசர் 2000க்குள் செலவு வரும் சார் என்றார். கையில் பணம் இல்லண்ணே கார்டுதான் போடனும் என்று கூறினேன். அப்ப தலைமை அலுவலகத்தில் தான் சார் கார்டு போடனும், சர்வீஸ் சார்ஸ் போடுவாங்க கேட்டுக்குங்க என்றார். சரிங்க என்று சொல்லி வண்டியை விட்டு விட்டு வந்துவிட்டேன்.
மாலை வண்டியை எடுக்க சென்றேன் பில் தொகை 1850 சார், நீங்க தலைமை அலுவலகத்தில் கார்டு போட்டுக்குங்க என்று அனுப்பி வைத்தார். தலைமை அலுவகத்திற்கு சென்றேன் பில் தொகை அதனுடன் 1.75 service tax 33 ரூபாய் சேர்ந்து வரும் என்றார் அங்க பில் போட்ட பெண்மணி.
எதற்கு சர்வீஸ் சார்ஜ் அது தான் இப்போது கேஸ்லெஸ் என்ற முறை வந்திருக்கிறது கார்டில் பணம் கட்டினால் சர்வீஸ் சார்ஜ் இல்லை என்று சொன்னார்கள், நீங்கள் சர்வீஸ் சார்ஜ் கேட்கறீர்கள் என்றேன். எனக்கு தெரியாது சார் நீங்க அக்கவுண்டன்ட் சாரைத்தான் கேட்கனும் என்றார்.
அக்கவுண்டன் சாரை கேட்டால் எனக்கு தெரியாது சார், நீங்க மேனேஜரைத்தான் பார்க்கனும் என்றார். சரி என்று இருக்கும் நேரத்தை எல்லாம் வீணாக்கி அவரை சென்று சந்தித்தேன்.
ரொம்ப தெளிவாக நிறுத்தி நிதானித்து பேசினார் மேனேஜர். சார் நாங்க சர்வீஸ் சார்ஜ் போடுவது உண்மை தான் ஆனால் அந்த பணம் எங்களுக்கு வருவதில்லை அது வங்கிக்கு போகுது என்று அவருடைய அக்கவுண்ட் புத்தகத்தை காண்பித்தார் ( வங்கி ஸ்டேட்மெண்டை காண்பித்தால் உண்மை தெரிந்துவிடுமுள்ள) இல்ல சார் இது தவறாக தெரிகிறதே என்றேன்.
நீங்கள் வங்கியைத்தான் கேட்கவேண்டும், வேண்டும் என்றால் நாளை வாங்க வங்கிக்கு சென்று கேளுங்கள் என்றார் அதாவது உங்க பில் தொகை 1850 தான் எங்களுக்கு வரும், சர்வீஸ் வரி வங்கிக்கு போய் விடும் என்றார். நேரம் 8 மணி ஆகிவிட்டது, அதற்கு மேலும் அங்கு பேச மனதில் தெம்பு இல்லை சரி என்று பில் போட வந்தேன்.
சரி அந்த சர்வீஸ் டேக்ஸ்க்கு பில் போட்டு கொடுங்க என்றால் அது வங்கிக்கு போகும் பணம், நாங்க எப்படி பில் போடுவது என்று சார் என்று மறுபடியும் பேசினார். போய்த்தொலையுது என்று பில்லை கட்டினேன்.
நான் பில் கட்ட கட்ட இன்னொருவரும் இதே சண்டையையிட்டார். அவரிடமும் சமாதானம் பேசி, அங்க இருந்து அனுப்பிவிடுவதிலேயே குறியாக இருந்தார் மேனேஜர்.
இந்திய பிரதமர் அறிவித்த பின்பும் சர்வீஸ் வரி பிடிக்கிறார்கள், கேட்டால் வங்கியில் பிடிக்கிறார்கள் என்கிறார்கள் அதற்கும் பில் தருவதில்லை. வங்கியில் பிடிக்கும் பணத்திற்கு நாங்கள் எப்படி பில் தருவது என்கிறார். என்னுடைய சந்தேகம் எல்லாம் இந்த 33 ரூபாய் யாருக்கு போகிறது வங்கிக்கா? இல்லை Orpi Agencyக்கா?.
வங்கி அதிகாரியை கேட்டால் வங்கியில் பிடிப்பதில்லை என்கிறார். Orpi Agency கேட்டால் வங்கிதான் பிடிக்கிறது என்கிறார்கள்..
நான் யாரை போய் கேட்பது. கண் முன்னே என் பணம் கருப்பு பணமாக மாறுகிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது. கேஸ்லெஸ் என்று அதற்காக பல திட்டங்களை போடுகிறார்கள் பல வழிகளை சொல்கிறார்கள் ஆனால் வரி என்ற பெயரில் சிறு சிறு பணமாக நம்மிடம் பிடுங்குகிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆக நம் செய்யும் செலவிற்கு ஒவ்வொன்றிற்கும் வரி கட்டுகிறோம். கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும்...

No comments:

Post a Comment