Thursday, February 6, 2014

பொம்பளப் பேயும் நண்பர்களும்...


தூக்கத்தில் உச்சாப் போவதற்காக, இரவு விழித்த போது தலையில் ' தீ ' உடன் ஆத்துப்பள்ளத்தில் ஓர் உருவம் சென்று கொண்டு இருந்தது. பேயைப்பற்றிக் கேள்விப்பட்ட நான், அன்று தான் பார்த்தேன், பேய் இருப்பது உண்மைதான் என அப்போது தான் அறிந்தேன். அடுத்த இரண்டு நாட்களாகக் காய்ச்சல் வந்து படுத்த படுக்கையானேன்.

எங்க ஊரில் இரவு டியூசனுக்குச் சென்றால், காலையில் எழுந்துக் கொஞ்ச நேரம் படித்துவிட்டு வீட்டுக்குக் காலை 6.30 மணிக்குத்தான் வருவோம். வந்த உடன் பள்ளிக்குச் செல்ல நேரம் சரியாக இருக்கும். டியூசனுக்குச் செல்வது என்றால் எல்லோருக்கும் அலாதிப் பிரியம். ஆம், எங்க ஊர் ஓப்பன் தியேட்டரில் போடும் படங்களை அன்று இரண்டாவது ஆட்டம் ( செகன்ட் ஷோவை நாங்க இப்படித்தான் சொல்வோம்) படத்துக்குச் சென்று வருவது வாடிக்கை. இதற்காகவே எப்பப் பெரிய பையன் ஆகி 9ம் க்ளாஸ் செல்வோம் என்று காத்திருப்போம்.

டியூசனில், இரவு தங்கி இருக்கும் போது தான் உச்சாவுக்கு, எழுந்த நான் பேயைக்கண்டேன். காய்ச்சல் நன்றாகிப் பேயைப்பார்த்தேன் என்று விஜியிடம் சொன்னேன். அவன் கேவலமாகச் சிரிக்கிறான். குமாரிடம் சொன்னேன் அவனும் அதே, சுந்தர் தான் கொஞ்சம் பயந்து உண்மைதானே என்றான். ஆம் என்று முழுக் கதையையும் சொன்னதும், அன்று இரவு அனைவரும் தூங்காமல் பேயை எதிர்பார்த்துக் காத்திருந்தோம் மொட்டை மாடியில். வழக்கம் போல அன்று பேய் வரும் போது நானும் சுந்தரும் விழித்திருந்தோம்.

தீ எரிந்து கொண்டு இருக்கிறது, அந்தத் தீ நடந்து வருகிறது, நாங்கள் இருந்த இடத்தில் இருந்து காணும் பொழுதுத் தீ சிறிதுத் தூரம் போய் நின்றது. அப்போது தான் சுந்தர் ஆமாண்டாப் பேய் என்றும், உடனே விஜியையும், குமாரையும் எழுப்பியதில், தூக்கக்கலக்கத்தில் இருந்த அவர்கள் பேயைப்பார்த்து நடுங்கினர், கூடவே நாங்களும். சரி பேய் நாளை வருகிறதா? என்று அடுத்த நாள், காத்திருந்துப் பார்த்தோம். அடுத்த நாளும் வந்தது.

இப்போது தான் நான் சொன்னது உண்மை என்று, அனைவரும் நம்பினர். என்னசெய்யலாம், என்று கிணற்று மேட்டில் அனைவரும் ஆலோசனையில் ஈடுபட்டப் போது பேயை ச்சந்திக்கலாம் என்று முடிவுசெய்தோம். இதற்குத் தைரியமான ஆள் வேண்டும், என்று முடிவெடுத்த போது, பரந்தாமனை அழைக்கலாம் என்று முடிவெடுத்து, அவனை ஆள் விட்டுக் கூட்டி வரச்சொன்னோம். அவன் பேய்யைப் பார்த்தோம் என்றதும், பயங்கரமாகச் சிரிக்க ஆரம்பித்தான்.

அன்று இரவு டியூசனில் அவனைத் தங்க வைத்து இரவில் பேய் தீயைக் காண்பித்ததும், தைரியசாலியான அவனும் நடுங்க ஆரம்பித்தான். எல்லோரும் மாரியம்மன் கோயிலில் பூ போட்டுக் கேட்டோம், பேயைச் சந்திக்கலாமா? வேண்டாமா ? என்று, அம்மன் " பூ " சந்தியுங்கள் என்று வந்தது.

பேயை சந்திக்கச் சரியான நாள் பார்த்தோம், சனிக்கிழமை என்று சொன்னார்கள். அதனால் ஒரு சனிக்கிழமையைத் தேர்ந்தெடுத்து அன்று பேய்க்கு "கருப்பு" என்றால் பயமாம், அதனால் எல்லோரும் கையில் "கருப்புக் கயிர்" கட்டிக்கொண்டோம், "செருப்பு" என்றால் பயம் என்றார்கள் எல்லோரும் செருப்பு போட்டுக்கொண்டோம், "சீவக்கட்டையில் அடித்தால் ஓடிவிடுமாம் 2 சீவக்கட்டை எடுத்துக்கொண்டு பேயை சந்திக்க தயாரானோம்". இவ்வளவு பயத்திலும் விஜிக்குமட்டும் ஒரு கிளுகிளுப்பு பொம்பளப் பேயாக இருந்தா, நான் ஒரு தடவை கட்டிப்பிடிச்சிக்கிறேனடா? என்று எங்களை சூடாக்கினான்.

பேயைச் சந்திக்க ஆத்துப்பள்ளத்துக்குச் செல்வதற்கு, அன்று மாலையில் இருந்தே, எந்ந வழியில் போவது, பேய் வந்தால் எப்படி ஒடுவது, என்று எல்லா இடங்களையும் ஆய்வு செய்தோம். அன்று இரவு டியூசன் முடிஞ்சதும் நாங்கள் 5 பேரூம் தயாராக இருந்தோம், மணி 12 ஆகப்போகுது பேய்யைக்காணம், ஆனால் எங்கள் பயம் மட்டும் குறையவே இல்லை. பேய்க்கு கால் இருக்காது, என்றும் அது வெனீர் நிறத்தில் இருக்கும் என்றும் , குலை நடுங்க முழித்திருந்தோம்.

எதிர்பாத்தப்படி பேய் வந்தது. பேய் நடந்து வர வர நாங்களும், மொட்டை மாடியில் இருந்து கீழே வந்து, எங்கள் ஆயுதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு ஆத்துப்பள்ளத்தை நோக்கி நடந்தோம். பேய் அக்கறையில் போக நாங்க இக்கரையில் நின்றோம். பேய்யை நாங்கள் புல் மறைவில் இருந்து யார்?, முதலில் பார்ப்பது என்று பயந்து கொண்டு இருந்தோம்.

பரந்தாமன் தான் முதலில் பார்த்தான், பார்த்தவன் பேய் அறைந்தது போன்று நின்றான், எங்களுக்கு பயம் தொற்ற. அவன் எங்களை எட்டி உதைத்தான், அடப்பன்னிங்களே. அது பேய்யல்லடா மீன்காரன் சண்முகம் என்றான். எட்டிப்பாத்ததை பார்த்த சண்முகம் என்னங்கடா மீன் வேண்டுமா?  என்ற கேட்க எங்களுக்கு சிரிப்பு கூடவே. பேயைப்பார்க்காத ஏமாற்றம், விஜிக்கோ கட்டிப்பிடிக்க இயலவில்லை என்று வருத்தம்.

அதன் பின் சண்முகத்திடம் பேசும் போது. தான் தெரிந்தது இரவு ஆத்து மேட்டில் கட்டிய வலையில் மீன் இருக்கிறதா? என்று பார்ப்பதற்காக. தீப்பந்தம் பிடித்துக்கொண்டு வருவேன், மீன் இருந்தால் எடுத்து இந்த வலையில் போட்டு விட்டு மீண்டும் காலை வந்து மார்க்கெட் செல்வேன் என்றார். எங்களுக்கோ பேயை பார்க்க இயலாத வருத்தம்...

10 comments:

  1. இப்படிதான் முடியும் என்று தெரிந்திருந்தாலும் சுவாரசியமான நடை!!

    ReplyDelete
  2. எங்கள் கிராமத்தில் வயல்வெளியில் இதே மாதிரி கொள்ளிவாய்ப் பிசாசு பார்த்த நினைவு வருகிறது! தலைப்பில் ' ய் ' எடுத்துடுங்க பாஸ்!

    ReplyDelete
  3. பேயைப் பார்க்க என்னவொரு அக்கறை...!

    ReplyDelete
  4. அருமையான கதை. மிண்டும் கிராமத்து நாபகம்.

    ReplyDelete
  5. கதை நன்றாக இருந்தது. மீண்டும் கிராமத்து நாபகம்.

    ReplyDelete
  6. நீங்களாவது பேயை பார்க்க போனீங்க நாங்க ஆலமரத்தடியில் மோகினியை தேடிப்போயி...ஒன்னுமில்லாம, திரும்பி வந்தால் சம்பந்தமே இல்லாத ஒருத்தனுக்கு பயத்துல காய்ச்சலில் படுத்து விட்டான்.

    மலரும் நினைவுகள் சுகம்.

    ReplyDelete
  7. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html?showComment=1392429988876#c4485828933258341568

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
    அன்பு வாழ்த்துகள்.

    மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

    வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

    ReplyDelete
  9. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் :ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : பொறந்த வீட்டுப் புராணம்

    ReplyDelete