Wednesday, November 18, 2009

கவிதையை ரசிப்பவரா நீங்க.......

நீ

ஏதேதோ பேசத்தோன்றியது
உன்னிடம்
உன் புதிய தோழி
உன் புதிய நண்பன்
உன் புதிய நம்பிக்கை
உன் புதிய வாழ்க்கை
நீ விட்டுச்சென்ற இடத்திலேயே
உட்கார்ந்து இருந்தேன் நான்.......
உன் உதடுகள் என்பெயரை உச்சரிக்குமா?
உன் மனதில் என் நினைவுகள் இருக்குமா?
காத்துக்கிடக்கிறேன் நான்.....
உன்னுடைய நேற்று நான்
எனக்கு எப்போதும் நீ................

****************************************************************************

நீ சம்மதித்தால்........

கால் வலிக்கும் வரை.......

உன் விரல் பிடித்து நடக்க வேண்டும்.........

உன் இரண்டு வயது குழந்தையாக............

****************************************************************************

நினைவுகள்.......

சத்தியமாய் சொல்கிறேன்

என்னிடம் உன் நினைகள் இல்லை......

உன் நினைவுகளிடம் தான் நான் இருக்கிறேன்

No comments:

Post a Comment