பிரிவுகள்தான்
அன்பின் ஆழத்தை
அளக்கும் கருவியாமே…?
பார்த்தாயா
சின்னப் பிரிவிற்குள்
நீ சிதைந்து போனதை…?
இது
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் சேர்த்துத்தான்
சொல்கின்றேன்.
ம்…
இப்போது புரிகிறதா
என்மீது நீ கொண்ட நேசமும்
உன்மீது நான் கொண்ட நேசமும்
எவ்வளவு ஆழமானதென்று…?
சுட்டது . . .
No comments:
Post a Comment