Wednesday, October 2, 2013

அஞ்சறைப்பெட்டி 03/10/2013


  


உள்ளுரில் இருந்து உலகம் வரை........


எனது இதழில் எழுதிய கவிதைகள் புத்தகத்திற்கு நண்பர்களின் விமர்ச்சனம் எழுதியது மிக சந்தோசமாக இருந்தது. நமக்கு பிடிச்சதை எழுதுகிறோம் அதை விமர்ச்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு அதில் தூற்றுதலும் இருக்கலாம், போற்றுதலும் இருக்கலாம். என்னைப்பொறுத்தவரை போற்றுதலை பார்த்து விட்டு, தூற்றுதலைதான் ரொம்ப வரவேற்றேன். எனக்கு பிடித்ததும் அது தான். அடுத்தமுறை இந்த தவறுகள் வராமல் பார்த்து கொள்ளவேண்டும். விமர்ச்சித்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...

.......................................

ஒரு மாதமாக படாத பாடு படுகிறேன் ஒரு சின்ன Hair Line Fracture ஏற்பட்டதால் தற்போது தான் வழிகள் குறைந்து ஓரளவிற்கு நடக்க முடிகிறது கட்டு பிரிக்க இன்னும் 2 நாட்கள் உள்ளதால் எப்போது பிரிப்போம் என்று ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.. அந்த அளவிற்கு கட்டு வெயிட்டாக உள்ளது. கை, கால்கள் உடைந்தால் கூட கட்டுப்போட்டு பொறுத்துக்கலாம் இந்த சின்ன விரிசலுக்கு பொறுத்துக்கொள்வதற்குல் போதும் போதும் என்றாகிவிட்டது.


 .......................................

 
மனைவிக்கு பைக் ஓட்டி பழக்கிறேங்கற பேர்ல பின்னாடி உட்கார்ந்து பழக்கிவிடும் இந்த கணவன்கள் பன்ற இம்சை தாங்கல...

சம்பவம்
சனிக்கிழமை இரவு மனைவி வண்டியை ஓட்ட கணவன் பின்னாடி உட்கார்ந்து கையபுடிச்சி ஓட்டிய மனுசன் கைய எடுக்கும் போது மனைவி இடுப்பை கிள்ள மனைவி தடுமாற வண்டிய திருப்ப வீட்டு வாசலில் நின்று இருந்த நடுத்தரவயதுக்காரார் மேல விழ தம்பதியினர் ரோட்டில் விழுந்துட்டாங்க.. பாவம் வேடிக்கை பார்த்தவர் சாக்கடையில் விழுந்து படாத பாடு பட்டார்... ( இடுப்பை கிள்ளாம இருந்திருந்தா தப்பிச்சிருப்பார்) அவர் நேரம்...

.......................................



பெட்ரோல் விலையை 3 ரூபாயை குறைத்து டீசல் விலையை ஏற்றிவிட்டனர் டீசல் விலையை உயர்த்துவதால் தினமும் புழுங்கும் பொருட்கள் விலை இன்னும் உயரும் என்பதை அறிந்தும் உயர்த்துகின்றனர். எவ்வளவு உயர்த்தினாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் அந்த பொருளை அந்த விலை கொடுத்து வாங்கும் நாம் இருக்கும் வரை உயர்த்திகொண்டு தான் இருப்பர்.
 
.......................................  


2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை அப்போது உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 970 கோடியாக உயரும் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

கடந்த 200 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 7 மடங்கு அதிகரித்து தற்போது 710 கோடியாக உள்ளது.

இதில் 130 கோடி பேர் சீனாவிலும், 120 கோடி பேர் இந்தியாவிலும் உள்ளனர். அதாவது, ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியா மற்றும் சீனாவில் பிறந்தவர்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.


..............................


 
எந்த பத்திரிக்கை எடுத்தாலும் மோடி பற்றி செய்தி இல்லாமல் இருப்பதில்லை அந்த அளவிற்கு தினமும் ஒரு மாநிலத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அந்த மாநிலம் மட்டும் இல்லாமல் எல்லா இடத்திலும் பேசவைக்கிறார் அவர் பேச்சை. மக்களிடம் நன்கு பிரபலமான ஒருவராக உருவெடுத்து வருகிறார் நிச்சயம் இந்த பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு என தனி அந்தஸ்து கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.


..............................



இங்கிலாந்து பெண்ணுக்கு ஒரே கருமுட்டையில் உருவான 3 பெண் குழந்தைகள் பிறந்தன.

இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ்சில் பான்டிபூல் பகுதியை சேர்ந்த பெண் கில்பெர்ட். இவர் கர்ப்பிணி ஆக இருந்தார். டாக்டரிடம் சென்று சோதனை செய்தபோது ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகி இருந்தது தெரிய வந்தது.

இது போன்று ஒரே கருமுட்டையில் 3 குழந்தைகள் உருவாகுவது ஆபூர்வமாகும். 20 கோடி பெண்களில் ஒருவருக்குதான் இது நடைபெறும். எனவே டாக்டர்கள் அவரை தீவிரமாக பரிசோதித்தனர்.

அப்போது, இக்குழந்தைகளை தாங்கி சுமந்து பெற்றெடுக்கும் வகையில் கில்பெர்ட் உடல் நிலை இல்லை என தெரிந்தது. எனவே, இக்குழந்தைகளை கருக்கலைப்பு செய்யும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் அதை கில்டெர்ட்டும் அவரது கணவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக கடந்த ஆகஸ்டு மாதத்தில் நியூபோர்ட்டில் உள்ள ராயல் ஜிவென்ட் ஆஸ்பத்திரியில் 3 குழந்தைகளும் பிறந்தன. அவை அனைத்தும் பெண் குழந்தைகளாகும்.

அக்குழந்தைகள் தலா 1.75 கிலோ எடை இருந்தன. இவர்களுக்கு பியான், மட்டிசான், பாய்ஜ் என பெயரிட்டுள்ளனர். 6 வாரங்கள் ஆஸ்பத்திரி பராமரிப்பில் இருந்த அக்குழந்தைகள் சமீபத்தில் வீடு திரும்பினர்.



 
தகவல்



சனி கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘காசினி’ விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது சனியின் துணை கிரகமான டைட்டனிலும் ஆய்வு மேற்கொண்டது. அப்போது டைட்டனின் கீழ்மட்ட வான்வெளியில் ‘புரோபைலீன்’ என்ற மூலப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தது. அது சனி கிரகம் மற்றும் அவற்றின் துணை கிரகங்களிடம் இருந்து வெளியாகும் வெப்ப அளவை ‘இன்பிராட் ஸ்பெக்ட்ரோ மீட்டர்’ மூலம் காசினி விண்கலம் அளந்த போது அது தெரிய வந்தது.

‘புரோபைலீன்’ என்ற இந்த ரசாயன மூலப்பொருள் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இதில் இருந்து தான் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. அது ‘பாலிபுரோபைலீன்’ என்றழைக்கப்படுகிறது.

இந்த தகவலை நாசா விஞ்ஞானி கார்னர் நிஸான் தெரிவித்துள்ளார். கடந்த 1980–ம் ஆண்டில் ‘வாயேஜர்–1’ என்ற விண்கலம் சனி கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டது. அது டைட்டன் கிரகத்தை ஒட்டி பறந்த போது அங்கு புரோபைலீன் இருப்பதை சூசகமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தத்துவம்


நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.

மிகக் குறைந்த செல்வத்தைக் கொண்டு எவன் திருப்தி அடைகின்றானோ அவன்தான் முதன்மை செல்வன். ஏனெனில் இயற்கையின் செல்வம் திருப்திதான்.

சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி

11 comments:

  1. சந்திப்பின் போது நாம் பேசினது ஞாபகம் இருக்கட்டும்...

    நாசா தகவலுக்கு நன்றிகள்...

    ReplyDelete
  2. அஞ்சரை பெட்டியில் இன்று எல்லாமும் இருந்தது, சுவையும் கூட....... அப்புறம் இப்போ கை எப்படி இருக்கு சதீஷ் ! சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சல்லடையில் ஐஸ் கட்டியாக மாற்றி...

    ReplyDelete
  4. இயற்கையின் செல்வம் திருப்திதான்.

    சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி - தண்ணீர் உறையும் வரை காத்திருக்க பொறுமை இருந்தால்....!

    ReplyDelete
  5. தத்துவம் நன்றாக இருக்கிறது.
    3 குழந்தைகளா ஆச்சரியம் !
    மக்கள் தொகை கணக்கெடுப்பு கேட்க பயமாக இருக்கிறது.
    விமர்சனங்களின் லின்க் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  6. அஞ்சறைப் பெட்டியில் பல செய்திகள் ! அறிந்தேன்! கை விரைவில் நலம் பெற வேண்டும்!

    ReplyDelete
  7. சுவையான தகவல்கள்! உங்களது புத்தகம் படித்துவிட்டேன்! விமர்சனம் எழுத முயல்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  8. அஞ்சறைப் பெட்டி அருமை...
    இப்போ கை எப்படியிருக்கு?

    ReplyDelete
  9. சல்லடை... நல்ல விஷயம்...

    தொடர்ந்து அஞ்சறைப் பெட்டி விஷயங்கள் சிறப்பு....

    பாராட்டுகள்.

    ReplyDelete
  10. இன்னாப்பா... காந்தி செயந்தி அன்னீக்கி பதிவு எழுத சொல்ல காந்தி பத்தி மேட்டர் போடவேனாவா ? கயிதை , கயிதை கோக்குமாக்கு மட்டை.....(நீ தானேப்பா தூற்றுதல் பிடிக்குமின்னு சொல்லிக்கீறே..... அதான்..

    ReplyDelete
  11. சின்ன காயம் ஹேர் லைன் பிராக்சர் என்கிறீர்களே.
    இதற்கு இவ்வளவு நாட்கள் சிரமப்பட்டுவிட்டீர்கள்.
    பெண்களுக்கு இந்த மாதிரி அடிக்கடி நடக்கும். கால் விரல்களில் இத்தகைய ஹேர் லைன் பிராக்சர் ஏற்படும். கால்சியம் பற்றாக்குறை முக்கியமான காரணமாக சொல்லபடுகிறது.
    அத்தகைய பெண்கள் அதிக நாட்கள் ஓய்வெடுக்க முடியாது. மீண்டும் மீண்டும் அடிபடும் அல்லது தாள முடியாத வலியுடன் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
    இதற்காகவே சிறப்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லேசான ப்ளூ கலருடன் இருக்கும் இந்த முறை கட்டு சிறிது, சிறிதல்ல 2-3 மடங்கு விலை அதிகம் என்பதால் ஒரு சில டாக்டர்களிடம் அல்லது ஹாஸ்பிடல்களில் மட்டுமே இருக்கிறது. இந்த கட்டை போட்டுகொண்டால் உடனடியாக நடக்கலாம். வலியும் மிக குறைவாகவே இருக்கும். ஆனால் காலுக்கு பளு கொடுக்ககூடாது. பஸ்ஸில் ஏறும்போது இந்த காலை படியில் வைக்காமல் அடுத்த காலை வைத்து ஏற வேண்டும்.
    இதை போட்டுகொண்டால் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டியதில்லை. எல்லா வேலையும் செய்யலாம். லீவு போட வேண்டியதில்லை. அதிக காசு கொடுத்தாலும் பலன்கள் நிறைய.
    இதை பற்றிய அவேர்னஸ் உண்டாக்குவதற்காக இந்த பதிவை எழுதினேன்

    சேலம் குரு

    ReplyDelete