Tuesday, November 4, 2014

பெ.கருணாகரனின்... காகிதப் படகில் சாகசப் பயணம்



இது தன்னம்பிக்கை புத்தகம் என்று சொல்வதை விட வாழ்வில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு வரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். விருத்தாச்சலத்தில் நூலகத்தில் ஆரம்பித்து இன்று புதிய தலைமுறை அலுவலகம் வரை அண்ணணோடு பயணித்த அனுபவம் இந்த புத்தகத்தில் படிக்க படிக்க கூடவே நானும் பயணித்த அனுபவம் எனக்கு..

வெள்ளிக்கிழமை மாலை என் கையில் புத்தகம் கிடைத்தது, இந்த வார இறுதி அண்ணணோடு பயணம் என்று ஸ்டேட்டஸ் எல்லாம் போட்டு எப்படியும் ஞாயிறு இரவு முடித்துவிடவேண்டும் என்று தான் எண்ணினேன். ஆனால் இரவு 9மணிக்கு ஆரம்பிச்சு சில பக்கங்களை திரும்ப படித்து, சில இடங்களில் சிரித்து, பல இடங்களில் அடே போட வைத்தது அண்ணனின் எழுத்து.
முதலில் தன்னுடன் பணியாற்றிய தன்னை அறிந்த தோழியை அணிந்துரை எழுத சொல்லி அதை அவர்கள் சுவைபட எழுதியது மிக மகிழ்ச்சிக்குரியது.

ஒரு தெய்வம் தந்த பூவே இந்த பக்கத்தை படித்து கண்ணீரில் நீர் வரவில்லை என்று இந்த புத்தகத்தை படிப்பவர்கள் சொல்வது மிக குறைவாகத்தான் இருக்கும். விருத்தியை படிக்க படிக்க மருத்துவமனையில் அவர் மனைவி குழந்தையை அனைத்து முத்திட்ட அந்த வரிகள் கண் முன்னே இருக்கின்றது இன்னும்.

சிலநாட்களாக எனது வேலையில் சில குளறுபடிகளால் நிரம்பி இருந்தது அன்று அண்ணனுக்கு சுதாங்கன் கூறிய அறிவுரை இன்று எனக்கும் பொருந்தியதில் மிக்க மகிழ்சியாக இருந்தது. அந்த அறிவுரையை அடிக்கோடிட்டு இதுவரை 20 முறை படித்தாயிற்று.

ஒவ்வொன்றிலும் ஓர் அனுபவம் அண்ணனுக்கு ஆனால் என்னைப்போல தம்பிகளுக்கு எல்லாம் இது ஒரு நல்ல பாடம், அறிவுரை இன்னும் என்ன என்ன இருக்குதோ சொல்லிகிட்டே போகலாம்..

தனது சகாக்களை மறக்காமல் குறிப்பிட்டு அவர்களையும் தன்னுடன் இணைத்தது மிக மிக சந்தோசமானது. நாம் அவரது சகாவாக இல்லாமல் போய்விட்டோமே என்று மனசு வருத்தப்பட்டது..

அவர் எழுதி உள்ள அனைத்து தலைப்புகளையும் பற்றி எழுதிக்கொண்டே போகலாம், அதை கருத்தாக நான் எழுதுவதை விட அந்த புத்தகத்தோடு பயணித்து பாருங்கள், புத்துணர்வை பெறுவீர்கள்..

புத்தகத்தை அனுப்பிய அண்ணனுக்கு மிக்க நன்றி...

நிறைய எழுதனும் என்று புத்தத்தில் அடிக்கோடிட்டு இருந்தேன் எழுத இருந்தேன். தவிர்க்க இயலாத காரணத்தால் சொந்த ஊருக்கு வந்ததால் எழுத முடியவில்லை....
 

என்றும் உங்களின் அன்பு தம்பி
சதீஸ் சங்கவி..
புத்தகம் வாங்க விரும்புபவர்களுக்கு...
நூல்: காகிதப் படகில் சாகசப் பயணம்
ஆசிரியர்: பெ. கருணாகரன்
விலை: ரூ 150
வெளியீடு: குன்றம் பதிப்பகம்
73/31, பிருந்தாவனம் தெரு, 
மேற்கு மாம்பலம்,
சென்னை – 600 033.
மெயில் முகவரி: kagithapadagu@gmail.com

2 comments:

  1. முகநூலில் சில அத்தியாயங்கள் படித்தேன்! நூல் வாங்க வேண்டும்! நன்றி!

    ReplyDelete
  2. அவசியம் வாங்கிப் படிக்கிறேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete