Monday, May 14, 2012

குடும்பத்தில் பெண்களின் விருப்பம்...


ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களுக்கு என எதிர்பார்ப்பும் விரும்பமும்  நிச்சயம் இருக்கும். அது தனது கணவர் மற்றும் குழந்தையின் பேரில் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் இருவரும் கஷ்டப்பட்டாலும் கணவனை விட மனைவிக்கு பொறுப்பு அதிகம் என்பதை மறுக்க இயலாது குறைந்த பட்சம் பெண்களின் விரும்பம் என்னவாக இருக்கும் என்பதில் கிடைத்த வரிகள்....

உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா? (சமையல் கொஞ்சம் பரவாயில்லை என்ற அளவில் இருந்தாலும் பாராட்டினால் அடுத்த நாள் இன்னும் நன்றாக சமைக்க முயற்சி செய்வர்)

 வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

தன் கணவன் சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது பொறுப்பாக கணவனே அனைத்தையும் முன்னரே எடுத்து வைத்து விட்டு சந்தோசமாக செல்ல வேண்டும்.

உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.
எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.

சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

“இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என அடிக்கடி பாராட்ட வேண்டும் (இரவு ஆடையை கூட சொல்லலாம்)

நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்.

கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது. பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு வர வேண்டும்

குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
 
 நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

 நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

 பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

 அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

 படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

 பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

 சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.

மனைவி எதிர்பார்க்காத நேரத்தில் தினமும் ஒரு திடீர் என நச்சுன்னு முத்தம் கொடுக்க வேண்டும்.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

16 comments:

  1. சூப்பர் யோசனைங்க கடைசியா சொன்னீங்க பாருங்க....முத்தம் செம செம, மகிழ்ச்சியான குடும்பத்துக்கு நல்ல அறிவுரைகள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல அறிவுரைகள். ஆண்கள்தானே சமையலறையில் இப்போது இருக்கிறார்கள். பெண்களுக்கும் ஏதாவது அறிவுரைகள் இருக்கா?

    ReplyDelete
  3. கிளாஸ் குட்...நீ நடத்துய்யா மாப்ள!

    ReplyDelete
  4. நல்ல அறிவுரைகள் .. நன்றி நண்பா

    ReplyDelete
  5. ஆங்.., நல்ல அறிவுரைதான், ஆனால் நடைமுறையில் எல்லோராலும் அனைத்தையும் பின்பற்ற முடிவதில்லை என்பதே உண்மை ..!

    ReplyDelete
  6. ம்ம்ம் ..(:
    நல்ல பதிவு (அறிவுரை) தோழரே

    ReplyDelete
  7. ம் இதுகூட செய்யலைன்ன அப்புறம் என்ன ...................நல்ல பதிவு

    ReplyDelete
  8. நண்பா...... நல்ல பகிர்வு.....

    நீங்க நடத்துங்க நண்பா.......

    ReplyDelete
  9. கணவன் மனைவி இருவரும் புரிந்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாகும். அருமையான படைப்பு.

    ReplyDelete
  10. அருமையான யோசனைகள். அச்சடித்து எல்லா கல்யாண மண்டபங்களிலும் ஒட்டலாம்.

    ReplyDelete
  11. அருமை. 100 சதவீதமும் சரியாகணுமுன்னு கோபாலுக்கு சுட்டி அனுப்புகிறேன்:-)

    ReplyDelete
  12. எல்லாம் பொதுக்கருத்துக்கள் தான்..

    உங்கள் கருத்துன்னு ஒன்றுமே இங்கே காணோமே..

    பிடிக்காத முகத்தை தினசரி முத்தமிட சொல்வது சுத்த அபத்தம்..!!

    ReplyDelete
  13. நல்ல அறிவுரைகள் supper anna nalla pakivu

    ReplyDelete
  14. நல்ல அறிவுரைகள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை, பன்பும் பயனும் அது.-குறல்
    நல்ல கருத்துக்கள், தொடறட்டும் நன்றி.

    ReplyDelete
  16. அருமையான யோசனைகள் சங்கவி..

    விகடனுக்கு அனுப்பவும்

    ReplyDelete