Wednesday, May 30, 2012

அஞ்சறைப்பெட்டி 31.05.2012

உள்ளுரில் இருந்து உலகம் வரை........

பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து இன்று நாடு முழுவதும் பந்த் அறிவித்துள்ளது பாஜக. ஆனால் தமிழகத்தில் வழக்கம் போல் எந்த பிசிறும் இல்லாமல் அனைத்து வாகனங்களும் சென்று கொண்டு இருக்கின்றன. நிறைய இடங்களில் கடைகள் மட்டும் அடைத்துள்ளனர்..

எவ்வளவு விலை உயர்த்தினாலும் நாம் பெட்ரோல் போட்டுத்தான் ஆகவேண்டும். அதனால் இதை அரசியல் கட்சிகள் பெரிதுபடுத்தி விளம்பரம் தான் தேடவேண்டும்... மக்களின் தேவை விலை உயர்ற்றினாலும் சீராக பெட்ரோல் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். முக்கியமாக சென்னை மக்களின் மனநிலை இன்று இதுதான்...

...............................................................................................

ஜீன் 13ல் ஜனாதிபதி தேர்தல் அறிவித்து விட்டது தேர்தல் ஆணையம். இந்த தேர்தல் காங்கிரசுக்கு முக்கியமானது ஏன் என்றால் அவர்கள் நிறுத்திய வேட்பாளர் வெற்றி அடைந்தால் தான் அவர்களின் மெஜாரிட்டி மீது நம்பிக்கை கிடைக்கும். பார்ப்போம் யார் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று ...
...............................................................................................

இந்த முறை கோடை மழையை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கும் போது இன்னும் மழை பொய்க்கவில்லை. எப்படியும் கர்நாடகாவில் தண்ணீர் தரப்போவதில்லை நம்மிடமும் தண்ணீர் இறுப்பு குறைவாக இருக்கிறது இதை வைத்து இனி அரசியல் கட்சிகள் கொஞ்ச நாளைக்கு போரட்டம், பொதுக்கூட்டம் என வரிசையாக நடத்துவார்கள்.. எது நடந்தாலும் இதற்கு ஒரே தீர்வு மழைதான்.. வருணபகவான் கண்திறப்பாரா...

................................................................................................

இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் வித்தியாசமான ஆய்வு ஒன்றை நடத்தினர். மனைவி மற்றும் காதலியை தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்று இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளதொடர்பு வைத்திருந்தால் அது மனரீதியாக குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும். எனவே மேலும் செக்ஸ் உறவில் ஈடுபடும் போது அதிக பதட்டமும், ஆர்வமும் ஏற்படும். இது மாரடப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வு சொல்கிறது.

அதிலும் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்கள் குடித்து விட்டு உறவில் ஈடுபட்டால் அவர்களை அதிக அளவில் மாரடைப்பு தாக்கும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

செக்ஸ் உறவில் ஈடுபடும்போது சில நேரங்களில் மரணங்கள் நேரிடுவது உண்டு. இதில் மற்றவர்களை விட கள்ளதொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு 3 மடங்கு அதிக மரணங்கள் நிகழ்வதாக தெரிந்தது. 
...............................................................................................

இந்த முறை ஐபிஎல் மேட்சில் கொல்கத்தா பரிசு வாங்கிதை விட அந்த மாநில முதல்வர் அதை விமர்சியாக கொண்டாடியதை ரசிக்க இயலவில்லை இத்தனைக்கும் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் 2 பேர் மட்டுமே விளையாடி உள்ளனர் இதற்கு அரசு சார்பில் விழா எடுத்த பாரட்டப்ட வேண்டிய அவசியமில்லை.. மம்தாவிற்கு இதன் மூலம் என்ன அரசியல் ஆதாயமோ????

...............................................................................................
ஹாலிவுட் பட ஸ்டண்ட் நடிகர் கேரி கானரி. இவர் புகழ்பெற்ற ‘ஹாரிபார்ட்டர்’, ‘சேம்பர் ஆப் சீக்ரட்ஸ்’, ஜேம்ஸ்பாண்டு படமான ‘டை அனதர் டே’ உள்பட ஏராளமான படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்.

41 வயதாகும் கேரி கானரி ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் இல்லாமல் குதித்து சாதனை படைக்க திட்டமிட்டார். இதற்காக தெற்கு இங்கிலாந்தில் தேம்ஸ் ஆற்றங்கரையோரம் உள்ள ஹென்லே என்ற திறந்தவெளி இடம் தேர்வு செய்யப்பட்டது.

காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் விசேஷ உடை அணிந்து இருந்தார். கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தரையில் 18,000 அட்டை பெட்டிகளை ‘ரன்வே’ போல் அடுக்கி வைத்து இருந்தனர்.

ஹெலிகாப்டரில் சென்ற கேரி கானரி மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பறந்தபோது 2,400 அடி உயரத்தில் இருந்து பாராசூட் இல்லாமல் கீழே குதித்தார். அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகளில் துல்லியமாக விழுந்தார். இதன் மூலம் உலக சாதனை படைத்தார்.

இந்த சாதனையை பார்க்க ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். கேரி கானரி குதித்ததும் அவர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சாதனையை நேரில் பார்க்க மனைவி விவென்னியும் வந்திருந்தார்.

சாதனைப்பற்றி கேரி கானரி கூறுகையில்,

ஆகாயத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பது என்பது நான் நினைத்துப் பார்க்காத சாதனை. தரையில் குதிக்கும்போது புதுவித அனுபவமாக இருந்தது. எனது கணிப்புகள் துல்லியமாக இருந்தது என்றார்.

இந்த சாதனைக்காக கேரி கானரி சுவிட்சர்லாந்தில் ஒரு வாரம் பயிற்சி எடுத்தார். பாராசூட்டுக்கு பதில் ‘ஸ்விங் சூட்’ என்ற நவீன ஆடையை பயன்படுத்தி மலைகளில் பயிற்சியில் ஈடுபட்டார். ஏற்கனவே இவர் தனது 23 வயதில் பாரிஸ் ஈபிள் டவர், லண்டன் ஐ ஆகிய கட்டிடங்களில் இருந்து பாராசூட்டில் குதித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


..................................................................................................

கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் என்று உலகம் முழுவதும், மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் பரவவிட்டதை அடுத்து இந்த பிரச்சினை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களிலிருந்து அரசு கம்ப்யூட்டர்களை பாதுகாப்பதற்காக, சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வளையம் ஒன்றை அமெரிக்காவின் எப்பிஐ அமைத்தது. ஆனால் அந்த அமைப்பு ஜுலை 9-ம் தேதி அன்று, தனது பாதுகாப்பு வளையத்தை மூட உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எப்பிஐ சில மாதங்களாகவே விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு இணையதளத்தை பார்க்குமாறும், அதைப்பார்த்தால்தான் தங்கள் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரிந்து விடும் என்று கூறியிருந்தது. மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அப்பிரச்னையை எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.

அவ்வாறு வைரசால் பாதிப்புக்கு உள்ளான கம்ப்யூட்டர்கள் ஜுலை 9-ம் தேதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று கூகுள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
..................................................................................................

இன்று மணநாள் காணும் அன்பு நண்பர் மதுரை கார்த்திகை பாண்டியனுக்கு எனது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
..................................................................................................

29.05.2012ம் அன்று 2 ம் ஆண்டில் அடி எடுத்து வைத்த என் அன்பும், பாசமும், உயிருமான என் மகன் பிரசன்னாவின் பிறந்தநாளில் முகநூல், வலைப்பதிவு மற்றும் கூகுள்+ ல் வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி....


..................................................................................................

முதன் முதலாக கோவையில் தான் பதிவர் சங்கமம் நடந்ததாக படித்தேன் மீண்டும் அனைவரையும்  நான், தமிழ்பேரண்ட்ஸ் சம்த், கோவை நேரம் ஜீவா ஆகியோர் ஒருங்கிணைத்து கோவை பதிவர் குழுமம் என்று ஒன்றை உருவாக்கி இதுவரை கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் என பக்த்து ஊர் நண்பர்களை என 45 பேரை சேர்த்து விட்டோம் இன்று எங்கள் குழும நண்பர்களின் அறிமுக நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்சில் நடைபெறுகிறது  அனைத்து நண்பர்களையும் எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறேன் சந்திக்க....

தகவல்
உலகின் அபூர்வ வைரக்கற்களில் மார்ஷியன் இளம் சிவப்பு வைரமும் ஒன்றாகும். இந்த வைரக்கல் நேற்று ஏலம் விடப்பட்டது. இணையத்தளம் மற்றும் போன் மூலம் இந்த ஏலம் நடந்தது. அபூர்வ வைரக்கல் என்பதால் அதை ஏலத்தில் வாங்க கடும் போட்டி நிலவியது.
கடைசியில் தொழில் அதிபர் ஒருவர் அந்த வைரக்கல்லை ஏலம் எடுத்தார். அவர்  98 கோடி ரூபாய்க்கு அந்த வைரக்கல்லை பெற்றுள்ளார். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
அந்த வைரக்கல் 12 காரட்டுகள், அதாவது சுமார் 2.5 கிராம் எடை கொண்டது. இவ்வகையான வைரம் மிக மிக அரிதானது என்று கூறப்படுகிறது. வட்டவடிவில் இருக்கும் இந்த வகையான ஒரு வைரக்கல் விற்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
1976-ம் ஆண்டு அமெரிக்கா செவ்வாய் கிரகத்துக்கு ஒரு செயற்கை கோளை அனுப்பியதை நினைவு கூறும் வகையிலும், அந்த கிரகத்தின் நிறத்தை குறிக்கும் வகையிலும் இதற்கு மார்ஷியன் வைரம் என்று பெயரிடப்பட்டது.
இதே போன்ற தன்மைகளை கொண்ட மற்றொரு வைரம் பிரிட்டிஷ் அரசி எலிசபெத்துக்கு 1947-ம் ஆண்டு அவரது திருமணத்தின் போது பரிசாக கொடுக்கப்பட்டது. 23.6 காரட் எடை கொண்ட அந்த வைரம் பின்னர் மேலாடையில் அணிந்து கொள்ளும் ஒரு நகையில் பதிக்கப்பட்டது.
வில்லியம்சன் பிங்க் என்றழைக்கப்படும் அந்த வைரம்தான் இப்போதும் உலகளவில் மிகவும் பிரபலமான வைரக்கல் ஆகும்.
அறிமுக பதிவர்

இந்த வார அறிமுக பதிவர்  கோவி என்ற பெயரில் எழுதி வருகிறார். கோவையில் விரிவுரையாளராக பணியாற்றி வரும்  இவரின் கவிதைகள் இளைப்பாரிக்கொள்ள மிகச்சிறந்ததாக இருக்குறது... நீங்களும் இளைப்பாறிக்கொள்ளுங்களேன்...

http://govipoems.blogspot.com/
தத்துவம்

சொற்ப இரண்டு நாட்களிலேயே, நாளை என்பது நேற்று என்றாகி விடுகிறது.


“நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால் உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர், உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!”

திட்டமிடத் தவறினால் நாம் தவறு செய்யத் திட்டமிடுகிறோம் என்பது பொருள்.

7 comments:

  1. உங்கள் பதிவர் குழுமத்துக்கு வாழ்த்துகள்....!

    ReplyDelete
  2. அஞ்சறை பெட்டி, இனிப்பு....!!!

    ReplyDelete
  3. ஹாலிவுட் பட ஸ்டண்ட் நடிகர் கேரி கானரி. புகைப்படத்தை வெளியிட்டிருக்கலாம் ?!. வைரம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் அருமை.

    ReplyDelete
  4. Congrats and all the best for Coimbatore pathivar santhippu.

    ReplyDelete
  5. உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி சங்கவி சார், அடிக்கடி சந்திப்போம், அஞ்சரை பெட்டி அருமை

    ReplyDelete
  6. here after i also wil remind u r son birthday .... coz that is my marriage day aso

    ReplyDelete