Sunday, May 13, 2012

உயிரைப்பணையம் வைக்கும் தீயணைப்பு வீரர்கள்...


தலை போகிற அவசரத்தில் நாம் சென்றுகொண்டிருந்தாலும் சைரன் ஒலித்தபடி விரையும் இரண்டு வண்டிகளின் மீது அனிச்சையாக நம் கண்களும் மனமும் குவியும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி இரண்டுமே உயிர்காக்கும் வண்டிகள் என்றாலும் தீயணைப்பு வண்டியின் சேவை கொஞ்சம் வித்தியாசமானவை. தங்கள் உயிரைப் பணயம் வைத்து மற்ற உயிர்களை காக்கும் உன்னத பணி.

வேகமாக பரவும் நெருப்போ,  சரிந்துவிழும் கட்டடமோ, உயிர் குடிக்கும் விஷ வாயுயோ, ஊரையே குடிக்கும் சுனாமியோ, பூகம்பம், கிராமங்களில் கிணற்றுகுக்குள் விழந்த மாடுகள் இப்படி  எதுவாக இருந்தாலும் அங்கே உதவிக்குத் தீயணைப்புத் துறையின் உதவுவர். மனிதனக்கு மட்டுமல்லாமல் விலங்குகளையும் ஆபத்தில் இருந்து காக்கும் அற்புத பணி இவர்களுடையது.
கருவிகள்

தீ விபத்து குறித்த தகவல் வந்த 20 வினாடிகளுக்குள் தீயணைப்புப் படையினர் அதற்குத் தகுந்த கருவிகள் பொருத்திய வண்டியுடன் புறப்படுவார்கள். சம்பவம் நடந்த இடத்தை அடைந்ததும் மின்னல் வேகத்தில் செயலாற்றுவார்கள். கட்டுப்பாட்டு அறையின் உதவியோடு வண்டியின் நிலையை அறிந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.


தங்கள் உயிரைத் திரணமாக மதித்து மீட்புப்பணியில் களமிறங்கும் தீயணைப்பு வீரர்களுக்காக உதவும் வகையில் மிகுந்த சக்தி வாய்ந்த சில அதி நவீன உபகரணங்கள் உள்ளன இவற்றைத் தவிர, மிக உயரமான கட்டிடத்தில் சிக்கித் விப்போரை மீட்கவும் அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கவும் Hazamat Vehicles, Sky Lifts  ஆகிய நவீன ரக உபகரணங்களும் பயன்படுகின்றன.

கொடிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. உயிருக்குப் போராடுகிறவர்களையும், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களையும் மீட்கும் கடினமான பணிக்காக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இயற்கை சீற்றம்

மனிதர்களால் ஏற்படும் விபத்து ஒருபுறம் இருக்க மறுபுறம் இயற்கை சீற்றமும் சமுதாயத்தை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இயற்கை சீற்றங்களான வெள்ளம், புயல், நில நடுக்கம், வறட்சி, மண் சரிவு போன்றவற்றால் ஏற்படும் அழிவு சமூகச் சூழலையே புரட்டி எடுத்துவிடும் அளவுக்கு அபாயமானவை. இதுபோன்ற நேரத்தில் உதவத்தான் தீயணைப்பு வீரர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் வருவதற்குள் சூழ்நிலையை எதிர்கொள்ளவும் நிலைமையைக் கையாளவும் கற்றுக்கொண்டால், பாதிப்புகளை ஓரளவுக்குக் குறைக்கலாம். இயற்கைப் பேரழிவுகளைத் தடுக்க முடியாவிட்டாலும், சீரிய திட்டமிடல் மூலம் விளைவுகளைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

தீ பரவுகிறது என்றால் சூழ்நிலையை அனுமானிக்க வேண்டும். பதற்றம், தேவையில்லாத சிக்கலை உருவாக்கும். இதுபோன்ற நேரத்தில், ‘நில், படு, உருண்டோடு’ என்பதைக் கடைபிடிக்கச் சொல்கின்றனர் தீயணைப்புத் துறையினர். இந்தச் செயல்களால் தீப்புகையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஒரு விபத்து ஏற்பட்டதும், நமக்கேன் வம்பு என ஒதுங்கிக்கொள்ளாமல் 101 என்ற எண்ணைச் சுழற்றி சம்பவம் நடந்த இடத்தை தெளிவாக ஏதேனும் ஒரு அடையாளத்துடன் தெரிவிக்க வேண்டும். அந்த அழைப்பு எழும்பூரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, சம்பவம் நடக்கும் தீயணைப்பு நிலையத்துக்குத் தெரிவிக்கப்படும்.

பணிகள்

ஒரு தீயணைப்பு வீரரின் பணி மிக கடினமான, துணிச்சலான அதே சமயம் சவால் நிறைந்த பணியாகும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது தெரிந்தும் தெரியாததுமான ஆபத்துகளைத் தாங்கிப் பணிபுரியும் பணியாளரின் உடல்நிலை மற்றும் மன நிலை பாதிக்கக்கூடும். தீ, வெள்ளம், புயல், பூகம்பம், நிலச்சரிவு, ரசாயன வாயுகசிவு, கட்டிட இடுபாடுகளில் மீட்பு பணி போன்ற நிகழ்வுகளில் பணிபுரியும்போது சிறியதும் பெரியதுமான  காயங்கள், உடல் உறுப்புகளின் தற்காலிக மற்றும் நிரந்தரச் செயலிழப்பு, உடல் உறுப்புகளைப் பறிகொடுத்தல் போன்ற பாதிப்புகள் மட்டுமின்றி சில விபத்துகளில் பணிபுரியும்போது மரணமும்கூட ஏற்படும்.

இத்தனை ஆபத்துக்களையும் தாண்டி சக உயிர்களைக் காப்பதொன்றே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் தீயணைப்பு வீரர்கள். போர்க்களத்தில் எதிரிகளோடு போரிடும் வீரர்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல, பேரிடர் காலங்களில் கைகொடுக்கும் தீயணைப்பு வீரர்களது மீட்புப் பணி.

ஆனால் இந்த சமுதாயத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான முக்கியத்துவம் மிக குறைவு.. பல பள்ளிகளிளும், கல்லூரிகளிலும் பக்கத்தில் உள்ள தீயணைப்பு அதிகாரிகளை கூப்பிட்டு மாணவர்களுக்கு அவர்களின் அனுபவங்களை கூறச்சொல்பவர்களை விரல் விட்டு என்னி விடலாம்.. உயிரைப்பணையம் வைத்து காப்பாற்றும் இவர்களுக்கு நிச்சயம் ஊருக்குள் மரியாதை குறைவுதான்..

11 comments:

  1. //உயிரைப்பணையம் வைத்து காப்பாற்றும் இவர்களுக்கு நிச்சயம் ஊருக்குள் மரியாதை குறைவுதான்..//

    மிக சரி.

    ReplyDelete
  2. இவர்களுடை உதவி தேவைப்படும்போது மட்டும் நினைத்துவிட்டு மறந்து விடுகிறோம். :(

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது சரிதான் சதீஷ் அவர்களை நினைத்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது என்ன செய்ய மக்களை காப்பதற்கு அவர்கள் செய்வதும் ஒரு தியாகம்தான்...!!!

    ReplyDelete
  4. நீங்க சொல்லீடீங்க....புரியுது, புரிய வேண்டியவர்களுக்கு புரியுமா?

    ReplyDelete
  5. தங்களை ஆபத்துக்குள்ளாக்கி அடுத்த மனிதனை காக்கும் எவரும் போற்றப்பட்ட வேண்டியவர்களே ..!

    ReplyDelete
  6. உண்மைதான் போர்வீரர்களுக்கு சளைத்தவர்களல்ல தீயணைப்பு வீரர்கள் அவர்களை கவுரவிக்க வேண்டும் என்கிற உங்கள் எண்ணம் ஈடேறட்டும்...!

    ReplyDelete
  7. உயிரைப் பணயம் வைத்து காப்போரைப் போற்றுவோம்.

    ReplyDelete
  8. மக்களை காப்பதற்கு அவர்கள் செய்வதும் ஒரு தியாகம்தான்.

    ReplyDelete
  9. அருமையான பதிவு.
    பொது மக்களாகிய நாம் அவர்களுக்கு செய்ய வேண்டியது, சரியான தகவல் கொடுத்தல், எந்த வழியாக வந்து விபத்து நடந்த இடத்தை அடைவது, வழி காட்ட ஒருவரை நிறுத்துவது, முன்பாகவே தண்ணீர் எங்கிருந்து எடுப்பது, முக்கியமாக கூட்டம் போட்டு அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது, அவர்களுக்கு ஆளாளுக்கு யோசனை சொல்லாமல் இருப்பது.
    உங்களது அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. முதலில் தீயணைப்புப் பணியாளர்கள் பற்றிய உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மரியாதை குறைவு என்பதை விட, இவர்களின் பணி எவ்வளவு முக்கியம் என்பது பலருக்குப் புரிய வாய்ப்பில்லை என்பதே உண்மை.
    ஒரு வேலை இவர்களைப் பற்றி ஏதாவது சினிமா வந்தால் புரியலாம்.
    என்ன செய்வது? கட்டபொம்மனிலிருந்து கட்டதுரை வரைக்கும் சினிமா மூலம் தானே மக்களைச் சென்றடைய வேண்டியிருக்கிறது.

    ReplyDelete