பழையன கழிதலும் புதியன புகுதலும் இது தான் போகிப்பண்டிகை என்று அனைவரும் சொல்லும் வாசகம். கிராமங்களில் போகிப்பண்டிகை அன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சந்தோசம் தான் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய விரிப்பு, பெட்சீட், தலையானை மற்றும் இதர பொருட்களை தீ இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நான் சிறியவனாக இருக்கும் போது எங்கள் ஊரில் பெண்கள் எல்லாம் கும்மியடித்து, கும்மிப்பாட்டு பாடி அனைவருக்கும் மகிழ்வர். இப்ப எல்லாம் அதைப்பார்த்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையில் போகிக்கு முக்கிய இடம் உண்டு.
இப்பண்டிகை எப்பவுமே தை பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் போகிப்பண்டிகை அன்று வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குப்பைகளை போட்டு தீயிட்டு கொளுத்துவர். வீட்டில் உள்ள பழைய குப்பைகள், துணிகளைத்தான் வழக்கமாக கொளுத்துவார்கள்.
மார்கழி மாதத்தின் கடைசி நாளை துன்பங்களைத் துடைக்கும் நாளாக போகிப்பண்டிகை என்ற பெயரில் கொண்டாடுகிறோம். துன்பம், வறுமை, மனஅழுக்கு போன்ற குப்பைகளை எரித்து புதுப்பொலிவுடன் பொங்கலைக் கொண்டாட நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் பண்டிகை இது பண்டைய நாட்களில் மழையைக் கொடுத்து பயிர்களை செழிக்க வைக்கும் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திர விழாவாக போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. சொர்க்க போகங்களை அனுபவிக்கும் இந்திரன் போகி என கூறியதை கேள்விப்பட்டது உண்டு.
போகிப்பண்டினை அன்று கிராமங்களில் அனைத்து வீட்டிலும் காப்பு கட்டுவார்கள், காப்பு கட்டுவது என்பது அந்த ஆண்டின் இறுதி நாளை கழிவடை நாளாக கருதி அந்த நாளோடு அனைத்து கெட்டவைகளும் அழியட்டும் என்று காப்பு கட்டுவர். வேப்பந்தலை, ஆவாரம் பூ, பூலப் பூ இது மூன்றையும் சேர்த்து கட்டு வைப்பதற்கு காப்பு கட்டு என்று பெயர்.
இந்த வருடம் நாம் நமது பழைய பொருட்களை மட்டும் அல்ல நமக்கு தேவையில்லாத நினைவுகள், எண்ணங்கள் அனைத்தையும் தீ இட்டு அழித்து விட்டு இத்தைத் திருநாளை புதிய எண்ணங்களுடனும், புதிய முயற்சியுடனும் இத் தமிழ் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
பொங்கல் வாழ்த்துக்கள் நன்பரே..::))
ReplyDeleteமனஅழுக்கு போன்ற குப்பைகளை எரித்து /////////
ReplyDeleteஇதைதான் முக்கியமாக செய்யணும்.
பகிர்விற்கு நன்றி.
//வீட்டில் உள்ள பழைய குப்பைகள், துணிகளைத்தான் வழக்கமாக கொளுத்துவார்கள். //
ReplyDeleteசங்கவி,
இத்துடன் சேர்த்து தமிழர்களாகிய நாம் “ஜாதிகளையும்” கொளுத்தினால் தான்... மகிழ்ச்சி “பொங்கும்”.
குடும்பத்தினர் அனைவருக்கும் ”பொங்கல் வாழ்த்துகள்” நண்பா.
//பொங்கல் வாழ்த்துக்கள் நன்பரே..:://
ReplyDeleteவாங்க பாலா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....
//மனஅழுக்கு போன்ற குப்பைகளை எரித்து /////////
ReplyDeleteஇதைதான் முக்கியமாக செய்யணும்.
பகிர்விற்கு நன்றி.//
வாங்க சூர்யா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....
//வீட்டில் உள்ள பழைய குப்பைகள், துணிகளைத்தான் வழக்கமாக கொளுத்துவார்கள். //
ReplyDeleteசங்கவி,
இத்துடன் சேர்த்து தமிழர்களாகிய நாம் “ஜாதிகளையும்” கொளுத்தினால் தான்... மகிழ்ச்சி “பொங்கும்”.//
சரியாச் சொன்னீங்க நண்பா...
வாங்க சத்ரியன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....
பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க ஸ்ரீ....
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்த்திற்கும் எனது இனிய பொங்கல் நல்லாழ்த்துக்கள்....
இந்த வருடம் நாம் நமது பழைய பொருட்களை மட்டும் அல்ல நமக்கு தேவையில்லாத நினைவுகள், எண்ணங்கள் அனைத்தையும் தீ இட்டு அழித்து விட்டு இத்தைத் திருநாளை புதிய எண்ணங்களுடனும், புதிய முயற்சியுடனும் இத் தமிழ் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
ReplyDeleteநூத்துல ஒரு வார்த்தை தம்பி. பொஙல் வாழ்த்துக்கள்.
சில வருடங்கள் வரை, டயரைப் போட்டு எரித்து, சென்னையை, மேலும் கருப்பாக்கினார்கள். இப்பொழுது பரவாயில்லை.
ReplyDeleteஅழகான கட்டுரை.
பொங்கல் வாழ்த்துகள். போகியென்றாலே இப்போது பயம். காலை 10 மணி வரை எதிரில் வருபவர் தெரியாத மூட்டம். விபத்து என்று.
ReplyDeleteகாப்புக் கட்டுக் வழக்கம் எங்கள் ஊரிலும் உண்டு. இங்கேயெல்லாம் அது கிடைப்பதில்லை. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த வருடம் நாம் நமது பழைய பொருட்களை மட்டும் அல்ல நமக்கு தேவையில்லாத நினைவுகள், எண்ணங்கள் அனைத்தையும் தீ இட்டு அழித்து விட்டு இத்தைத் திருநாளை புதிய எண்ணங்களுடனும், புதிய முயற்சியுடனும் இத் தமிழ் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். ..................இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க கண்ணகி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....
ReplyDelete//சில வருடங்கள் வரை, டயரைப் போட்டு எரித்து, சென்னையை, மேலும் கருப்பாக்கினார்கள். இப்பொழுது பரவாயில்லை.//
ReplyDeleteடயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டு சுற்றுப்புறச் சூழலை நாசமாக்குகிறார்கள்....
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பின்னோக்கி....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
//பொங்கல் வாழ்த்துகள். போகியென்றாலே இப்போது பயம். காலை 10 மணி வரை எதிரில் வருபவர் தெரியாத மூட்டம். விபத்து என்று.//
ReplyDeleteசரியாக சொன்னீங்க சார்... மார்கழி பனியா? இல்ல புகையான்னு தெரியாத அளவிற்கு புகை மூட்டம்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
வாங்க ஜெயந்தி....
ReplyDelete//காப்புக் கட்டுக் வழக்கம் எங்கள் ஊரிலும் உண்டு. இங்கேயெல்லாம் அது கிடைப்பதில்லை. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்//
சொல்லுங்க பார்சல் அனுப்பிட்டா போகுது...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
வாங்க சித்ரா வாங்க
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க வித்யா...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி....
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete//இந்த வருடம் நாம் நமது பழைய பொருட்களை மட்டும் அல்ல நமக்கு தேவையில்லாத நினைவுகள், எண்ணங்கள் அனைத்தையும் தீ இட்டு அழித்து விட்டு இத்தைத் திருநாளை புதிய எண்ணங்களுடனும், புதிய முயற்சியுடனும் இத் தமிழ் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.//.....
ReplyDeleteசரியா சொல்லி இருக்கீங்க, நானும் அதையேதான் நினைக்கிறேன்.
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே..
ReplyDeleteக்ரேட் பாஸ்.. எப்டி தான் உங்களால இப்டி தொடர்ந்து சமூக உணர்வோட எழுத முடியுதோ போங்க..
ReplyDeleteஇனிய தமிழர் திருநாள் சங்கவி.
ReplyDeleteபழையன கழித்தல் மரபாய் இருந்தாலும் சில பழையன தேவை.
வணக்கம்.இந்த வருடம் எங்க ஊரில் நோன்பு,, உங்க ஊரில் நோன்பியா ?
ReplyDeleteநல்லா சொன்னீங்க சங்கவி
ReplyDeleteதேவை இல்லாத எண்ணங்களை எல்லாம் கழித்து விடுதல் நல்லது என்று நன்றி நண்பரே
பொங்கல் வாழ்த்துக்கள்
அன்பு நண்பருக்கு வணக்கம்.
ReplyDeleteபலநாட்கள் கழித்து இணையம் வாயிலாக தொடர்பு கிட்டியதில் மகிழ்ச்சி.
உங்கள் வலைப்பூ கண்டேன்; ஆனந்தம் கொண்டேன்; இனி தொடர்வேன்.
எனது வலைப்பூக்கள்:
1. http://kuzhalumyazhum.blogspot.com
2. http://malarumvandum.blogspot. com
3. http;//panjapoothavanakkam. blogspot.com
எனது மின்னஞ்சல் முகவரி: :vamumurali@gmail.com
உலகம் உருண்டை; நாம் எங்காவது சந்தித்துக் கொண்டே தான் இருப்போம். தற்போதைய சந்திப்பு, மூன்றாவது முறை. நமது நட்பு தொடரட்டும். உங்கள் எழுத்துக்கள் மெருகேற வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், உங்கள் பின்தொடர்வோருக்கும், குடும்பத்துக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
-வ.மு.முரளி.
பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி. தங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நல்ல கருத்துக்கள்.நல்ல கட்டுரை. அனைவருக்கும் பொங்கல் நல வாழ்த்துக்கள்
ReplyDelete