Tuesday, August 31, 2010

பெற்றோர்களே உஷாராக இருங்கள்...


7 வயது சிறுவன் விவேக் அவனது அப்பா மின்சார வாரியத்தில் பெரிய பதவியில் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அப்பாவின் மேல் உள்ள கோபத்தில் விவேக்கை கடத்திவிட்டார்கள் அவனது அப்பாவின் எதிரிகள். யார் எதற்கு கடத்தினார்கள் என்றே தெரியவில்லை. போலீசாரும் வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்கள்.


விவேக்கிற்கு தெரிந்ததெல்லாம் அப்பா பெயர் அம்மாவின் பெயர் தான். இவனை யார் கடத்தினார்கள் எதற்கு என்றும் அவனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஊரே ரனகளமாகி இருந்தது அனைத்து வீட்டிலும் சோகம். எங்கு திரும்பினும் இதே பேச்சு. கிராமத்து பெரியவர் வீட்டுக்கு ஒரு போன் அழைப்பு வந்தது காவல் நிலையத்தில் இருந்து கந்தசாமி மகன் கிடைத்து விட்டான் சென்னையில் என்று. அப்புறம் ஊரில் இருந்து ஒரு 15 பேர் காவல் துறை அதிகாரிகளுடன் சென்னை சென்று விவேக்கை மீட்டு வந்தனர்.


விவேக் அங்கு நடந்ததை சொல்லும் போது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது அவனை கடத்தியவர்கள் அவன் பள்ளியில் இருந்து வெளியே நிற்கும் போது இலந்த வடை வாங்கிக்கொண்டு இருந்து இருக்கிறான் ஒருவர் வந்து இன்னும் 2 வாங்கிக்கப்பா நான் உங்க அப்பாவின் நண்பன் தான் என்று சொல்லி வாங்கி கொடுத்து இருக்கிறான் நான் போகும் போது உங்க வீட்டிலி விட்டிவிடட்டுமா என கேட்க இவன் சரி என்றதும் அவனை ஒரு பைக்கில் அழைத்து பின் வேறு காருக்கு மாற்றி இருக்கிறார்கள். அடுத்த நாள் விழித்துப்பார்க்கும் போது கார் எங்க இருக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை அவனுக்க காரிலேயே இட்லி வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.


விவேக் சாப்பிட்டு விட்டு என்ன ஏது என்று தெரியாமல் அவனை மிரட்டி இருக்கிறார்கள் அவனும் புரியாமல் தவித்துக்கொண்டு இருந்திருக்கிறான். சாலை ஓரத்தில் பப்பாளி விற்றுக்கொண்டு இருந்திருக்கிறார்கள் இவன் பப்பாளி வேண்டும் என கேட்க அவர்களில் ஒருவன் கூட்டிக்கொண்டு போய் வாங்கி கொடுத்து உள்ளான் இவர்கள் சாப்பிடும் போது ஒரு காவல் துறை அதிகாரி அங்கு வந்து ஓரமாக பைக் நிறுத்தி தம் அடிக்க விவேக் சாப்பிட்டு விட்டு இன்னொன்று வேனும் என கேட்க ஒன்று தான் வாங்கித்தருவேன் என அவன் இவனை அதட்டி மிரட்ட விவேக் அவனை விட்டு ஓடி இருக்கிறான் ஓடி தடுக்கி விழந்து உள்ளான் அவனை அந்த காவல் துறை அதிகாரி தூக்கி குப்பைகளை தட்ட இதை பார்த்த கடத்தியவன் ஒதுங்கி விட்டான். அந்த அதிகாரியிடம் விவேக் முன்னுக்குப்பின் தவறான தகவல் தர அவர் அவனை அங்கு யாருடன் வந்தான் என அவர் தேட கடத்தியவர்கள் எஸ்கேப்.


விவேக்கிடம் அவனது அப்பா பெயர், அம்மா பெயர் மட்டும் சொல்லி இருக்கிறான் ஊர் பேர் கேட்க தாத்தா பாட்டி என பல ஊர்களை சொல்லி உள்ளான். அதிகாரிகளும் அவனிடம் ஒவ்வொருவராக பேச்சு கொடுக்க அதில் ஒரு பெண் அதிகாரி உங்க அப்பா உன்னை எங்க சினிமாவிற்கு கூட்டிட்டுப்போவார் என சொல்ல அவன் ஊர் பேர் சொல்லி தியேட்டர் பேர் சொல்லி இருக்கிறான் இங்க தான் நிறைய படம் பார்த்து இருக்கிறேன் என்று சொல்ல காவல் துறை அதிகாரிகள் அந்த ஊர் நிலையத்திற்கு போன் செய்து கேட்க ஆமாம் இங்க விவேக் என்ற சிறுவன் காணமல் போகிவிட்டான் அவன் தான் என்று சொல்ல அப்புறம் விவேக்கை மீட்டு உள்ளனர். விவேக்கிடம் அதிகாரிகள் கிட்டத்தட்ட 15 மணி நேரம் பேச்சு கொடுத்து உள்ளனர்..


விவேக் என்னும் என் நண்பன் என்னுடன் சென்னையில் பணியாற்றும் போது என்னிடம் கூறிய சம்பவம் இது.


இச்சம்பவம் மூலம் எனது கருத்து சிறுவயதில் குழந்தைகளிடம் அப்பாவின் பெயரையும், அவரது தொலைபேசி எண்ணையும் குழந்தைகளிடம் சொல்லி சொல்லி மனதில் பதிய விட்டால் குழந்தை எங்காவது காணமல் போனாலோ, எதாச்சையாக நம்மிடம் சொல்லாமல் சென்று விட்டலோ நீ யார் என கேட்டால் அப்பாவின் பெயரும் தொலைபேசி எண்ணும் அச்சிறுவர்களுக்கு தெரிந்தால்  அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

30 comments:

  1. நல்ல பகிர்வு சதீஷ்...

    ReplyDelete
  2. unmaithan. ippoluthu siruvargalai valarthuvathu miga challengana oru vishyam

    ReplyDelete
  3. பெற்றோர்களுக்கு மிகவும் அவசியமான பதிவு... சிறு பிள்ளைகளை முழு நேரமும் டிவியின் முன்னாள் அமர்வதை தவிர்த்து சில பொதுவான விசயங்களை சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியமான ஓன்று ...

    ReplyDelete
  4. நிச்சயம் பயன்படும்.. இது பெற்றோர்களின் கடமையும் கூட ..
    அப்புறம் நம்ம ப்ளாக் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆகிடுட்சே அண்ணா ..?!?

    ReplyDelete
  5. அப்நார்மலாக ஏதும் நட்ந்துவிடுமோ என பயந்தேன். குட் லக்.

    ReplyDelete
  6. வாக்கியப்பிழைகளை தவிர்க்க முயலுங்கள் சங்கவி.

    ReplyDelete
  7. வாங்க வினோ...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  8. வாங்க எல்கே....

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  9. வாங்க வெறும்பய...

    நிச்சயமாக நீங்கள் சொல்வதும் சரி...

    ReplyDelete
  10. வாங்க முகம்மது...

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  11. வாங்க செல்வக்குமார்...

    உங்கள் பதிவை படிக்கிறேன்... கமெண்ட் போட நேரம் இல்லாததால் போடல... உங்க மொக்கை சூப்பர்...

    ReplyDelete
  12. வாங்க ஆதி...

    நிச்சயம் வாக்கிய பிழையை சரி செய்ய முயற்சிக்கிறேன்... உங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  13. உண்மைதான் சங்கவி.

    ReplyDelete
  14. கொஞ்சம் பயந்துகிட்டேதான் படிச்சேன் ... குழந்தைகளிடம் அட்ரஸை மனப்பாடம் செய்ய சொல்லனும் . பின்னால உதவும்..

    ReplyDelete
  15. பெற்றோர்கள் தான் இதை சொல்லித் தர வேண்டும்

    எனக்கு தெரிந்த உறவினரின் 5 வயது சிறுவன் ஒருவன் அவன் அப்பா,அம்மா,பாட்டி,மாமா எல்லாருடைய போன் நம்பரையும் அப்படி மனப்பாடமா வச்சிருக்கான் :)

    இது கண்டிப்பா பயன்படும் :)

    ReplyDelete
  16. இன்றையக் காலகட்டத்தில் மிகவும் முக்கியமானத் தகவல். பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  17. நல்ல தகவல்... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. உண்மைதான் சங்கவி...பகிர்வு நன்று..

    ReplyDelete
  19. பதிவுக்கு நன்றி சகோதரா.... பாப்பம் எனக்க பிறக்கும் போது செய்கிறேன்... அதெல்லாம் சரி மாமாவாக்கிறேன் என்று நினைக்கக் கூடாது ஒரு துணை பார்த்து சொல்லுங்கள்..

    ReplyDelete
  20. அவசியமான கருத்து , பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  21. தமிழக காவல்துறைக்கு பாரட்டுகள் மேலும் தங்கள் பதிவின் வாயிலாக பல பெற்றோர்களுக்கும் சென்றடைய வாழ்துகள் அவசியம் தேவையான விழிப்புணர்வு

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  22. நல்ல பகிர்வு...பதிவும்.

    ReplyDelete
  23. நல்ல உபயோகமான பதிவுங்க..... நன்றி.

    ReplyDelete
  24. சரிதான்.........பயனுள்ள பதிவு

    ReplyDelete
  25. இச்சம்பவம் மூலம் எனது கருத்து சிறுவயதில் குழந்தைகளிடம் அப்பாவின் பெயரையும், அவரது தொலைபேசி எண்ணையும் குழந்தைகளிடம் சொல்லி சொல்லி மனதில் பதிய விட்டால் குழந்தை எங்காவது காணமல் போனாலோ, எதாச்சையாக நம்மிடம் சொல்லாமல் சென்று விட்டலோ நீ யார் என கேட்டால் அப்பாவின் பெயரும் தொலைபேசி எண்ணும் அச்சிறுவர்களுக்கு தெரிந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.


    ..... Good idea. Thats one of the first lessons for kindergarden children, over here.

    ReplyDelete
  26. சங்கவி,

    பலருக்கும் பயனுள்ள பதிவு.

    ReplyDelete