வணக்கம் என் இனிய வலைப்பூ நண்பர்களுக்கு...
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
வருடா வருடம் நிறைய எழுதவேண்டும் என்று தான், அந்த வருடத்தின் முதல் பதிவில் எழுதும் போது நிச்சயம் இடம் பெறும் வாசகமாக இருக்கும் ஆனால் அந்த வருடம் செல்லச்செல்ல அது நிச்சயம் நிறைவேறுவதில்லை, இது எனக்கு மட்டமல்ல நம் நிறைய பேருக்கு இப்படித்தான் போகிறது. அதுவும் முகப்புத்தகம் வந்ததில் இருந்து நிறைய எழுதவும் இயலவில்லை ஆனாலும் நிறைய நேரம் இணையத்தில் இருக்கமுடிகிறது. இது ஏன்என்று கண்டுபிடிக்கவெல்லாம் தேவையில்லை நமக்குத்தான் தெரியுமே வலைவதில்லை என்று. பார்ப்போம் இந்த வருடமாவது எழுதமுடிகிறதா என்று..
********************
இந்த வருட ஆரம்பமே எனக்கு பட்டையகிளப்புகிறது. அதாவது செலவில்லாத ஆண்டாக அமைந்ததில் சந்தோசமே. 30ம் தேதியில் இருந்து பல்வலி மருத்துவர் பல்லை புடுங்கித்தான் ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார். இரண்டு நாள் போகட்டும் என்று இருக்கும் போது வலி அதிகமாக எதுவும் சாப்பிடஇயலவில்லை. எப்போதும் புத்தாண்டு பிறக்கும் போது பார்ட்டி, ஒட்டல் என செலவு கையை கட்டும், இந்த முறை செலவு மிச்சம், பல்லை புடுஙகியதால் அடுத்தநாள் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் என எங்கேயும் ஊர் சுத்தாததால் எனக்கு இந்த வருட ஆரம்பம் செலவு இல்லாமல் முடிந்ததில் எனக்கு மிக மகிழ்ச்சியே...
********************
கோவையில் தினமும் சுங்கம் நிர்மலா கல்லூரி வழியாகத்தான் அலுவலகத்திற்கு
வருவேன். அவ்வழியில் தினமும் நிறைய இளைஞர்களும் பெற்றோர்களும் பெட்டியுடன்
நிற்பார்கள். அவசரமாக வருவதால் என்ன என்று பார்க்க நேரம் இருக்காது.
சமீபத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த என் தம்பி நின்று இருந்தான் அவனையும்
அவன் அப்பாவையும் பெட்டியுடன் பார்த்தேன். உடனே இங்க என்ன பன்ற எப்படி
இருக்கின்றாய்? என்று விசாரிக்கும் போது, அவன் சந்தோசமாக அண்ணா எனக்கு
இந்திய இராணுவத்தில் வேலை கிடைச்சிருக்கு என்று சந்தோசமாக சொன்னான்.
எனக்கும் இன்ம் புரியா ஓர் மகிழ்ச்சி.
தனது பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் விட்டு உயிரை துச்சம் என
நினைத்து அவன் கண்களில் எந்த பயமும் இல்லாமல் அவன் மகிழ்ச்சியை மட்டும்
பார்த்தேன்.
இன்று நம்நாட்டில் நிறைய வேலைகள் உள்ளன அனைத்துக்கும்
நல்ல சம்பளம் கிடைக்கின்றது ஆனால் இந்த இளைஞனைப்போல் இரானுவத்தை
தேர்ந்தெடுத்த இளைஞர்களுக்கு என் ராயல் சல்யூட்.
********************
நகரத்தில் உள்ள பாதி பேருக்கு புத்தாண்டு கொண்டாட்டம் ஹோட்டலில்தான்
போல, எத்தனை விதமான ஆபா்கள், கப்புலுக்கு 6000 என்கிறாா்கள், 4 ஆயிரம்
என்கிறாா்கள், எம்புட்டு வேண்டுமானாலும் தின்னுக்கலாம் என்கின்றனா். அதைவிட
ஒரு படி மேலே போய் எம்புட்டு வேண்டுமானாலும் குடிச்சிக்கலாம் என்று
இன்னொரு ஹோட்டலின் விளம்பரத்தை பாா்த்தேன். அம்மாடி இம்புட்டு செலவு
செய்து குடிக்கவும், குத்தாட்டம் போடவும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற
போது தான் திகைக்கவைக்கிறது....
புத்தாண்டை பொறுத்த வரை எப்பவும் என்
கிராமத்தில் தான் கொண்டாடுவேன், ஊாில் உள்ள எல்லோரும் ஆளுக்கு 10, 20
என்று போட்டு பவானி போய் அந்தியூா் முக்கில் உள்ள பேக்காியில் கேக்
வாங்கிட்டு வந்து எப்படா மணி 12 ஆகும் என்று குளிாிலும் ஊா், உலக
நியாயங்களை பேசிவிட்டு, 12 மணிக்கு செட் செய்யப்பட்ட டேப்பில் கமலின்
ஹேப்பி நியூ இயா் பாடலை பாடி விட்டு, கேக் வெட்டுகிறேன் என்ற பெயாில்
எல்லாா் முகத்திலும் பூசிவிட்டு, சாலையில் போய் வரும், லாாிகளை எல்லாம்
நிறுத்தி புத்தாண்டு வாழ்த்து சொல்லி, விடிய விடிய ஆட்டம் போடுவோம்...
மிக குறைந்த செலவில், மிகப்பொிய சந்தோசம் கிடைத்த திருப்தி இருக்கும்...
இந்த முறை நகரத்தில் கொண்டாடுகிறேன்... ஊரை சுற்றுலாம் என
நினைத்திருக்கிறேன்... பாா்ப்போம், சந்திப்போம்... புத்தாண்டு
ஆட்டத்தில்.....
********************
ஒவ்வொரு
ஆண்டும், ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாட்களே.. வலைப்பதிவு,
முகபுத்தகம் இவை எல்லாம் வந்த பிறகு வருடக்கடைசியில் நாம் அனைத்து முக்கிய
நாட்களையும் நினைவில் கொண்டு எழுதுகிறோம்.. அந்த வகையில் இந்த ஆண்டு என்
வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு முதன் முதலாக மகனை பள்ளிக்கு அனுப்பி அவன்
வகுப்பறை செல்லும் வரை நின்று ரசித்து, எப்படி நடந்துக்குவானே, சண்டை
எதாவது போடுவானா, அடி வாங்குவானே என நினைத்து நினைத்து அன்று முழுவதும்
ஒரு பயத்தோடு கழிந்தது.
நான் பள்ளியில் செய்த குரும்புகள் எல்லாம் நிழல் ஆடின. ஆனால் மகன் என்னவோ சமத்து பிள்ளையாக இருந்தாலும் பெற்ற மனம் துடி துடிப்பது இன்று வரை தொடருகிறது...
நான் பள்ளியில் செய்த குரும்புகள் எல்லாம் நிழல் ஆடின. ஆனால் மகன் என்னவோ சமத்து பிள்ளையாக இருந்தாலும் பெற்ற மனம் துடி துடிப்பது இன்று வரை தொடருகிறது...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு சிறப்பாய் அமையட்டும்! சுவையான பகிர்வு! நன்றி!
ReplyDeleteஅனைத்து எண்ணங்களும் சிறக்க புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅஞ்சறை பெட்டியை மட்டுமாவது தொடர நேரம் ஒதுக்குங்கள். வாழ்த்துக்கள்
ReplyDelete