இது தன்னம்பிக்கை புத்தகம் என்று சொல்வதை விட வாழ்வில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு வரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். விருத்தாச்சலத்தில் நூலகத்தில் ஆரம்பித்து இன்று புதிய தலைமுறை அலுவலகம் வரை அண்ணணோடு பயணித்த அனுபவம் இந்த புத்தகத்தில் படிக்க படிக்க கூடவே நானும் பயணித்த அனுபவம் எனக்கு..
முதலில் தன்னுடன் பணியாற்றிய தன்னை அறிந்த தோழியை அணிந்துரை எழுத சொல்லி அதை அவர்கள் சுவைபட எழுதியது மிக மகிழ்ச்சிக்குரியது.
சிலநாட்களாக எனது வேலையில் சில குளறுபடிகளால் நிரம்பி இருந்தது அன்று அண்ணனுக்கு சுதாங்கன் கூறிய அறிவுரை இன்று எனக்கும் பொருந்தியதில் மிக்க மகிழ்சியாக இருந்தது. அந்த அறிவுரையை அடிக்கோடிட்டு இதுவரை 20 முறை படித்தாயிற்று.
ஒவ்வொன்றிலும் ஓர் அனுபவம் அண்ணனுக்கு ஆனால் என்னைப்போல தம்பிகளுக்கு எல்லாம் இது ஒரு நல்ல பாடம், அறிவுரை இன்னும் என்ன என்ன இருக்குதோ சொல்லிகிட்டே போகலாம்..
தனது சகாக்களை மறக்காமல் குறிப்பிட்டு அவர்களையும் தன்னுடன் இணைத்தது மிக மிக சந்தோசமானது. நாம் அவரது சகாவாக இல்லாமல் போய்விட்டோமே என்று மனசு வருத்தப்பட்டது..
அவர் எழுதி உள்ள அனைத்து தலைப்புகளையும் பற்றி எழுதிக்கொண்டே போகலாம், அதை கருத்தாக நான் எழுதுவதை விட அந்த புத்தகத்தோடு பயணித்து பாருங்கள், புத்துணர்வை பெறுவீர்கள்..
புத்தகத்தை அனுப்பிய அண்ணனுக்கு மிக்க நன்றி...
நிறைய எழுதனும் என்று புத்தத்தில் அடிக்கோடிட்டு இருந்தேன் எழுத இருந்தேன். தவிர்க்க இயலாத காரணத்தால் சொந்த ஊருக்கு வந்ததால் எழுத முடியவில்லை....
என்றும் உங்களின் அன்பு தம்பி
புத்தகம் வாங்க விரும்புபவர்களுக்கு...
நூல்: காகிதப் படகில் சாகசப் பயணம்
ஆசிரியர்: பெ. கருணாகரன்
விலை: ரூ 150
வெளியீடு: குன்றம் பதிப்பகம்
73/31, பிருந்தாவனம் தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை – 600 033.
மெயில் முகவரி: kagithapadagu@gmail.com
முகநூலில் சில அத்தியாயங்கள் படித்தேன்! நூல் வாங்க வேண்டும்! நன்றி!
ReplyDeleteஅவசியம் வாங்கிப் படிக்கிறேன் நண்பரே
ReplyDeleteநன்றி