கோவையில் இருந்து கோபி செல்லும்
பேருந்தில் கடந்த வாரத்தில் ஒரு நாள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது, லஷ்மி
மில் பேருந்து நிலையத்தில் முன் வாசலில் ஏறி வண்டியை கடைசி வரை
நோட்டமிட்டேன், இருக்கை இல்லாததால், பின் பாகத்தை கம்பியில்
முட்டக்கொடுத்து நின்று ஊரை பராக்கு பார்க்க ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு
நிறுத்தத்திலும் சிலர் ஏற ஏற வண்டி நிரம்பிக்கொண்டே வந்தது, மருந்துக்கு
கூட நடத்துனர் சிரிக்கவே இல்லை மனிதன் உர் என்றே இருந்தார். ஒரு வேளை
சிரித்தால் சில்லரை கொட்டி விடும் என்று நினைத்திருப்பார் போல. அக்கினி
நட்சத்திரம் வரவில்லை ஆனால் அக்னியின் அனல் கதகதத்தது. பேருந்தின்
மேற்கூரையை பொத்துக்கொண்டு வந்தது வெய்யிலின் உக்கரம்.
சித்ரா
நிறுத்தத்தில் ஒரு பெரியவர் தள்ளாடி ஏறினார், இரண்டாவது இருக்கையில்
இருந்த ஒருவர் எழுந்து பெரியவருக்கு இடம் கொடுக்க எழுந்தார். உண்மையிலே
மிகவும் பாரட்ட தோன்றியது அந்த இடம் கொடுத்தவரை, பெரியவர்களுக்கு வழி
விடும் மற்றும் இடம் கொடுக்கும் ஆட்களை எல்லாம் இங்கு விரல் விட்டு
எண்ணலாம்.
இத்தனைக்கும் பெரியவர் மேலே ஏறியதும் அதன்
பக்கத்தில் இருந்தவர் காதில் பெரியதாக ஸ்பீக்கரை வைத்துக்கொண்டு மண்டையை
ஆட்டி ஆட்டி வந்தார். எனக்கு மண்டையில் போடனும் போல தோன்றியது. அதன்
அருகில் இன்னொருவன் சின்ன ஒயரை காதில் விட்டுக்கொண்டு அவனுக்கு ஏத்தாற்
போல் மண்டையை ஆட்டி வந்தார்.
மனிதாபிமானம் அற்ற ஊரில் நாம்
இருக்கிறோம் என்று என் மனம் என்னை யோக்கியனாக காட்டியது. நான் அவ்வப்போது
இடம் விடுவேன், எதாவது புத்தகம் கையில் இருந்தால் மருந்துக்கு கூட திரும்பி
பார்க்கமாட்டேன் என்பது தான் நிதர்சனம். பேசிகிட்டே பெரியவரை விட்டுட்டேன்
பாத்தீங்களா...
பெரியவருக்கு இடம் விட அந்த நல்ல மனிதர்
எழுந்ததும் பெரியவர் அங்கே வந்தார் அப்போது என் அருகில் இருந்த ஒரு பன்னி
மூஞ்சி வாயன் ஓடிப்போய் அந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டான், பெரியவருக்கு
என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஆனால் அந்த இடம் விட்டவர் கேள்வி
கேட்டார், அதற்கு அவன் சொன்ன பதிலோ இடம் இருந்தது உட்கார்ந்தேன் அவ்வளவு
தான் என்றான்.
இப்போது பேருந்து கோல்டுவின்சை தாண்டி சென்றது.
இவர்கள்
சத்தம் போடுவதை பார்த்த சிரித்தால் சில்லறை கொட்டும் என்று இருந்த
நடத்துனர் பெரியவருக்கு சீட் விடலாமுள்ள தம்பி என்று பேசினார். இந்த பன்னி
மூஞ்சு வாயனைப்பத்தி சொல்லாம விட்டுட்டேன் பாத்தீங்களா.. கட்டையா, குட்டையா
நல்ல உயர்தர பேண்ட், சர்ட், வுட்லேண்ட் சூ என்று ஆள் பெரிய இடத்து
பிள்ளையாகத்தான் இருந்தான் ஆனால் கருத்தவன் அதனால் தான் எல்லோர் கேள்வி
கேட்கும் போதும் டக் டக்குன்னு பதில் சொன்னான்.
கடைசியா
எல்லாரும் உட்கார்ந்து தொலைகிறான் என்று விட்டு விட்டு, வேத்து ஊத்தும்
உடலை வெப்பக்காற்றால் நனைத்துக்கொண்டு இருந்தனர் நானும் தான். பேருந்து
கருமுத்தம்பட்டியை அடைந்தது இறக்கமற்ற அந்த பன்னி மூஞ்சிவாயன் இறங்கி
போனன்.
படிச்சா மட்டும் போதாது கொஞ்சமாவது மனிதாபிமானம்
வேண்டும், இவனுக எல்லாம் நாளைக்கு அடிபட்டா எவனும் கண்டுக்காம, போகும் போது
தான் இவனுக்கு மனிதாபிமானம் என்றால் என்ன வென்ற தெரியும் என்று முனு
முனுத்தார் சிரித்தால் சில்லறை கொட்டும் என்று நான் நினைத்த நடத்துனர்.
நீங்கள் சொன்னது போல் மனிதாபிமான மனிதர்களை சல்லடை போட்டு தான் தேடனும் - chudachuda.com
ReplyDeleteதேடினாலும் கிடைப்பது ரொம்ப கடினமாகத்தான் இருக்கும்..
Deleteஇப்படியும் சில மனிதர்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஆம் தல, இப்படியும் இருக்கானுக பக்கிக...
Deleteமனிதாபிமானம் உள்ள நடத்துனர்...
ReplyDeleteஆமாங்க டிடி
Delete