ரயில்களில் நமக்கான உரிமை தமிழக எல்லையை தாண்டியதும் மறுக்கப்படுகிறது என்பது மறுக்க இயலா உண்மை. சேலத்தை
கோட்டாமாக மாற்றுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நாம் பட்ட பாடு நன்றாக
தெரியும். ரயில் பயணங்களில் நியாமாக நடந்து கொள்பவர்கள் இந்தியாவில் நம்
தமிழர்கள் தான் என சத்தியம் செய்து சொல்லாம். ஆனால் நிறைய உரிமைகள் நமக்கு
மறுக்கப்படுகின்றன என்பது தான் நிதர்சனம்.
தினமும் சென்னையில் இருந்து கேரளாவிற்கு நிறைய சூப்பர் பாஸ்ட்
ரயில்கள் இயக்கப்படுகின்றன ஆனால் அதில் பாதி ரயில்கள் கோவைக்குள் வராது.
கோவைக்கு வெளியே உள்ள போத்தனூர் வழியாக சென்று விடுகின்றன. அதே போல் இந்த
சூப்பர் பாஸ்ட் ரயில்கள் தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே நிற்கும்.
ஆனால் கேரளாவில் எல்லா இடங்களிலும் நின்று செல்லும் நம்ம ஊர் டவுன் பஸ்
போல.
இரண்டாம் வகுப்பு பயணத்தைப் பொறுத்தவரை வடநாட்டு பகுதிகளில் ரிசர்வேஷன் பெட்டிகளுக்கும் ரிசர்வேஷன் இல்லாத பொதுப் பெட்டிகளுக்கும் (ஜெனரல் கம்பார்ட்மென்ட்) இடையில் அதிக வித்தியாசம் இருக்காது. ரிசர்வ் செய்தவர்களும் ரயிலில் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்யலாம். அவ்வளவுதான். முதல் வகுப்பு பயணம் இன்னும் அந்த அளவுக்கு மோசமாகி விடவில்லை.
ரயில்வேயில் பணி செய்தவனாகையால் நிறைய ரயில்பயணம் செய்யும் அனுபவமும் அந்த பயணங்களில் வகை வகையான மனிதர்களைப் பார்த்து வேதனைப் பட்ட அனுபவமும் எனக்கு உண்டு. இன்னும் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் என முடித்தார்.
இந்த முறை அவசரமாக குடும்பம் முழுதும் சென்றால் ஏசி கோச்சில் டிக்கெட் கிடைக்காமல், பர்த்தில் டிக்கெட் கிடைத்தால் புக் செய்து ரிட்டன் வந்துள்ளனர். ரயில் ஏறியதில் இருந்து டிடிஆர் என்னும் நபர் வரவே இல்லையாம்.
ஆக இந்த ரயில்வேக்கு தமிழன் மட்டும் தான் இழிச்சவாயன் போல...
Unmai.
ReplyDeleteகேள்விப்பட்டிருக்கிறேன். இளிச்சவாய் என்று நினையாமல் நாம் நேர்மையாக இருப்பதை நினைத்து பெருமைப் படுவோம்.
ReplyDeletetamilnaadu ரயில்வே திட்டங்களிலும் தொடர்ந்து புறக்கணிக்கப் பட்டே வருகிறது ,உதாரணம் .மதுரை போடி ரயில் நிறுத்தப் பட்டு ,தண்டவாளம் கூட பெயர்த்தெடுக்கப்பட்டு பல் வருடங்கள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை !
ReplyDeleteத ம 4
மும்பையில் நைட் ரிசர்வ் கோச்சில் ட்ரையின் ஏறினால் காலை 10 டி.டி.ஆர் வந்தார். காலை 6 முதல் 9 வரை ஒரு ரிசர்வேஷன் கோச்சில் ஏறிய 100க்கும் மேற்பட்ட்டோரை கேக்க ஒரு ஆள் இல்லை. நிதானமாக அதன் பிறகு வந்த டிடி சென்னை வரை ரிசர்வ் செய்து வந்திருந்த தமிழர்களிடம் டிக்கெட் புக் செய்த போது கொடுத்திருந்த அதே ஐடி ஒரிஜினல் இல்லை என்று கோச்சிற்கு 5 பேரிடம் செமையா ஃபைன் போட்டு கொண்டிருந்தார். யாரும் ஒரு வார்த்தை கேக்கலை.நான் இது வரை ஏறி இறங்கிய பயணிகளை செக் செய்யாமல் தமிழர்களிடம் மட்டும் இப்படி வசூலிக்கிறீங்கன்னு கேட்கவும் அந்த கோச்சில் ஃபைன் கட்டிய அனைவரும் கத்தினார்கள். சென்னையில் இறங்கியதும் அங்கே போய் கம்ப்ளெய்ண்ட் செய்துகோங்கன்னு சொல்லிட்டு அடுத்த கோச்சில் வசூலிக்க போய் விட்டார் அந்த தமிழ் டிடிஆர். வடக்கே செகண்ட் க்ளாசில் இப்படி ஏறி ஏறி இறங்குவார்கள். ஏசியில் வர மாட்டார்கள்.
ReplyDeleteWe should be happy to see that we still have some discipline left in us. The atrocities you have mentioned are very common, once you leave the border of our state.
ReplyDeleteரயில் பயணங்களில் அதுவும் குறிப்பாக வட இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் போது கிடைக்கும் அனுபவங்கள் மிக மோசமானவை - குறிப்பாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில். உங்கள் படுக்கையில் மூன்று நான்கு பேர் அமர்ந்து இருப்பார்கள்.... :(
ReplyDeleteவட இந்தியாவில் மட்டும் அல்ல .சமீபத்தில் ராமேஸ்வரம் குடும்பத்தோடு சென்று வந்தோம் .அங்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ள பெட்டியில் நிறைய பேர் இருந்தார்கள் .அதில் டிக்கெட் இல்லாதவர்கள் ஒவ்வொரு இருக்கையாக இது எங்கள் இருக்கை என்று தகராறு செய்தார்கள் .மீறி பேசினால் இந்தியில் பேசுகிறார்கள் .டி டி ஆரிடம் சொன்னால் அப்படி தான் என்று சொல்கிறார் .பணம் செலுத்தி செல்பவன் பயித்தியக்காரன் .
ReplyDelete