.அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து வெடி வெடித்து தொலைக்காட்சி பார்க்காமல் குடும்பத்துடன் கொண்டாடுங்கள் தீபாவளிய...
முன் இரவில் புத்தாடைஎடுத்து,
உணர்ச்சிப்பெருக்கால்
உற்றார் உறவினரிடம் காட்டி,
மனதுக்குள் சொல்லிக்கொள்வோம் ,
நாளை திபாவளி.
கனவிலும் புத்தாடை உடுத்தி,
இஷ்டப்படி பலகாரம் உன்டு,
கண்டபடி பட்டாசு வெடித்து,
கனவெல்லாம் ஒத்திகைபார்த்து,
அந்த நடுநிசியிலம் சொல்லிக்கொள்வோம்,
நாளை தீபாவளி.
அந்த விடியற்காலை வேளையிலே,
எண்ணி எண்ணி இரவை விரட்டி ,
விழித்தஉடன் மனதில் உற்சாகமாய்,
சொல்லிக்கொள்வோம்
இன்று தீபாவளி.
தலைக்கு எண்ணெய் தேய்த்து,
இளம் குளிரில் வெந்நீரில் தலைகுளித்து,
மெல்லிய தவிப்பில் சொல்லிக்கொள்வோம்,
இன்று தீபாவளி.
புத்தாடை அணிந்துகொண்டு,
புதுப்போலிவாய் வந்துநின்று,
கண்ணாடியில் ஒத்திகை பார்த்து
புன்னகையில் சொல்லிக்கொள்வோம்,
இன்று தீபாவளி.
பட்டாசு பல வெடிக்க,
பலகாரம் சில கிடைக்க,
மூக்கு முட்ட கறி கிடைக்க
பரவசத்தில் சொல்லிக்கொள்வோம்,
இன்று தீபாவளி.
வீதியெங்கும் வீடுகளில்,
விதவிதமாய் விளக்கெரிய,
விளையாடாய் சொல்லிக்கொள்வோம்,
இன்று தீபாவளி.
பட்டாசும் தீர்ந்துபோக,
மத்தாப்பும் தீர்ந்துபோக,
பதைபதைப்பில் சொல்லிக்கொள்வோம்,
முடிந்தது தீபாவளி.
தீப ஒளிக்கு முடிவு ஏது
தீப ஒளி போல்
அணைய அணைய பிரகாசித்து
வாழ்வில் இன்ப துன்பங்களிலும்
பிரகாசிப்போம்...
என் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்...
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் :)
ReplyDeleteவாழ்த்திய நல்லிதயத்திற்கு நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் சங்கவி.
ReplyDeleteஎனது தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
ReplyDeleteஎன் இனிய தீபாவளி நல்வாத்துக்கள்
ReplyDeleteதங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....
ReplyDelete